Sunday, July 10, 2011

MAKKAL THOKAI KANAKKEDUPPU

மக்கள் தொகை கணக்கெடுப்பு
-----------------------------------------------------
( முத்து ரத்தினம் )
இந்தியா ஒரு தீபகற்பம் . மூன்று பக்கமும் கடலாலும் ,ஒரு பக்கம் பனி படர்ந்த இமயமலையாலும்

சூழப்பட்ட ,இயற்கையாகவே பாதுகாப்பு அரண் கொண்ட நாடு என்பது அனைவரும் அறிந்த ஒன்று .

இன்றைய நிலவரப்படி , அதாவது 2010 - இந்தியாவின் மக்கள் தொகை 1 .15 பில்லியன் .(1 ,150 ,000 ,௦௦௦000 ௦௦௦)

உலகின் அதிக மக்கள் தொகை உள்ள இரண்டாவது நாடு.

நம் நாடு சுதந்திரம் அடையும் பொழுது, நம் நாட்டின் மக்கள் தொகை வெறும் 350 மில்லியன் தான் .

கடந்த அறுபத்து மூன்று ஆண்டுகளில் மக்கள் தொகை மூன்று மடங்கு உயர்ந்து விட்டது.!

வரும் 2030 -ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 1 .53 பில்லியன் உயரும் என எதி பார்க்கப்படுகிறது.

தற்போது 2011 -ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது .
ஒரு நாட்டின் சரியான கணக்கு விகிதம் எப்படி எடுப்பது ?

வீடு வீடாகச் சென்று , வீட்டில் மொத்தம் எத்தனை பேர் உள்ளார்கள் ? வயது என்ன ?

என்ன வேலை செய்து கொண்டுள்ளார்கள் ? என அலசுவது பழைய முறை.!

அந்த முறையைத் தான் இன்னும் நமது கணக்கெடுப்பு அதிகாரிகள் பின் பற்றி

வருகிறார்கள்.

நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும், தற்போதைய ஓட்டுனர் உரிமம் மாதிரி
"அடையாள அட்டை " வழங்க வேண்டும் .
அந்த அடையாள அட்டையில் பெயர், பிறந்த தேதி , விலாசம் , கடவுச்சீட்டு எண்
(இருந்தால் ) பொறிக்கப்பட்டு , புகைப்படத்துடன் ஒரு அடையாள எண் கொடுத்துவிட வேண்டும்.

அந்த அடையாள அட்டையை எப்பொழுதும் ,ஓட்டுனர் உரிமம் மாதிரி , ஒவ்வொரு
இந்தியரும் கையில் வைத்திருக்க வேண்டும்.
அது எந்த நேரத்திலும் காவல் துறையின் சோதனைக்கு உட்பட வேண்டும்.

மேற்சொன்ன அடையாள அட்டையின் மூலம் சுலபமாக வேறு நாட்டவர்களை
அடையாளம் கண்டு கொள்ளலாம்.

அடையாள அட்டை சோதனைக்கு உட்படும் போது அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள
அடையாள எண்ணை ,கணினியில் டைப் செய்தால் , ஒருவருடைய முழு ஜாதகமும்
திரையில் தெரியும்.

உடனே ,இந்திய அரசு முனைப்பாக செயல்பட்டு , அடையாள அட்டை வழங்கும்
பணியை தொடங்க வேண்டும்.

இன்றைக்கு , வளர்ந்த நாடுகள் இந்த முறையைத் தான் பின்பற்றி வருகிறார்கள்.

ஒவ்வொரு குழந்தை பிறந்தவுடனும் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட
வேண்டும்.

அதே போல் ஒருவர் இறந்தாலோ உடனே மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் (நகராட்சி ,அல்லது பேரூராட்சி )தெரியபடுத்தினால் , கணினியில் அவருடைய அடையாள எண்ணை
நீக்கிவிடலாம் .

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் , அந்நிய தீய சக்திகள் இந்தியாவில் ஊடுருவதை
எளிதில் தடுத்து விடலாம்.

மற்ற நாடுகளிலிருந்து TOURISTUKALAAKAVO , பணி நிமித்தம் காரணமாகவோ இந்தியா
வருவதை தவிர்த்து விட்டு , சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறி , தொழில்
செய்து கொண்டிருக்கும் பாகிஸ்தான், பங்களாதே஦#183் ,மற்றும் நேபால் நாட்டவர்கள் அதிகம்.

குறிப்பாக மேற்கு வங்கத்தில் , கல்கத்தாவில் பங்களாதே஦#183் நாட்டைச் சேர்ந்தவர்கள்
அதிகமாக குடியேறி உள்ளனர்.

கா஦#183்மீர் வழியாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவி வந்து
விடுகின்றனர்.
நேபாளிலிருந்து ,இந்தியாவின் கோரக்பூர் வழியாக இந்தியாவிற்குள் வந்து தங்கி உள்ளனர்.

எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தி , எல்லைசோதனை சாவடிகளை தீவிர
கண்காணிப்பில் வைத்து இருந்தால் , மேற்சொன்ன அடையாள அட்டை முறையும்
நடைமுறைபடுத்திவிட்டால் நூறு விழுக்காடு மக்கள் தொகை கணக்கு நமக்கு
கிடைத்துவிடும்.

இதே மாதிரி , வன இலாகாவினரும் , வன விலங்குகள் எண்ணிக்கையை கணக்கெடுப்பதில் , உதாரணமாக , புலிகளின் எண்ணிக்கையை ,புலியின் காலடி
தடத்தை வைத்து பழைய முறையே பின் பற்றி வருகின்றனர்.

நாடும் , அறிவியலும் வளர்ந்துவிட்ட நிலையில் , நாம் நவீன முறையில் -
ரேடார் (RADAR ) மூலம் விலங்குகள் கணக்கெடுப்பு நடத்த முடியும் .

அரசு நவீன கருவிகளை இறக்குமதி செய்து ,சரியான திட்டங்கள் மூலம் ,சுலபமான முறையில் , மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க ஆவன செய்ய வேண்டும் ,.

------------------------------------------------- Download As PDF

No comments:

Post a Comment