Wednesday, May 2, 2012

தமிழகமும் - இலவசமும்

தமிழகமும் - இலவசமும்

இன்று தமிழகத்தில் உள்ள கட்சிகள் தாங்கள் ஆட்சியில் அமர்வதற்காக, பல இலவசங்களை தருவதாக வாக்களிக்கின்றனர். முதன் முதலில் தமிழகத்தில் இலவசத்தை அறிமுகப்படுத்தியவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்.

இலவச மதிய உணவுத் திட்டத்தை பள்ளிகளில் கொண்டு வந்தார். அவர் அறிமுகப்படுத்திய இலவச மதிய உணவுத் திட்டத்தில், உண்மையிலேயே நல்ல எண்ணம் இருந்தது. அதாவது கல்விக்கு கண் திறந்த காமராஜர், எப்படியாவது அனைவருக்கும் கல்வித் திட்டத்தைக் கொண்டுவர, ஏழை-எளிய மக்களுக்கு அவர்கள் குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுத்தாவது, (சாப்பாட்டுக்காவது) பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குவார்கள் என நினைத்தார். அதில் ஓரளவு வெற்றியும் கண்டார். அடுத்து இந்த மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தி, அடுத்து வெற்றி கண்டவர் எம்ஜிஆர் அவர்கள்.

பொதுவாக மக்கள் இலவசத்திற்கு அதிகமாக மயங்குவார்கள் என்று, அரசியல் கட்சிகள் தற்போது மந்திரங்களாக அறிவிக்கும் இலவசத் திட்டங்கள்.

ஒரு கணக்கை பார்ப்போம்.

ஒரு புடவை எடுத்தால், இன்னொன்று இலவசம் என ஒரு கடைக்காரன் விளம்பரப்படுத்துகிறான் என வைத்துக்கொள்வோம். அங்கே அறியாமை மக்கள் கூட்டம் அலை மோதும். இரண்டு புடவைக்கும் சேர்த்துதான் ஒரு புடவையில் விலையை வைத்து விளம்பரம் செய்கிறான் என அறிவாளி சிந்தித்தானானால், அந்த கடைக்கு எவனும் செல்லமாட்டான்.

இன்னொரு விதமாகவும் சிந்திக்கவேண்டும். இப்படி ஒரு புடவைக்கான உண்மையான விலையையே வைத்து, ஒரு புடவைக்கு இன்னொரு புடவை இலவசம் என்று கொடுத்தால், அந்த கடைக்காரன் ஒரு வாரத்தில் கடையை மூடிவிட்டு போண்டியாகிவிடுவான். இது உண்மை.

சரி, இப்போது அரசியல்வாதிகளின் இலவச திட்டங்களுக்கு வருவோம்.

அது தருகிறோம், இது தருகிறோம் என மக்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறும் அரசியல்வாதிகளுக்கு பொருட்கள் வாங்க எங்கிருந்து பணம் வருகிறது? மக்கள் வரி பணத்தை மக்களுக்கே இலவசமாக தந்து யாருடைய பணத்தில் இவர்கள் குளிர்காய நினைக்கிறார்கள்?

ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கடன் உள்ளது என இவர்களுக்கு தெரியுமா? இந்தியாவுக்கு அயல் நாட்டிடம் எவ்வளவு கடன் உள்ளது என்றுதான் தெரியுமா? யாருடைய பணம் சுவிஸ் வங்கிகளில் கோடி கோடியாகக் கொட்டிக் கிடக்கிறது?

சுவிஸ் வங்கிகளில் உள்ள அரசியல்வாதிகளின் பணத்தை எடுத்தாலே, இந்தியாவின் கடனை அடைத்துவிடலாமே.! அதற்கு ஏதேனும் முயற்சி உண்டா..?! எந்த குடிமகன் கேட்டான்..?! எனக்கு இலவசம் வேண்டும் என்று..!

தன்மானத்தை அடகுவைத்து இலவசங்களை வாங்க தன்மானத் தமிழன் ஒத்துக் கொள்வானா?

கடைசியாக அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்...!

மீனை தராதீர்கள். மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள்.

இலவச படிப்பை தாருங்கள். வேலை வாய்ப்புத் திட்டங்களை உருவாக்குங்கள்.
Download As PDF

சேது சமுத்திர கால்வாய்த் திட்டம

சேது சமுத்திர கால்வாய்த் திட்டம

"சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்"
              
இது பாரதியார் கண்ட கனவு மட்டுமல்ல; நூற்று ஐம்பது ஆண்டு கால தமிழர்களின் கனவாகும்.

இந்தியாவிலிருந்து பாக் ஜலசந்தி வழியாக இலங்கைக்கு கால்வாய்  (canal) அமைக்கும் திட்டத்திற்கு முதன் முதலாய் அடிக்கல் நாட்டியவர் பிரிட்டிஷ் கமாண்டர் A D TAYLOR என்பவர். ஆண்டு 1860.

அதற்குப் பிறகு திரு ஜவகர்லால் நேரு அமைச்சரவை இத்திட்டத்திற்கு 1955-ம் ஆண்டு திரு ராமசாமி முதலியார் தலைமயில் உயிர் கொடுத்து, திட்ட அறிக்கைக்கு கமிட்டி அமைத்தது.

அடுத்தடுத்து,

1961-ம் ஆண்டு தூத்துக்குடியிலிருந்து மண்டபம் வழியாக, பாக்- ஜலசந்தி மூலம் சேது சமுத்திர கால்வாய் திட்டம் தீட்டப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டது.

1968-ம் ஆண்டு தூத்துக்குடியிலிருந்து பாம்பன் வழியாக, பாக்-ஜலசந்தி மூலம் அடுத்த திட்டம் தீட்டப்பட்டு அதுவும் கைவிடப்பட்டது.

1996-ம் ஆண்டு தூத்துகுடியிலிருந்து ராமேஸ்வரம் வழியாக, பாக்-ஜலசந்தி மூலம் திட்டம் தீட்டப்பட்டு கைவிடப்பட்டது.

பிறகு, தனுஷ்கோடி வழியாகவும் ஒரு திட்டம் உருவானது.

முடிவாக,

தற்போதைய, தூத்துகுடியிலிருந்து மன்னார் வளைகுடா, பாக்-ஜலசந்தி வழியாக சேது சமுத்திர கால்வாய் அமைக்கும் திட்டம், செயலாக்கத்திற்கு முடிவானது.

இத்திட்டத்தின் பலன்கள்:

இத்திட்டத்தின் மூலம் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் நேரிடையாக பலன் அடையும்.

வருடந்தோறும், இத்திட்டத்தின் மூலம் மூவாயிரம் கப்பல்கள் சேது சமுத்திர கால்வாய் மூலம் செல்லும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதிகள் இணையும்.

தமிழ் நாட்டின் எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், தொண்டி, கொளச்சல், கன்யாகுமரி போன்ற பதின்மூன்று சிறிய கப்பல் தளங்கள் பயன் பெறும்.

வணிகக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிதான் இந்தியாவிற்குள்  வந்து கொண்டு உள்ளன. சேது சமுத்திர கால்வாய் திட்டத்தின்படி, சுமார் நானூறு கிலோ - மீட்டர் அளவு - இலங்கையைச் சுற்றி வருவது குறையும்.  நேரமும் கணிசமாகக் குறையும்.

இத்திட்டத்தின் பாதகங்கள்:

சேது சமுத்திர நவீன திட்டத்தின்படி, கால்வாய் வழியாக செல்லும்  கப்பல்கள், அதிக பட்சமாக முப்பதாயிரம் டன்கள் சரக்குகள் வரை தான் ஏற்றிச் செல்ல முடியும்.

ஆனால், தற்போதைய நவீன கப்பல்களின் டாங்குகள், மற்றும் சரக்குகள் எடை அறுபதாயிரம் (60000 ) டன்னிலிருந்து ஒரு லட்ச்சத்து  ஐம்பதாயிரம் டன் வரை ஏற்றிச் செல்கின்றன.

இத்தகைய நவீன கப்பல்கள் சேது கால்வாய் மூலம் பயணம் செய்ய  வழியில்லை.

உலகமறிந்த சுனாமி நிபுணர் டாட் - மூர்த்தி இந்திய அரசுக்கு முக்கியச் செய்தி ஒன்றை விடுத்துள்ளார்.

அதாவது,

"தற்போதைய சேது சமுத்திர வழி, தெற்கு கேரளாவை, சுனாமி தாக்கும் அபாயம் உள்ளது" - என எச்சரித்துள்ளார்.

தனுஷ்கோடி வழியாக சேது சமுத்திர கால்வாய் அமைப்பது நல்லது எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன் பிடித் தொழில் பெருமளவு பாதிக்கும் எனவும், கிட்டத்தட்ட வருடத்திற்கு 150 கோடி (1.5 பில்லியன்) நஷ்டம் வரும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விலை மதிக்க முடியாத "தோரியம்" - படிவங்கள் பாதிக்க வாய்ப்புள்ளது.

ஏனென்றால், நாட்டின் அணு சக்தி மின் - நிலையங்களுக்கான "தோரியம்"-நுக்லியர் எரி பொருள் - நமக்கு கிடைக்காமல் போய் விடும்.

மொத்தத்தில், முன் வைத்த காலை பின் வைக்காமல் செலவு கூடினாலும், பாரதி கண்ட கனவை நினைவாக்க, அரசு ஆவன செய்ய வேண்டும்.

அதுவே, தமிழர்களின் ஒட்டு மொத்த விருப்பம். 
Download As PDF

"ஒளி' - மயமான தமிழகம் "

'ஒளி' - மயமான தமிழகம்

தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை ஏற்படக் காரணம் என்ன?  இருண்ட தமிழகம் என எதிர்கட்சிகள் குற்றம் கூறுவது எதனால்?

நம்மிடம் போதுமான மின் உற்பத்தி இல்லையா? தேவைக்கு மீறி மின்சாரத்தை நாம் பயன்படுத்துகிறோமா?

இவற்றையெல்லாம் அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

முதலில் தமிழ்நாடு மின் வாரியத்தின்கீழ் உள்ள மின் உற்பத்தி நிலையங்களைப்  பார்ப்போம்.

1) Gas Turbine Power Stations

தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் மேற்கூறிய கேஸ் டர்பைன் மூலம் மின் உற்பத்தி செய்யும் இடங்கள் உள்ளன.

a) பேசின் பிரிட்ஜ் (BBGTPS)
 இதன் உற்பத்தி - 120 MW (மெகாவாட்)

b) குத்தாலம் (GTPP)

இதன் உற்பத்தி - 100 MW

c) வலத்தூர் (Ramnad) (VGTPS)
இதன் உற்பத்தி - 95 MW

d) திருமாகோட்டை (kovilkalappal)
 இதன் உற்பத்தி - 107.88 MW


2) THERMAL - POWER STATION
தமிழ்நாட்டில் நான்கு இடடிங்களில் அனல்மின் நிலையங்கள் உள்ளன. அவை எங்கு, எவ்வளவு மின் உற்பத்தி என பார்ப்போம்.

a) வட சென்னை - NCTPS - 1800mw

b)  எண்ணுர் - ETPS . 1000 mw

c)   மேட்டூர் - MTPS -  800 mw

d)   தூத்துக்குடி - TTPS - 1050 mw



3)  HYDRAO  POWER STATION

தமிழ்நாட்டில் உள்ள ஹைட்ரோ மின் உற்பத்தி நிலையங்கள் மொத்தம் 27 இடங்களில் உள்ளன.

a) சாத்தனூர்  - 7.5 mw

b) மேட்டூர் டர்னல் - 200 mw

c)  மேட்டூர் டேம் - 500 mw

d)  கீழ் மேட்டூர் - 120 mw

e)  பவானி கட்டளை - 30 mw

f)  மறவாகண்டி -  0.75 mw

g) கீழ் பவானி    -  16 mw

h)  மோயார்- 36mw

பைகாரா - 59.2 mw

குந்தா (i+ii+iii)- 60+175+

ஆழியார்  - 60 mw

பூனாச்சி  - 2 mw

காடம்பாறை - 400 mw

வைகை - 6 mw

பைகாரா - 2 mw

முகுர்த்தி - 700 mw

திருமூர்த்தி - 1.95 mw

சர்க்கார்பதி  - 30 mw

சோலையார் - 70 mw

சோலையார்-II  - 25 mw

பெரியார் - 140 mw

சுருளியார்  - 35 mw

சேர்வலார் - 20 mw

பாபநாசம்  - 32 mw

கோதையார் - 60 mw

கோதையார்-II   -   40 mw

பெருஞ்சேரை - 1.30 mw

மேற்கூறிய மின் நிலையங்களில் HYDRO POWER STATION-களில் நீர் இருந்தால்தான் மின் உற்பத்தி ஆக வழி உண்டு.

THERMAL POWER STATION-களில் மூலப் பொருளான COAL-நிலக்கரி இருந்தால்தான் மின் உற்பத்தி ஆகும்.

அது மட்டுமல்லாமல் கரியினால் ஏற்படும் கரியமிலவாயு எனப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு (CO2) - சுற்றுப்புறச் சூழலை மாசு படுத்தும்.

எனவே, NON - CONVENTIONAL  ENERGY எனப்படும் மரபு-சாரா எரிசக்தி மூலம், பின்வரும் சக்திகள் மூலம் மின் உற்பத்தி செய்வது மிக்க நல்லது.

அடுத்து NON-CONVENTIONAL ENERGY SOURCE (NCES) எனும் மரபு சாரா மின் உற்பத்தியைப் பற்றி பார்க்கலாம்.I)  Wind Energy - காற்றாலை

காற்றாலை மின் உற்பத்தி மூலம் 5446.165 mw மின் உற்பத்தி உண்டாகிறது. நம் தமிழ்நாட்டில்.
இது இந்தியாவின் மொத்த காற்றாலை மின் உற்பத்தியில் 45.35% விழுக்காடு ஆகும்.

II) Bio - Mass Energy

இதனை வகையாகப் பிரித்து, மின் உற்பத்தி உண்டாக்கலாம். அவை,

i) Bag asse based congeneration plants

ii) Bio - mass based cogeneration plants

iii) Bio - mass gasifiction based power plants

iv) Municipal solid waste & vegetable based power plant.

Bio-Mass Power Plant மூலம் 2010 - நவம்பர் நிலவரப்படி மொத்தம் 139.05 mw மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

co-generation power plant மூலம்  2010 - நவம்பர் நிலவரப்படி மொத்தம் 609.9 mw மின் உற்பத்தி செய்யப்படுகிறது.


iii) Solar Energy


சோலார் பவர் எனப்படும் இயற்கையிலேயே நமக்கு கிடைம் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் முறை சோலார் எனர்ஜி ஆகும்.

சோலார் பவர் மூலம் மின் உற்பத்தி செய்வதில் மற்ற மின் உற்பத்தி திட்டங்களை விட சாலச் சிறந்தது.

ஏனெனில் மற்ற Bio-Mass, co-generation, Thermal Power Plant மூலம் மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

ஆனால் சோலார் மின் உற்பத்தியில் சுற்றுச்சூழல் (மாசு) பாதிக்கப்படாமல், பசுமையை காக்கலாம்.

அரசு, தனியார் சோலார் மின் உற்பத்தியாளர்களுக்கு MNRE (Ministry of New and Renewable Energy) ஊக்கத் தொகை மற்றும் உற்பத்தியாகும் மின் சக்திக்கு ரூ.10, ஒரு யூனிட்டுக்கு என அறிவித்துள்ளது.

மேலும், மற்ற மின் உற்பத்திகளில் இல்லாத மிக முக்கியமான உகபோயகமும் சோலார் மின் உற்பத்தியில் உள்ளது.

என்னவெனில், மற்ற மின் திட்டங்களில் மின்சாரத்தை சேமிக்க முடியாது.

ஆனால் சோலார் எனர்ஜி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை Solar Photovoltalc (SPV) செல்கள் மூலம் சேமித்து நேரடியாக DC எனப்படும் Direct Current-க்கு மாற்றலாம்.

சோலார் போட்டோ  வோல்டாக் செல் சேமித்து, வீட்டு மின் உபயோகம், தெரு விளக்குகள், தண்ணீர் சுத்திகரிப்பு, மோட்டார் இயக்கம், ரயில்வே சிக்னல் போன்றவற்றிற்கு மின்சாரத்தை பயன்படுத்தலாம்.

இதுவரை தமிழ்நாட்டின் மின் உற்பத்தியைப் பற்றி பார்த்தோம். அடுத்து, மேற்கண்ட அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் சரியான முறையில் இயங்குகிறதா என பார்க்க வேண்டும்.

நூறு சதவீதம் மேற்சொன்ன அனைத்து நிலையங்களும் இயங்கி, தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு வருமா என ஆராய வேண்டும்.

மின் உற்பத்தி சாதனங்கள் பழுதுபட்டிருந்தால் உடன் அரசு தலையிட்டு பராமரிப்பு செய்யவேண்டும்.

மேலும் அரசு புதிய பல மின் உற்பத்தித் திட்டங்கள் மேற்கொண்டிருந்தாலும், சோலார் பவர் மற்றும் காற்றாலை மின் உற்பத்திகளுக்கு அதிக ஊக்கம் தரவேண்டும்.

தற்போது உள்ள சூழ்நிலையில் மாசு கட்டுப்பாடு மிக முக்கியமான ஒன்று. அதற்கு மேற்சொன்ன மின் உற்பத்தி நிலையங்கள் அதிகம் வரவேண்டும்.

மிகப்பெரிய, இந்தியாவின் தொழிற்சாலைகள், தங்கள் பயன்பாட்டிற்கென, சொந்தமாக சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிறுவிக் கொண்டால், மின்சாரக் கட்டணம் (ஆலை உற்பத்திக்கு கணிசமாகக் குறையும். தொழிற்சாலைகளும் மின் வெட்டிலிருந்து தங்களை காத்துக் கொள்ளலாம்.

மேலும் மின் உற்பத்திகாக்கான மூலப் பொருள்களான சூரிய ஒளி மற்றும் காற்று ஆகியவை இலவசமாக கிடைக்கிறது.

தமிழ்நாட்டின் மின் தேவையை Hydro மூலம் 21 சதவீதமும், Thermal மூலம் 29 சதவீதமும். Gas மூலம் 5 சதவீதமும், மத்திய அரசிடமிருந்து 28 சதவீதமும், ipp மூலம் 12 சதவீதமும், மற்ற இதர மின் உற்பத்தி மூலமும் 5 சதவீதமும் - பூர்த்தி செய்து கொள்கிறோம்.

இவற்றில் காற்றாலை உற்பத்தியில் தமிழகம் (இந்தியாவில்) முன்னணியில் உள்ளது.

"மின் சிக்கனம், தேவை இக்கணம்" - போன்ற வாசகங்கள் அரசிடமிருந்து மக்களுக்குச் சென்றாலும், இன்னும் அதிக பொறுப்புணர்ச்சி வந்தால்தான் மின்சாரத்தை சேமிக்க முடியும்.

மின்சாரத்தை சேமித்து, நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு செலவழித்தால்தான், நாடு வளம் பெறும். விலைவாசியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.

ஆடம்பர விழாக்கள், தேவையற்ற பொதுக் கூட்டங்கள் இவற்றிற்கு ஆகும் மின் தேவையை குறைத்துக் கொள்ளவேண்டும்.

முக்கியமாக மின் திருட்டை அறவே ஒழிக்கவேண்டும். இலவச மின்சாரம் விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.

தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் உள்ள மின் உற்பத்தி நிலையங்களைப் பற்றி பார்த்தோம்.

தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசின் கீழ் இயங்கும் (NUCLEAR POWER PLANT - ATOMIC POWER PLANT) அணுமின் நிலையங்களைப் பற்றி பார்க்கலாம்.

1) MADRAS NUCLEAR POWER PLANT - கல்பாக்கம்
(2x220MW) இதன் மூலம் 440 MW மின் உற்பத்திச் செய்யப்படுகிறது.

2) மேலும், கூடங்குளம் NUCLEAR POWER PLANT - தற்போது நிறுவப்பட்டு, முடியும் தருவாயில் உள்ளது. இதன் மூலம் 2x1000mw உற்பத்தி செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Download As PDF

Tuesday, May 1, 2012

'நிலத்தடி நீர் - ஒரு பார்வை'

உலகின் தண்ணீர் தேவையை (நிலத்தடி நீரானது) இருபது சதவீதம் தீர்த்து வைக்கிறது, நிலத்தடி நீர்.  உலகின் நிலத்தடி நீர் எந்த அளவு உள்ளதோ அதே அளவு கிட்டத்தட்ட சுத்தமான நீர் பனிப்பாறைகளிலும், ஐஸ் கட்டிகளாகவும் உள்ளது. வடதுருவம் மற்றும் தென்துருவம் இதில் அடக்கம்.

நிலத்தடி நீரை பெரும்பாலும் நாம் விவசாயத்திற்கு பயன்படுத்துகிறோம். ஆனால் பல இடங்களில் குடிநீராகவும் பயன்படுத்துவது (சுத்தப்படுத்தாமல்) அபாயகாரமானது.

ஏனெனில் அதில் 25 சதவீதம் ஆர்செனிக் என்ற நச்சுப் பொருள் கலந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நகரம், அமெரிக்காவில் உள்ள LOVE CANEL (லவ் கேனல்) என்ற இடம்.

1978-ல், அந்நகரத்தில் வாழும் மக்களுக்கு, அவர்களுக்கு குடிநீரால் (நிலத்தடி நீர்) புற்றுநோய் மற்றும் பிறப்பில் ஊனம் கண்டறியப்பட்டுள்ளது.

நிலத்தடி நீரை கண்டிப்பாக சுத்தப்படுத்தாமல் குடிநீராக பயன்படுத்துவது முறையல்ல.

'சிறு துளி பெருவெள்ளம்' - நாம் அனைவரும் அறிந்த பழமொழி. அதற்கேற்ப நாம் அனைவரும் கூட்டு முயற்சியுடன் நீரை சிக்கனமாக செலவழித்தால் ஒழிய, தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

சமீபத்தில் கோவையில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அன்பர் ஒருவர் பொது மேடையில், ஐந்து லிட்டர் நீரில் குளித்து சாதனைபுரிந்து, நீரின் தேவையை அனைவரம் புரிந்து கொள்ள வலியுறுத்தினார். அவர் தொழில் ஆடு மேய்ப்பது!

அரசாங்கமும் மக்களுக்கு இதுபோன்ற தண்ணீரின் அத்தியாவசியத்தை பற்றி கொண்டு செல்ல வேண்டும்.

தண்ணீர் நமக்கு போதுமான அளவு இருக்கிறது. ஆனால் அதை பயன்படுத்தும் முறைதான் நமக்குத் தெரிவதில்லை.

ஐ.நா-வின் கூற்றுப்படி ஒருவருக்கு, ஒரு நாளைக்கு ஐம்பது லிட்டர் நீர் தேவைப்படுகிறது. அதாவது குடிக்க, சமைக்க, துணி துவைக்க, குளிக்க.  நீர் தேவையை அதிகப்படுத்த, நாம் குறைக்க வேண்டியது மக்கள் தொகை பெருக்கத்தை!

இவ்விஷயத்தில் நம் அரசாங்கம் பெருமளவு அக்கறை எடுத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, வருமுன் காப்போம் என்ற திட்டத்தின்படி, மழை வருமுன் ஏரி, குளங்கள் ஆகியவற்றை தூர்வாரி தயார் நிலையில் வைத்திருந்தால், வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தி நீரை சேமித்து, சுத்தப்படுத்தி உபயோகிக்கலாம்.

ஆனால் நம் தமிழ்நாட்டில் ஏரி-குளங்கள் அரசியல்வாதிகளின் தலையீட்டால் தற்போது வீடு மற்றும் தொழிற்சாலைகள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.

தற்போது ஏரி-குளங்களை பார்க்க முடியவில்லை. மழைக் காலங்களில், அவசரகால நடவடிக்கை மற்றும் போர்க்கால நடவடிக்கை என வந்தபின் கையை பிசைந்து, வேடிக்கை பார்ப்பதைவிட முன்னெச்சரிக்கையாக 'வருமுன் காப்போம்' திட்டத்தை அரசு கவனத்தில் கொண்டால் நல்லது.

நீரை சுத்தப்படுத்தி, உபயோகிக்கும் முறை பல இருந்தாலும் முக்கியமான சிலவற்றைப் பார்ப்போம்.

பெரும்பான்மையான நீர் தேவைப்படும் பட்சத்தில் இம்முறை மிக முக்கியமான ஒன்று. இந்தியாவும், சீனாவும் தற்போது இம்முறைக்கு அதிக கவனம் கொண்டுள்ளது வரவேற்கவேண்டியது.

நாம் நீருக்காக (Raw Water) காசு செலவழிக்க வேண்டியது இல்லை. ஆனால் இம்முறைக்கு முதலீடு அதிகம். (Initial Capital)

நதிநீர் இணைப்புக்கு ஆகும் செலவைவிட இது ஒன்றும் அதிகமல்ல. நம் தமிழ்நாட்டில் தண்ணியினால் (Tasmac) வரும் பணத்தை குடி தண்ணீருக்காக உபயோகப்படுத்தலாம். பல இலவச திட்டங்களை நிறுத்திவிட்டு!

விவசாயிகளும் பெருமகிழ்ச்சி அடைவர்.

உலகிலேயே மிகப்பெரிய கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் 'JA BELL ALI DESALINATION PLANT' - ஐக்கிய அரபு நாட்டில் உள்ளது.

'INTERNATIONAL DESALINATION ASSOCIATION' - கூற்றுப்படி,  2008 வரை உலகில் 13080 - குடிநீர் சுத்தமாக்கும் நிலையங்கள் உள்ளது.

இதன் மூலம் ஒரு நாளைக்கு 12 மில்லியன் காலன் தண்ணீர் சுத்தப்படுத்தப்படுகிறது.

கடல் நீரை சுத்தப்படுத்தும் முறை வளர்ந்த் நாடுகளான குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் மற்றும் சவூதி அரேபியாவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுழற்சி முறை:

நாம் உகயோகித்த நீரை வீணாக்காமல் சுழற்சி முறையில் (Water Treatment) நீரை சுத்தமாக்கி குடிநீராகவும், விவசாய பயன்பாட்டிற்காகவும் செலவழிக்கலாம்.

புதிய அறிவியல் நுட்பத்துடன் கூடிய தண்ணீரை சிக்கனமாக உபயோகிக்கும் முறைகளைப் பார்ப்போம்.

(1) விவசாயத்திற்கு 'Drip Irrigation' - எனப்படும் சொட்டு நீர் பாசன முறையைப் பயன்படுத்தினால் பெருமளவு நீரை சேமிக்கலாம்.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெரும்பான்மையான விவசாயிகள் சொட்டு நீர் பாசன முறைக்கு மாறி இருப்பது வரவேற்கத்தக்கது.

மேலும் இம்முறையில் Low-Pressure Sprinklers எனப்படும் குறைவான  அழுத்தத்துடன் கூடிய தண்ணீர் ஸ்பிரே செய்யும் முறை குறிப்பிடத்தக்கது.

இனி அசுத்தமான குடிநீரால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்.

உலக வங்கி, உலகில் 88% நோய்கள் அசுத்தமான குடிநீரால்தான் உண்டாகிறது என வலியுறுத்துகிறது.

அதாவது,

(1) நான்கு பில்லியன் மக்கள் டயாரியா - என்ற நோயால் பாதிக்கப்பட்டு, ஆறு மில்லியன் குழந்தைகள் இறந்துள்ளனர்.

(2) 300 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

(3) 200 மில்லியன் மக்கள் 'SCHISTOSMIASIS' - என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள் தான் அதிகம் என்பது வேதனையான செய்தி.

யுனஸ்கோவின் எச்சரிக்கைப்படி,

வருடத்திற்கு 500 மில்லியன் டன் உலோகங்கள், சால்வன்ட். toxie sludge - தண்ணீருடன் கலக்கிறது. 70 சதவீத தொழிற்சாலைக் கழிவுகள் நதிகளிலும், ஏரிகளிலும் கலந்து நீரை அசுத்தப்படுத்துகின்றன.

அரசாங்கம் மிக முனைப்புடன் செயல்பட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
Earth Day Network-ன் விவரப்படி, ஆர்சனிக் (நச்சுப் பொருள்) கலந்த நிலத்தடி நீர் அர்ஜைன்டைனா, பங்களாதேஷ், சிலி, சீனா, இந்தியா, மெக்சிகோ மற்றும் தாய்லாந்து நாட்டில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 50 சதவீதம் நிலத்தடி நீரில் பெஸ்டிசைட்ஸ் நச்சுப் பொருள் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அடுத்து ஐம்பது ஆண்டுகளில் உலக மக்கள் தொகை மேலும் 40 சதவீதத்திலிருந்து 50%வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு, தொழிற்சாலை மற்றும் மற்ற துறைகளின் வளர்ச்சி என கணக்கெடுத்தால், நீர் தட்டுப்பாடு - தேவை அபாயகரமானதாக இருக்கும்.

நிலத்தடி நீர் பூமிக்கு வெளியே வந்து மட்டும் நமக்கு நன்மை செய்வது மட்டுமல்ல. பூமிக்கு அடியிலும் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்துகிறது.

சில இடங்களில் 50 டிகிரி பாரன்ஹீட் /10 டிகிரி வரை வெப்பம் உள்ள நிலையில் நிலத்தடி நீர் உள்ளது.

நிலத்தடி நீர் ஒரு இடத்தில் நிலையாக இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாறுவதும் உண்டு.

அதே நேரத்தில் சீதோஷ்ண நிலை மற்றும் பருவகாலம் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு நிலத்தின் மட்டத்திலிருந்து கீழே செல்வதும் உண்டு.

தண்ணீரை சேமிப்போம்..! வளமாக வாழ்வோம்..!
Download As PDF