சேது சமுத்திர கால்வாய்த் திட்டம
|
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்"
இது பாரதியார் கண்ட கனவு மட்டுமல்ல; நூற்று ஐம்பது ஆண்டு கால தமிழர்களின் கனவாகும்.
இந்தியாவிலிருந்து பாக் ஜலசந்தி வழியாக இலங்கைக்கு கால்வாய் (canal) அமைக்கும் திட்டத்திற்கு முதன் முதலாய் அடிக்கல் நாட்டியவர் பிரிட்டிஷ் கமாண்டர் A D TAYLOR என்பவர். ஆண்டு 1860.
அதற்குப் பிறகு திரு ஜவகர்லால் நேரு அமைச்சரவை இத்திட்டத்திற்கு 1955-ம் ஆண்டு திரு ராமசாமி முதலியார் தலைமயில் உயிர் கொடுத்து, திட்ட அறிக்கைக்கு கமிட்டி அமைத்தது.
அடுத்தடுத்து,
1961-ம் ஆண்டு தூத்துக்குடியிலிருந்து மண்டபம் வழியாக, பாக்- ஜலசந்தி மூலம் சேது சமுத்திர கால்வாய் திட்டம் தீட்டப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டது.
1968-ம் ஆண்டு தூத்துக்குடியிலிருந்து பாம்பன் வழியாக, பாக்-ஜலசந்தி மூலம் அடுத்த திட்டம் தீட்டப்பட்டு அதுவும் கைவிடப்பட்டது.
1996-ம் ஆண்டு தூத்துகுடியிலிருந்து ராமேஸ்வரம் வழியாக, பாக்-ஜலசந்தி மூலம் திட்டம் தீட்டப்பட்டு கைவிடப்பட்டது.
பிறகு, தனுஷ்கோடி வழியாகவும் ஒரு திட்டம் உருவானது.
முடிவாக,
தற்போதைய, தூத்துகுடியிலிருந்து மன்னார் வளைகுடா, பாக்-ஜலசந்தி வழியாக சேது சமுத்திர கால்வாய் அமைக்கும் திட்டம், செயலாக்கத்திற்கு முடிவானது.
இத்திட்டத்தின் பலன்கள்:
இத்திட்டத்தின் மூலம் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் நேரிடையாக பலன் அடையும்.
வருடந்தோறும், இத்திட்டத்தின் மூலம் மூவாயிரம் கப்பல்கள் சேது சமுத்திர கால்வாய் மூலம் செல்லும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதிகள் இணையும்.
தமிழ் நாட்டின் எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், தொண்டி, கொளச்சல், கன்யாகுமரி போன்ற பதின்மூன்று சிறிய கப்பல் தளங்கள் பயன் பெறும்.
வணிகக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிதான் இந்தியாவிற்குள் வந்து கொண்டு உள்ளன. சேது சமுத்திர கால்வாய் திட்டத்தின்படி, சுமார் நானூறு கிலோ - மீட்டர் அளவு - இலங்கையைச் சுற்றி வருவது குறையும். நேரமும் கணிசமாகக் குறையும்.
இத்திட்டத்தின் பாதகங்கள்:
சேது சமுத்திர நவீன திட்டத்தின்படி, கால்வாய் வழியாக செல்லும் கப்பல்கள், அதிக பட்சமாக முப்பதாயிரம் டன்கள் சரக்குகள் வரை தான் ஏற்றிச் செல்ல முடியும்.
ஆனால், தற்போதைய நவீன கப்பல்களின் டாங்குகள், மற்றும் சரக்குகள் எடை அறுபதாயிரம் (60000 ) டன்னிலிருந்து ஒரு லட்ச்சத்து ஐம்பதாயிரம் டன் வரை ஏற்றிச் செல்கின்றன.
இத்தகைய நவீன கப்பல்கள் சேது கால்வாய் மூலம் பயணம் செய்ய வழியில்லை.
உலகமறிந்த சுனாமி நிபுணர் டாட் - மூர்த்தி இந்திய அரசுக்கு முக்கியச் செய்தி ஒன்றை விடுத்துள்ளார்.
அதாவது,
"தற்போதைய சேது சமுத்திர வழி, தெற்கு கேரளாவை, சுனாமி தாக்கும் அபாயம் உள்ளது" - என எச்சரித்துள்ளார்.
தனுஷ்கோடி வழியாக சேது சமுத்திர கால்வாய் அமைப்பது நல்லது எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன் பிடித் தொழில் பெருமளவு பாதிக்கும் எனவும், கிட்டத்தட்ட வருடத்திற்கு 150 கோடி (1.5 பில்லியன்) நஷ்டம் வரும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விலை மதிக்க முடியாத "தோரியம்" - படிவங்கள் பாதிக்க வாய்ப்புள்ளது.
ஏனென்றால், நாட்டின் அணு சக்தி மின் - நிலையங்களுக்கான "தோரியம்"-நுக்லியர் எரி பொருள் - நமக்கு கிடைக்காமல் போய் விடும்.
மொத்தத்தில், முன் வைத்த காலை பின் வைக்காமல் செலவு கூடினாலும், பாரதி கண்ட கனவை நினைவாக்க, அரசு ஆவன செய்ய வேண்டும்.
அதுவே, தமிழர்களின் ஒட்டு மொத்த விருப்பம்.
No comments:
Post a Comment