Sunday, December 18, 2011

பெரியாறு அணை வரலாறு

பெரியாறுஅணை வரலாறு*


பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி, மேற்கு நோக்கி கேரளாவில்
பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இது தமிழக-கேரள எல்லையில்
அமைந்துள்ளது. இது கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும் அணை தமிழகத்திற்கும் உரியது.
தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையை பராமரித்து வருகிறது.

மதுரை நாடு என்பது மதுரை மாவட்டம், திருச்சி மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம்,
நெல்லை மாவட்டங்களும், தென்திருவாங்கூர் பகுதியும் அடங்கும். 1529 முதல் 1564
வரை விஸ்வநாத நாயக்கர் ஆட்சி செய்தார்.

1572 வரை முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கரும், 1595 வரை வீரப்ப நாயக்கரும் ஆட்சி
செய்தனர். 1601 வரை இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கரும், 1623 வரை முத்துவீரப்ப
நாயக்கரும், 1659 வரை திருமலை நாயக்கரும் ஆட்சி செய்தனர். திருமலை நாயக்கர்
முதல் இராணி மங்கம்மாள் ஆட்சி வரை ஒவ்வொரு காலகட்டத்தில் திருவாங்கூர்
ராஜாக்கள் வரி செலுத்த மறுத்தனர்.

பின் போரில் தோல்வியுற்று வரி செலுத்தினர்.1790 மார்ச் 6ல் மதுரை மாவட்டம்
உதயமானது. ஏப்.5ல் முதல் கலெக்டராக ஏ. மிக்லட் நியமிக்கப்பட்டார். 1798ல்
இராமநாதபுரம் மன்னர் சேதுபதி, முல்லை, பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி
தண்ணீர் முழுவதையும் மதுரை, இராமநாதபுரம் பகுதிக்கு கொண்டு வர திட்டமிட்டார்.

இதற்காக முத்து இருளப்பபிள்ளை தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மேற்கு
தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்த குழு தங்கி காடுகளை அழித்து, அணை கட்டும்
இடத்தை தேர்வு செய்து மதிப்பீடு தயார் செய்தது. நிதி வசதியின்றி திட்டத்தை
நிறைவேற்ற முடியவில்லை என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

1807ல் மதுரை கலெக்டர் *ஜார்ஸ்பேரிஸ், மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்று
பெரியாறு அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்ய மாவட்ட
பொறியாளர் ஜேம்ஸ் கார்டுவெல்லுக்கு உத்தரவிட்டார்.

ஆனால் 1808ல் நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என கார்டுவெல் அறிக்கை தந்தார்.
1837ல் கர்னல் பேபர் சின்னமுல்லையாறு தண்ணீரை மண் அணை மூலம் திருப்பும்
பணியில் ஈடுபட்ட போது, வேலையாட்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாலும், கூலி அதிகம்
கேட்டதாலும் பணி நடக்கவில்லை என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 1867ல் மேஜர்
ரைவ்ஸ் என்பவர் தண்ணீரை கிழக்கே திருப்புவதுதான் முக்கிய நோக்கம் என்று 17.50
லட்சம் ரூபாய் மதிப்பீட்டாலான அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.


மேற்குத் தொடர்ச்சி
மலையின் காடுகளில் உருவாகி அரபிக்கடலில் சென்று வீணாகக் கலந்து கொண்டிருந்த
பெரியாறு நீரைப் பயன்படுத்த அன்றைய ஆங்கிலேய அரசு முடிவு செய்து
அந்தப்பகுதியில் அணை ஒன்றைக் கட்டத் தீர்மானித்தது. பெரியாற்றின் குறுக்கே மண்
அணை அமைத்து அந்த ஆற்றின் நீரைக் கிழக்குப் பக்கமாகத் திருப்புவதற்கான வரைவுத்
திட்டம் ஒன்றை சுமித் என்கிற ஆங்கிலேயர் தயார் செய்தார். இந்தத் திட்டத்திற்கு
தலைமைப் பொறியாளராக இருந்த வாக்கர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால்
இந்த அணைத் திட்டம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் 1876 ஆம்
ஆண்டில் சென்னை மாகாணம் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டதால் இந்த
அணைத்திட்டம் மேலும் காலதாமதம் ஆனது.

ஆங்கிலேய அரசின் ஆணைப்படி மேஜர் ஜான் பென்னிகுயிக் என்பவர் 1882-ல் அணையைக்
கட்டுவதற்கான திட்டத்தைத் தயாரித்தார். இத்திட்டத்தின்படி ஆற்றின்
அடிப்பகுதியிலிருந்து 155 அடி உயரமும், ஆற்றின் தளத்திற்கு கீழே 18 அடி ஆழமும்
அணையின் மேல் 4 அடி அகலத்தில் 5 அடி உயரக் கைப்பிடிச்சுவர் ஒன்றும் கட்ட
முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி அணையை அடைத்துத் தேங்கியிருக்கும்
தண்ணீரை எதிர்ப்புறத் திசையிலிருந்து வாய்க்கால் வழியே கொண்டு வருவது என்றும்
இந்த வாய்க்காலின் நீளம் 6500 அடியாகவும் இதற்கான் தலைமை மதகின் தரை மட்டம்
109 அடி என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி
மலையின் கிழக்குப் பகுதிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல மலையினுள்ளே 5900 அடி
வரை சுரங்கம் அமைத்து இதன் வழியே வைரவன் ஆற்றில் கலந்து அப்படியே அதைச் சுருளி
ஆற்றில் கலந்து வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது.

பெரியாறு திட்டத்தின் கீழ், சென்னை மாகாணத்திற்கு தண்ணீரை திருப்பும் வகையில்
திருவாங்கூர் மகாராஜாவுக்கும், சென்னை மாகாணத்திற்கும் இடையே 1.1.1886 முதல்
999 ஆண்டுகளுக்கான பெரியாறு குத்தகை உடன்படிக்கை, 29.10.1886 அன்று ஏற்பட்டது.

(அணை கட்டப்படும் பகுதி திருவாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்ததால் அதனுடன் இடம்,
லாபப்பங்கீடு போன்றவைகளுக்கான பேச்சு வார்த்தை நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு
1886 ஆம் ஆண்டு அக்டோ பர் 26 ஆம் தேதியில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
இதன்படி திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு (தற்போதைய கேரளா) சென்னை மாகாணம்
(தற்போதைய தமிழ்நாடு) அணையின் 155 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேங்கும்
பகுதியான 8000 ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் அணைகட்டுவதற்கும் பிற பணிகளுக்குமாக
100 ஏக்கர் சேர்த்து 8100 ஏக்கருக்கு குத்தகைப் பணம் செலுத்த வேண்டும் என்பது
உட்பட 7 அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு தமிழகம்
குத்தகைத் தொகையாக 1896ல் இருந்து 1970 வரை ஏக்கருக்கு 5 ரூபாய் என்று
கொடுத்து வந்தது. கேரளம், 1970 ஆம் வருடம் அந்த ஒப்பந்தத்தைத் திருத்தி,
ஆண்டிற்கு 5 ரூபாய் என்றிருந்த குத்தகைத்தொகையை 30 என மாற்றி, அணையிலும் அதைச்
சார்ந்த நீர்ப்பிடிப்பு மற்றும் குளம், குட்டை போன்ற நீர் நிலைகளிலும் மீன்
பிடிக்கும் உரிமையும் தமிழகத்திடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்டது.
இவ்வொப்பந்தம் 999 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்றும் குறிக்கப்பட்டது.
இதன்படி இவ்வணையிலிருந்து 104 அடிக்கு மேலுள்ள நீர் குகை மூலம் வைகைப்
படுகைக்கு திருப்பி விடப்பட்டு இப்பகுதி பாசன வசதி பெறுகிறது.)

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இராணுவப்பணிப் பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர்
கர்னல் பென்னி குக் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு
என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு
அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள
நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான
திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார்.

எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோ பர்
11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில்
அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக்
தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை
மேற்கொண்டது.

அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை,
திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள்
பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த
மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது.

அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த
நிலையில் கர்னல் பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன்
குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு
வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இதனால் தேனி,
திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி
நிலங்களுக்குத் தேவையான் தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.

பெரியாறு அணை புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் 1886லிருந்து 1895 வரையிலான
ஆண்டுகளில், சுண்ணாம்பு சுர்க்கி கலவையால் கருங்கல்லில் கட்டப்பட்டதாகும்.
பொதுவாகவே, புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் கட்டப்படும் அணைகள் நீர்
அழுத்தம், அலைகளால் ஏற்படும் அழுத்தம், நில அதிர்வுகளினால் ஏற்படும் விசை
போன்றவற்றை தனது பளுவினால் தாங்கிக் கொள்ளும் சக்தி வாய்ந்தவை. எனவே தான்,
புவி ஈர்ப்பு அடிப்படையில் கட்டப்பட்ட பெரியாறு அணை இன்றளவும் உறுதியாகவும்,
வலிமை மிக்கதாகவும் விளங்குகிறது.

ஒரு ஏக்கர் நிலத்திற்கு 5 ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில், சுமார் 8,000
ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டது. இந்த அணையின் நீர் மூலம், தேனி,
திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள சுமார்
2.23 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந் நிலையில், 29.5.1970 அன்று கேரளாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே இரண்டு
துணை ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. அதாவது, 1) 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்குத்தகை
வாடகை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், ஒரு ஏக்கருக்கான,
ஆண்டு குத்தகை வாடகையை 5 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக உயர்த்துதல், மற்றும்
மீன்பிடி உரிமையை கேரளாவிற்கு விட்டுக் கொடுத்தல் ஆகியவை அடங்கிய ஓர்
ஒப்பந்தமும்,

2) மின் உற்பத்தி திறனுக்கு ஏற்ப கட்டணம் செலுத்துவதன் அடிப்படையில், புனல்
மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ள தமிழ்நாட்டை அனுமதிப்பது என்கிற மற்றொரு
ஒப்பந்தமும் ஏற்பட்டன.

இந்த இரண்டு ஒப்பந்தங்களும், 1886ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அசல்
உடன்படிக்கையின் உரிமையாளர் என்ற முறையில் ஏற்படுத்தப்பட்டன.

பழைய அணையில், அணையின் முன் மற்றும் பின் பக்க பகுதிகள் சுண்ணாம்பு சுர்க்கி
கலவையால் கருங்கற்கள், அதாவது, stone masonry with lime surkhi mortar கொண்டு
கட்டப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், அணையின் மையப் பகுதி சுண்ணாம்பு சுர்க்கி
திண்காரையால், அதாவது, lime surkhi concrete-ஆல் கட்டப்பட்டது.

குறுகிய கால திட்டமாக, அணையின் எடையை அதிகரிக்கும் பொருட்டு, 21 அடி
அகலத்திற்கு, மூன்று அடி பருமன் கொண்ட ஆர்.சி.சி. கட்டுமானப் பணி அணையின் முழு
நீளத்திற்கு அதன் மேல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, அணையின்
எடை ஒரு மீட்டருக்கு 35 டன் அதிகரித்துள்ளது. அதாவது, அதன் கட்டமைப்புடன்
மொத்தம் 12,000 டன் எடை கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கிறது. நடுத்தர கால
நடவடிக்கையாக, இறுக்கு விசை தொழில்நுட்பத்தின் அடிப்படையில், அணையின்
அடித்தளத்துடன் எஃகு கம்பிகள் இழுத்து கட்டப்பட்டுள்ளன. அணையின் முன்
பகுதியிலிருந்து 5 அடி தொலைவில், அணையின் மேற்பரப்பிலிருந்து, அடித்தளப்
பாறையில் 30 அடி வரை, 9 அடி இடைவெளியில், 4 அங்குலம் குறுக்களவில், துளைகள்
அணையின் முழு நீளத்திற்கும் போடப்பட்டுள்ளன.

இந்த துளைகளுக்குள், 7 மி.மீ. பருமன் கொண்ட மிக வலுவான 34 எஃகு கம்பிகள்
பொருத்தப்பட்டுள்ளன. அஸ்திவாரத்தில் உள்ள கருங்கல் பாறைகளுடன், இந்த கம்பிகள்
உறுதியாக பொருத்தப்பட்டுள்ளன. முதலில் 20 அடி ஆழத்திற்கு திண்காரைக் கட்டுகள்,
அதாவது, Concrete போடப்பட்ட பிறகு கம்பிகள் செலுத்தப்பட்டு
நிறுத்தப்பட்டுள்ளன. 120 டன் சக்தி கொண்ட இக்கம்பிகள், மேற்பரப்பிலிருந்து
இழுத்துக் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில், துளையை அடைக்கும் வகையில்,
சிமிட்டிக் கலவை போடப்பட்டு மேற்பரப்பு மூடப்பட்டது. இதன் காரணமாக, அஸ்திவார
பாறைகளுடன் 120 டன் விசை கொண்டு, அணையை வலுவாக இறுக்குக் கம்பிகள் பிடித்துக்
கொள்ளும். நில அதிர்வு உட்பட பல்வேறு விசைகளைத் தாங்கிக் கொள்ளும் வகையில்,
அணையின் முழு நீளத்திற்கும், 9 அடி இடைவெளியில், 95 கம்பிகள் செலுத்தப்பட்டு
சிமிட்டிக் கலவை போடப்பட்டு இருக்கிறது.

நீண்ட கால நடவடிக்கையாக, அணையின் பின்புறத்தில் 10 அடி ஆழம், 32 அடி
அகலத்திற்கு, தரை மட்டத்திலிருந்து 145 அடி உயரத்திற்கு ஆர்.சி.சி. கட்டுமானம்
அணையின் தலைப் பகுதியுடன் இணையும் வகையில், மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவீன
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தற்போதுள்ள அணை மற்றும் புதிய கட்டுமானம் ஆகியவை
ஒரே அணை போல் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

இந்தப் புதிய வடிவம் பெரியாறு அணைக்கு கொடுக்கப்பட்டபின்
முல்லைப்பெரியாறு
அணை என்ற பெயரால் அழைக்கப்பட்டது. முல்லை ஆறு மற்றும்பெரியாற்றுக்கு
குறுக்கே கட்டப்பட்டிருப்பதால் "முல்லைப்பெரியாறு அணை" என்று அழைப்பது
1970களில் இருந்து துவங்கியதாக கருதப்படுகிறது.


------------------------
இன்று அன்றாடம் ஊடகங்களை ஆக்கிரமிக்கும் பிரச்சினையாக முல்லைப்பெரியாறு அணை விவகாரம்
உருவெடுத்துள்ளது.
தமிழக ? கேரள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியே நாடாளுமன்ற வளாகத்தின் முன்பே அட்ந
டகளை கையிலேந்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும், தர்ணா போராட்டங்கள் செய்வதும்,
அரசியல் தலைவர்கள் ஆய்வு செய்வதாகக் கூறி அணையைச் சுற்றி வருவதும்,
மத்திய அமைச்சர்களே பிரதமரை சந்தித்து கோரிக்கைகள் வைப்பதும் இன்று தொடர்கதையாகி விட்
டது.
கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும், எதிர்க்கட்சியான இடதுசா
ரி கூட்டணியும் ஒருமுகமாக இப் பிரச்சினையை சந்திக்க -
தமிழக அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் பாராமுக மாக தனித்தனியே பிரச்சினையை கையி
லெடுக்க உண்ணாவிரதம், முற்றுகைப் போராட்டம், சாலை மறியல் என விவகாரம் வி
ஸ்வரூபமெடுத்துள்ளது.

இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் `பந்த்? ந
டத்த ? போட்டிக்கு தமிழக பகுதிகளில் பெரியார் தி.க. உள்ளிட்ட தமிழர் அமைப்புக்கள் கேரள வாக
னங்களை மறிக்க ? கேரளாவில் வாழும் தமிழர்களும், தமிழ்நாட்டில் வாழும் மலையாளிகளும் என்ன நட
க்குமோ என நடுங்கிப் போய் உள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணைக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் அது எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என
யூகிக்க முடியாது; எனவே, கடற்படை தயார் நிலையில் இருப்பதாக துணை அட்மிரல் கே.என். அதில்
குறிப்பிட்டுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் தேசிய ஒருமைப்பாட்டிற்கு தொல்லை ஏற்பட்டு விடுமோ? எ
ன்ற ஐயம் அனைவருக்கும் ஏற்படத் தொடங்கி விட்டது.

தினத்தந்தி நாளிதழ் 1-12-2011 அன்று எழுதிய தலையங்கத்தில், ?தென் மாநிலங்களில் இருப்பதுபோல
வலுவான உறவு வடக்கே இருக்காது. இப்போதுதான் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி என்று
ஒரு வித்தியாசமான உணர்வுகள் துளிர் விடத் தொடங்கியுள்ளன;
ஒரு தலைமுறைக்கு முன்னர் திராவிட நாடு என்று பொதுவாகத்தான் எல்லோரும் மனதில் கொண்டிருந்
தோம். தமிழ்த்தாய், கன்னட மாதா, கேரள அம்மா, தெலுங்கு தள்ளி ஆகிய 4 அன்னைகளும் சகோதரி
கள் என்ற பாசஉணர்வு டன் பெரியம்மா சித்தி பிள்ளைகளாகத்தானே காலம் காலமாக வாழ்ந்து வந்தே
஡ம்.

கேரளாவில் கடை வைத்திருக்கும் தமிழர்களை அன்போடு அண்ணாச்சி கடை என்றும், மலையாளிகள்
தமிழ்நாடு குக்கிராமங்களில் கூட வைத்து இருக்கும் டீ கடைகளை சேட்டன் கடை என்று தமிழர்களும்
அன்போடு அழைப்பர்.

இப்போது அந்த அன்பான உறவில் விரிசல் விழும் வகையில் முல்லை பெரியாறு அணை பிரச்சினை முந
ளத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையை ஒரு பிரச்சினையாக கருதும் முன்னால் அதன் வரலாற்றை
இரு மாநில மக்களும் மதிக்கவில்லையென்றால் அதை கட்டிய தியாகி பென்னிகுயிக் தியாகத்தை மறந்
தவர்களாகி விடுவோம். வரலாறு இரு மாநில மக்களையும் ஒருபோதும் மன்னிக்காது.

ஒரு ராணுவ பொறியாளராக இங்கிலாந்து நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர் கர்னல் பென்னி
குயிக். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் வீணாக கடலில் போய் கலக்கிறதே, இதில் ஒரு
அணை கட்டி சேமித்தால் கேரள மக்களும், தமிழக மக்களும் பயன் அடைவார்களே என்ற கருத்தில்
அணை கட்டுவதற்கான முயற்சிகளை பென்னிகுயிக் தொடங்கினார்.

இந்தத் திட்டத்திற்கு பணம் கிடையாது என்று ஆங்கிலேய அரசாங்கம் மறுத்துவிட்ட சூழ்நிலையில்
பென்னிகுயிக் தன் மனைவியின் நகை உட்பட இங்கிலாந்து நாட்டில் உள்ள தன் சொத்துக்கந
ளயெல்லாம் விற்று, அத்துடன் தம் உறவினர்களிடமே பணம் திரட்டி, அந்த மலைப்பகுதியில் கடும் கஷ்ட
ங்களை அனுபவித்து முல்லைப் பெரியாறு அணையை கட்டினார்.

இந்த அணை வலுவாக இருக்கிறது என்பது தமிழக நிபுணர்களின் வாதம், வலுவில்லை என்பது கேரளா
சொல்லும் வாதம். வாதப்படி வலுவில்லை என்றாலுமே அதை வலுவாக்க நவீன தொழில்நுட்பத்தில் எ
வ்வளவோ வழிகள் இருக்கின்றன.

116 ஆண்டுகளுக்கு முன் முல்லைப் பெரியாறு அணை கட்ட 8000 ஏக்கர் நிலத்தை 999 ஆண்டு குத்தந
கக்கு தர திருவாங்கூர் சமஸ்தானத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதால் இந்த ஒப்பந்தம் செல்லாது எனவும், இந்த ஒப்பந்தம்
999 வருடங்களுக்கு பொருந்தும் என்றாலும் அதுவரை இந்த அணை நீடிக்காது என்பதும் கேரள அரசு
தரப்பின் வாதம்.

`அணை கட்டு பகுதியில் மீண்டும் மீண்டும் நில நடுக்கம் ஏற்படுகிறது; முல்லைப்பெரியாறு தேக்கடி,
சுருளியாறு ஆகியவற்றை ஒருங்கிணைத்த பகுதியாக உள்ளது, இப் பகுதி நிலநடுக்கம் ஏற்பட வா
ய்ப்புள்ளதாக உள்ளது; அணையை சுற்றி 15 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு 5 ரிக்டர் அளவுக்கு மேல் நில
நடுக்கம் ஏற்பட்டால் சேதம் ஏற்படும்? ? என்பது கேரள வல்லுநர்களின் வாதம்.

முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது; அந்த அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது தமிழக
அரசின் வாதம்.

?முல்லைப்பெரியாறு அணை உடையாது; அணை உடைந்தாலும் கேரளத்தில் 4 மாவட்டங்கள் அழிந்துவி
டும் என்ற வாதம் பொய்யானது; அணை உடைந்தாலும் அந்த தண்ணீர் இடுக்கி அணைக்குதான்
செல்லும்;

முல்லைப்பெரியாறு அணை மற்ற அணை போல் மதகு திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுவது
அல்ல. மிகப் பெரிய குழாய்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வருவதாகும் என்பது தமிழக வல்லுநர்க
ளின் வாதம்.

இடுக்கி அணை முல்லைப்பெரியாறு அணையிலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் 1979-ம் ஆண்டு கட்
டப்பட்ட தாகும்.

தமிழக ? கேரள எல்லையில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணையில் 1979-ம்
ஆண்டுக்கு முன்பு வரை 152 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது. அந்த ஆண்டு இடுக்கியில் நிலநடுக்கம்
ஏற்பட்டதால் அணையின் உறுதித் தன்மை குறைந்து விட்டதாக கூறி, 136 அடியாக அது குறைக்க
ப்பட்டது. 1992-ம் ஆண்டு அணையின் நீர் மட்டம் 141.80 அடியாக உயர்ந்து வழிந்தது.

முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்
கொள்ள அனுமதித்ததோடு 999 ஆண்டு குத்தகை செல்லும் என உச்சநீதிமன்றம் 2006-ம் ஆண்டு பி
ப்ரவரியில் தீர்ப்பளித்தது.

இதுதொடர்பாக அரசு மற்றும் அரசியல்ரீதியான வாதப் பிரதிவாதங்களால் ஓய்வு பெற்ற நீதிபதி ஆனந்த்
தலைமை யில் அதிகாரம் அளிக்கப்பட்ட குழு அமைத்து, அதில் இருமாநில அரசுகளும் தங்களின் நியா
யங்களை கூற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இக்குழுவில் கேரளாவின் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி
தாமஸ், தமிழகத்தின் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி லட்சுமணன் இடம் பெற்றுள்ளனர்.

இக் குழுவின் இறுதி கட்ட கூட்டம் டிசம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளதாலும் இக் கூட்டம் முடிந்தபின்
குழுவின் அறிக்கை உச்சநீதிமன்றத்திடம் அளிக்கப்பட உள்ளதாலும் இந்த குழு எந்த முடிவும் எடுத்து
விடக்கூடாது என்ற ரீதியில் பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கேரள மாநிலத்தில் அண்மையில் நடைபெற உள்ள பிரவம் தொகுதி இடைத் தேர்தலை முன்வைத்து
அங்குள்ள அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை
கையில் எடுத்துள்ளதாக வும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கேரள முதல்வர் உம்மன்சாண்டி டெல்லியில் பிரதமரை சந்தித்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்
மட்டத்தை 120 அடியாக குறைக்கவும், புதிய அணை கட்ட அனுமதிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்திற்கு பதில் எழுதியுள்ள பிரதமர் மன்மோக
ன்சிங், `முல்லைப் பெரியாறு விவாகரத்தில் மக்களிடையே தேவை யற்ற பீதியை உருவாக்கும் வகையில்
நடந்து கொள்வதும், பேசுவதும் தவிர்க்கப்பட வேண்டும்? என கேட்டுக் கொண்டுள்ளார்.

இரு மாநில உயர் அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய நீர்வளத்தை அமைச்சர்
பவன்குமார் பன்சால் அழைப்பு விடுத்துள்ளார்.

மூத்த அரசியல் தலைவரும், தி.மு.க. தலைவருமான டாக்டர் கலைஞர், `கேரள மக்களிடமும் தமிழ்நாட்டு
மக்களிடமும் எந்தவிதமான மனக்குழப்பமும் வராமல் சகோதர ஒற்றுமையோடு இருதரப்பினரும்
செயல்பட வேண்டும்; அதற்கேற்ற வழிவகைகளை நடுநிலையாக நின்று மத்திய அரசு செய்ய வேண்டும்
என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அமைச்சர்கள் வயலார் ரவி, இ.அஹமது, கே.வி. எஸ். தாமஸ் ஆகியோர் தமிழக ? கேரள எ
ம்.பி.க்களை நேரில் சந்தித்து, `முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை பிரச்சினையாக்க வேண்டாம்.
சுமூகமாக பேசித் தீர்த்துக் கொள்வோம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
முல்ந
லப் பெரியாறு அணை விவகாரம் தேசிய ஒருமைப்பாட்டிற்கு தொல்லையாகி விடக்கூடாது. தமிழக கே
ரள மக்கள் என்றும்போல் சகோதரர்களாக வாழ வேண்டும். அந்த அடிப்படையிலேயே இப் பிரச்சினைக்கு
வழி காண வேண்டும் என்பதே நமது விருப்பமும் ? வேண்டுதலுமாகும்
.

---------------MUTHU RATHINAM,
Download As PDF

Wednesday, September 21, 2011

வரிகள் - முரண்பாடுகள்

                   வரிகள் - முரண்பாடுகள்
                                                     -----------------------------------------
   நாம் பல விசயங்களில் அரசாங்கத்தோடு ஒத்துப் போகிறோம் .
 அதில் நாம் செலுத்தும் வரிகளும் ஒன்று.
      இதில் உள்ள முரண்பாடுகளை பார்ப்போம் .
1 )   நாம் சாலை வரி கட்டுகிறோம் , ஏனென்றால் சாலை அமைக்கவும் ,
   சாலை பராமரிப்பு செலவுகளுக்காகவும் , அரசாங்கத்திற்கு பணம்
  தேவைபடுகிறது. அதில் அர்த்தம் உள்ளது.
2 )  நாம் தண்ணீர் வரி கட்டுகிறோம் , ஏனென்றால் தண்ணீரை சுத்தப்படுத்தி ,
      நம் வீட்டு வரை கொண்டு வருவதற்கு அரசாங்கத்திற்கு பணம் தேவைப்
    படுகிறது. அதில் அர்த்தம் உள்ளது .
 3 ) நாம் மின்சார வரி கட்டுகிறோம் , ஏனென்றால் மின்சார உற்பத்தி ,
     மற்றும் பராமரிப்பு , நம் வீடு வரை மின்சாரத்தை கொண்டு வர அரசாங்கத்திற்கு
   பணம் தேவைபடுகிறது . அதில் அர்த்தம் உள்ளது.
 4 ) நாம் வீட்டு வரி கட்டுகிறோம் , வீட்டு பட்டா என் பெயரில் உள்ளது .
      வீடு எனக்கு சொந்தம் . அரசாங்கத்திற்கு நான் ஏன் வரி கட்ட வேண்டும் ?.
       இதில் அர்த்தம் உள்ளதா ?
 5 ) நாம் விவசாய நில வரி கட்டுகிறோம் . விவசாய நிலம் என் பெயரில் உள்ளது .
      பட்டா என் பெயரில் உள்ளது . நான் ஏன் அரசாங்கத்திற்கு (கந்தாயம் )
     வரி கட்ட வேண்டும் ? இதில் அர்த்தம் உள்ளதா ?
 6 ) நாம் சுதந்திரம் அடைந்து  அறுபது நான்கு ஆண்டுகள் ஆகியும் , ஆங்கிலேயர்
     கட்ட பொம்மனிடம் அநியாய வரி வசூலித்த கதை போல  ,இது உள்ளதா ,இல்லையா ?
 7 )  யாராவது அரசாங்கத்திடம் எடுத்து சொல்லி , ஆவன செய்வார்களா ?
     அல்லது  சட்ட ரீதியாக  அணுகி  , இதற்கு வழி காண முடியுமா ?
 
Download As PDF

Thursday, August 11, 2011

என் சுவாசம் நீ


என் சுவாசம் நீ



     மூச்சுக் காற்றாய் நீ, என் இதயத்தை தொட்டாய்,

     எல்லையில்லா நம் காதலுக்கு விதை விதைத்தாய்,

     காதல் பயிர் வளர கண்களால் உரம்  இட்டாய்,

     அன்பு மொழி பேசி, நீர் வார்த்தாய்.!

     இடையில் தடைகளை களை எடுத்தாய்,

     கண்ணுக்கு இமையாக, வேலி அமைத்தாய் ,

     பெற்றவர் மனம் அறிய, பேசத் துடித்தாய்,

     சாதிப்பூச்சி அகல, பூச்சிக் கொல்லி தேடினாய்.

    காலம் கனிந்து, பச்சைக் கொடி காட்டினாய்,

     கல்யாணக் களைவந்து முகம் சிவந்தாய்,

     பொன்னி நெல் கதிர் போல் தலை குனிந்தாய்,

     திருமண  நாள், அது அறுவடை நாள்.


-முத்து ரத்தினம்
Download As PDF

Wednesday, August 3, 2011

திண்ணைப் பள்ளிக்கூடம்.


அன்னை கைப்பிடிக்க, அழுது புரண்டு, வேண்டா வெறுப்பாக
திண்ணைப் பள்ளிக்கூடத்தில் முதல் வகுப்பில் புகுந்தேன்..!
கண்ணில் பட்டதோ கையில் பிரம்புடன் பயமுறுத்தும் ஆசிரியை, 
மிரட்சியுடன் அன்னை கைப்பற்றி தரையில் அமர்ந்தேன் நான்...!
  
தினம் தினம் அன்னை பாதுகாப்புடன் பள்ளிக்கு பயணம்
சிலசமயம் எடுப்பேன் ஓட்டம், பின்னால் துரத்தும் கூட்டம்..!
பிரம்புடன் அன்னை, பலபேருக்கு டிமிக்கி, வீட்டில் சிறை
விடிந்ததும் மீண்டும் வழக்கம் போல் திண்ணைப் பள்ளிக்கூடம்..!
 
கழிந்தன காலம், தொடர்ந்தன வகுப்புகள்
மூன்றாம் வகுப்பு, படிப்பில் ஏதோ ஒரு பிடிப்பு !
முதல் மார்க் வாங்க வேண்டும் என துடிப்பு,
கோ-எஜிகேசன் படிப்பு...! அதுவும் ஒரு சிறப்பு..!
 
இன்றும் மனம் அசை போடும், என் பள்ளியைப் பார்த்தால்.!
அன்றைய நினைவுகளும், என் மனதில் தோன்றும் அழியா உருவங்களும்!
முதல் வகுப்பை தொடங்கினேன் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அன்று...! 
முதல் மாணவனாக தேறினேன் பல்கலைக்கழகத் தேர்வில் இன்று..!

அன்னை கைப்பிடிக்க அன்று சென்ற திண்ணைப் பள்ளிக்கூடம்
என்னை மட்டுமின்றி இன்று பலரது வாழ்க்கையில் ஒளியேற்றிய ஓடம்..!
வாழ்க்கைக்கு அடித்தளமிட்ட திண்ணைப் பள்ளிக்கூடம்..!
வாழும்போதுதான் தெரிந்தது அது ஒரு அழகிய கலைக்கூடம்..!

-முத்து ரத்தினம்
 திண்ணைப் பள்ளிக்கூடம்.
Aug 03, 2011
Download As PDF

Saturday, July 30, 2011

VELI NAADU SELLA VENDUMAA ?-10

வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி - 10

 வெளிநாடு செல்ல  வேண்டுமா? பகுதி - 10
நிறைவு பகுதி

பெரும்பாலும் உங்களுடைய ஒரு மாத சம்பளம் நிறுவனத்திடம் இருக்குமாறு, நிறுவனம் உஷாராக இருக்கும். நீங்கள் முடிவாக (EXIT) செல்லும்போது தான் உங்களுடைய சம்பள பிடித்தங்கள் அனைத்தும் கிளியர் செய்து அனுப்புவார்கள்.

உங்கள் தகுதிக்கும், திறமைக்கும் அதற்குரிய சம்பளமும் இல்லாமல் நீங்கள் வெளிநாட்டிற்கு வரக்கூடாது.

உங்களை அனுப்பும் ஏஜென்சிகள், உங்களுடைய அவசரத்தைப் பார்த்து. நீங்கள்  அங்கு செல்லுங்கள். ஓவர்டைம் உண்டு, இன்கிரிமெண்ட் உண்டு என பொய் சொல்லி விமானத்தில் ஏற்றி அனுப்பி விடப் பார்ப்பார்கள்.

ஒப்பந்த பத்திரத்தில் (Agreement) அனைத்தும் உங்களுக்கு திருப்தியாக இருந்தால் ஒழிய கையெழுத்து இடக்கூடாது. அதே நேரம் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களும் அதில் கையெழுத்து இட்டிருக்கவேண்டும்.

எனக்குத் தெரிந்து, சவூதி அரேபியாவில் ஆடு மற்றும் ஒட்டகம் பராமரிக்க ஐடிஐ முடித்தவர்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி!

வெளிநாடு சென்றால் நிறைய சம்பாதிக்கலாம் என்பது உண்மைதான்! அதற்காக அவசரப்படாமல், முறையாக நல்ல வேலை வாய்ப்பு நிறுவனங்களை அணுகி, சர்வீஸ் சார்ஜ் அதிகம் வாங்காத நல்ல நிறுவனங்கள் மூலம், நல்ல வேலையாக தேர்ந்தெடுத்து, நமக்கு உணவு தங்கும் இடம் இலவசமாக தரும் நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, சம்பளமும் சரியாக தரும் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து  வெளிநாடு வந்தால் நிறைய சம்பாதிக்கலாம். உங்கள் குடும்பமும் வசதியாக இருக்கும்.

சில நாடுகளுக்கு நாம் பணிக்குச் செல்வதை தவிர்த்து விட வேண்டும். குறிப்பாக மலேசியா, கொரியா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு நாம் பணிக்குச் சென்றால், இன்றும் அங்கு கொத்தடிமை முறை இருப்பதாக அங்குள்ள நண்பர்கள் மூலமாகவும், செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் மூலமாகவும் அறிகிறோம்.

அப்படி செல்வதாக இருந்தால் கூட ஒரு தடவைக்கு பல தடவை.. நான் முன்பு சொன்ன இணைய தளம் மூலமாகவும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, நமக்கு திருப்தி ஏற்பட்டால் தான் பணிக்குச் செல்ல வேண்டும்.

நம்பகத்தன்மை இல்லாத அயல்நாடு வேலைக்கு அனுப்பும் ஏஜென்சியை நம்பி அங்கு சென்று அவஸ்தை படக்கூடாது.

இன்னொரு முக்கியமான விஷயம். பெண்கள் அயல்நாடுகளுக்கு பணிக்குச் செல்லும்போது கூடுதல் விழிப்புணர்வு தேவை.

டாக்டர், நர்ஸ் போன்ற பணிகளுக்கு பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகம்.

எந்த நாட்டிற்கும், வீட்டு பணிகளுக்கு என செல்லும்போது பெண்கள் அதிக இன்னல்களுக்கு ஆளாவதாக சொல்லக் கேள்வி. அதிக வேலைப் பளு, பாலியல் தொந்தரவுகள் போன்ற கொடுமைகளை அவர்கள் அனுபவிக்கிறார்கள். நாலைந்து மாதங்களுக்கு ஒரு முறை சம்பளம்; சமயத்தில் அடி உதை ஆகியவையும் உண்டு.

எனவே  பெண்களே உஷார்!
Download As PDF

VELI NAADU SELLA VENDUMAA ?-9

வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி - 9


 வெளிநாடு செல்ல  வேண்டுமா? பகுதி - 9
நாம் கொடுக்கும் குடும்ப விசாரணை ஏற்கனவே வந்திருக்கும் விசாவுடன் சரிபார்த்து, மனைவி மற்றும் குழந்தைகளின் கடவுச்சீட்டில் (Passport) முத்திரை செய்வார்கள்.

கடவுச்சீட்டில் முத்திரை செய்யவும், ஏஜென்சிக்கு சர்வீஸ் தொகையாக பணம் தரவேண்டும்.

குடும்ப விசாவுடன் மனைவி, குழந்தைகள் கடவுச்சீட்டுக்கள் கைக்கு கிடைத்தவுடன் விமான பயணச்சீட்டு பெற்று, தேதியை உறுதி செய்யவேண்டும். இவர்கள் நீங்கள் பணிபுரியும் நாட்டில் விமான நிலையத்திற்கு வந்தவுடன், நீங்கள் சென்று, உங்கள் அடையாள (Work Permit) அங்குள்ள அதிகாரிகளிடம் காண்பித்து, மனைவி குழந்தைகளை உங்கள் இருப்பிடத்திற்கு அழைத்து வரலாம்.

வாழ்க வளமுடன்!


வேலை  வாய்ப்பு உள்ள தொழில்கள்



வளைகுடா நாடுகளில் அடிப்படை தொழில்கள் தவிர, தொழிற்பயிற்சி முடித்து (I.T.I)  டர்னர், வெல்டர், பிட்டர், எலக்ட்ரீசியன் போன்ற தொழில்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு உண்டு.

மேற்கத்திய நாடுகளில் ஐ.டி எனப்படும் கணினி தொழிற் சம்பந்தமான வேலைகளுக்கு வாய்ப்பு முதலில் அதிகமாக இருந்தாலும், தற்போது பாதியாக குறைந்து உள்ளது.

டாக்டர், என்ஜீனியர், நர்ஸ் போன்றவர்களுக்கு தங்களுடைய அடிப்படை படிப்புடன் மாஸ்டர்ஸ் டிகிரி (Master's Degree) எனப்படும் கூடுதல் தகுதி, உதாரணமாக MBBS உடன் MS  படிப்பும் இருந்தால் கூடுதல் உடனடி வேலை வாய்ப்புகள் உள்ளன.

என்ஜீனியர் படிப்பிலும் கூடுதலாக M.B.A மற்றும் M.E படிப்பு இருந்தால் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஆஸ்திரேலியா, துபாய் போன்ற நாடுகளில் தற்போது வேலை வாய்ப்பு குறைந்தாலும், சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன் போன்ற நாடுகளில் இன்றும் அதே வேலை வாய்ப்பு இருந்து கொண்டேதான் உள்ளது.

படிப்புடன், வேலைத் திறமையும் இருந்துவிட்டால் போதும் உலகத்தின் எந்த மூலையிலும்  நாம் பெருமையுடன் அதிக வருமானத்துடன் வலம் வரலாம்.

இந்த விஷயத்தில் உலகத்தில் தமிழன் முதல் இடத்தில் இருக்கிறான் என்பது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம்.

கீழ்கண்ட  நிறுவனங்களில் நிரந்தரமாக தொடர்ந்து அதிக வேலை வாய்ப்பு உண்டு என்பது தினசரிகளில் வரும் விளம்பரங்களே சாட்சி.

1. ஆயில் மற்றும் கேஸ் நிறுவனங்கள்

2. மின்வாரிய கட்டுமான பணிகள்

3. சாலை மற்றும் பில்டிங் கட்டுமான பணிகள்

4. தொழிற்சாலை பணிகள்

5. சேல்ஸ் மேன்

6. ஐ.டி. சம்பந்தமான  பணிகள்

7. மருத்துவமனை பணிகள்

8. பராமரிப்பு மற்றும் துப்புரவு பணிகள்

9. தொலைத் தொடர்பு சம்பந்தமான பணிகள்

10. ஹெவி  டிரைவர் பணிகள்

மேலும் வெளிநாடு வேலைகளுக்கு வரும் அன்பர்கள் முக்கியமா க தெரிந்து கொள்ள வேண்டியது;
 வெளிநாடு செல்ல  வேண்டுமா? பகுதி - 9
Mar 13, 2011
Download As PDF

VELI NAADU SELLA VENDUMAA ?-8

வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-8


அயல் நாடு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகத்தில் தெரிவித்து, தீர்த்துக் கொள்ளலாம்.

அதுமட்டும் இல்லாமல், இந்தியாவின் தலைநகரமான புதுதில்லியில் உள்ள அயல்நாடு வாழ் இந்தியருக்கான நல வாரியத்தில் தொடர்பு கொண்டும் சிக்கல்களை தீர்த்துக் கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி;

MINISTRY OF OVERSEAS INDIAN AFFAIRS,
9th FLOOR, AKBAR BHAWAN,
CHANAKYA PURI,
NEW DELHI - 110 021.

தொலைபேசி : +91 11 24197900
தொலைபேசி : +91 11 24674140

நல வாரிய சில முக்கிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள,

1. Mr Nirmal Singh
Secretary
Ministry of Overseas Indian Affairs
Tel: 24674143 / 24674144
email: secretary@moia.nic.in
email: jsds@moia.nic.in

2. Mr. Malay Mishra
Joint Secretary (Diaspora Services)
Ministry of Overseas Indian Affairs
Tel: 26874240
email: jsds@moia.nic.in

3. Mr. G Gurucharan
Joint Secretary (Financial Services)
Ministry of Overseas Indian Affairs
Tel: 24676210
email: jsfs@moia.nic.in

4. Mr.Jagadananda Panda
Protectpr General of Emigrants,
Ministry of Overseas Indian Affairs.
Tel: 26874250
e-mail: pge@moia.nic.in

வெளிநாடு வாழ் இந்தியருக்காக நமது அரசாங்கம், கடந்த மே மாதம்  2004ஆம் ஆண்டு  MINISTRY OF OVERSEAS INDIAN AFFAIRS-ஐ நிறுவியது.

மேலும் இத்துடன் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புக்கான இமிக்ரேசன் துறையையும் இணைத்தது.
 வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-8
Mar 05, 2011
Download As PDF

veli naadu sella vendumaa ?-8

வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-8


அயல் நாடு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகத்தில் தெரிவித்து, தீர்த்துக் கொள்ளலாம்.

அதுமட்டும் இல்லாமல், இந்தியாவின் தலைநகரமான புதுதில்லியில் உள்ள அயல்நாடு வாழ் இந்தியருக்கான நல வாரியத்தில் தொடர்பு கொண்டும் சிக்கல்களை தீர்த்துக் கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி;

MINISTRY OF OVERSEAS INDIAN AFFAIRS,
9th FLOOR, AKBAR BHAWAN,
CHANAKYA PURI,
NEW DELHI - 110 021.

தொலைபேசி : +91 11 24197900
தொலைபேசி : +91 11 24674140

நல வாரிய சில முக்கிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள,

1. Mr Nirmal Singh
Secretary
Ministry of Overseas Indian Affairs
Tel: 24674143 / 24674144
email: secretary@moia.nic.in
email: jsds@moia.nic.in

2. Mr. Malay Mishra
Joint Secretary (Diaspora Services)
Ministry of Overseas Indian Affairs
Tel: 26874240
email: jsds@moia.nic.in

3. Mr. G Gurucharan
Joint Secretary (Financial Services)
Ministry of Overseas Indian Affairs
Tel: 24676210
email: jsfs@moia.nic.in

4. Mr.Jagadananda Panda
Protectpr General of Emigrants,
Ministry of Overseas Indian Affairs.
Tel: 26874250
e-mail: pge@moia.nic.in

வெளிநாடு வாழ் இந்தியருக்காக நமது அரசாங்கம், கடந்த மே மாதம்  2004ஆம் ஆண்டு  MINISTRY OF OVERSEAS INDIAN AFFAIRS-ஐ நிறுவியது.

மேலும் இத்துடன் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புக்கான இமிக்ரேசன் துறையையும் இணைத்தது.
Download As PDF

veli naadu sella vendumaa ?-7

வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி - 7


சில நண்பர்கள் குடும்பத்தோடு வெளிநாடு சென்று தங்க நேரிடும்.

அப்போது அவர்கள் குழந்தைகளின் படிப்பு பாதிக்காமல் இருக்க வேண்டுமல்லவா?

அவ்வாறு பாதிக்கப்படாமல் இருக்க, நமது இந்திய அரசாங்கம், அந்தந்த நாடுகளின் முக்கிய நகரங்களில் இந்திய தூதரக கல்விக் கூடங்களை (INDIAN EMBASSY SCHOOL) நிறுவி திறம்பட நடத்தி வருகிறது.

எல் கே ஜி-யில் இருந்து, செகண்டரி பள்ளிவரை ஆசிரியர்களை பல்வேறு பாடங்களுக்கு நியமித்து, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பயனளிக்கிறது.

மேற்படிப்புக்கு தொலை தூரக் கல்வி மூலம் பயன்பெற, ஆங்காங்கே பயிற்சி மையங்களை நிறுவி உதவி வருகிறது.

சில பல்கலைக்கழகங்களும், பயிற்சி மையங்களை நாடுகளின் முக்கிய நகரங்களில் நிறுவி, பயிற்சி பெற வைக்கின்றன.

தேர்வு மையங்களும் அமைத்து, தேர்வு எழுத வைத்து, பட்டங்கள் (DEGREES) பெற ஆவன செய்கிறார்கள்.

அவ்வாறு பெறும் பட்டங்கள், இந்திய அரசு அங்கீகாரம் அளித்து, அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பெறலாம்.

அயல் நாடு செல்லும் தமிழர்கள் குறிப்பாக அந்தந்த நாட்டிலுள்ள நமது தமிழ்ச் சங்கங்களை அவசியம் தொடர்பு கொள்ளவேண்டும்.

அங்கு நடக்கும் விழாக்களிலும், நிகழ்ச்சிகளிலும் தமிழ்ச்சங்க உறுப்பினராகி பங்கு கொள்ள வேண்டும்.

இதன் மூலம் பல தமிழ் அன்பர்களின் நட்பு ஏற்படும். இந்தியாவில் கொண்டாட முடியாத பண்டிகைகளை அங்குள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொண்டாடலாம்.

நமக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் அங்கு தெளிவுபடுத்தி தீர்த்துக் கொள்ளலாம்.

அந்தந்த நாடுகளின் தமிழ்ச்சங்க முகவரிகளை இணையதளங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

புதியதாக வெளிநாடு செல்லும் அன்பர்கள் முதலிலேயே தமிழ்ச்சங்க நிர்வாகிகளை தொடர்பு  கொண்டு நமக்கு வேண்டிய உதவிகளைப் பெறலாம்.

இந்தியாவில் நாம் யாருக்காவது உதவி செய்ய விரும்பினாலும், பலர் சேர்ந்து கூட்டாக பொருள் உதவி தமிழ்ச்சங்கங்கள் மூலம் செய்யலாம். பல நிதி உதவி பெறும் நிறுவனங்கள் பலன் பெறும்.

..... தொடரும்
Download As PDF

veli naadu sella vendumaa ?-6

வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-6


 வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-6
பணி ஒப்பந்தம் முடித்து EXIT-ல் வரும் போது கவனிக்க வேண்டியது;

இரண்டு வருடமோ அல்லது அதற்கு மேலோ உங்களுடைய தேவையில்லை என திருப்பி அனுப்புகிறது என வைத்து கொள்ளுங்கள்.

உங்கள் கடவுச் சீட்டில் EXIT-முத்திரை இடப்பட்டு இந்தியாவுக்கு வருகிறீர்கள்.

நீங்கள் என்ன என்ன பொருட்கள் கொண்டு வரலாம் என்பதை 'INDIA CUSTOMS RULES FOR TRANSFERRING RESIDENCY TO INDIA'-என்ற இணைய தளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

நாம் வெளிநாட்டில் பயன்படுத்திய வீட்டு உபயோகப் பொருட்களை 'கார்கோ' (Cargo) மூலம் இந்தியா கொண்டு வரலாம். இதற்கு கஸ்டம்ஸ் DUTY கிடையாது.

மற்றும் நீங்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்லும் போது விலை உயர்ந்த பொருட்களை கொண்டு சென்று மறுபடியும் அதை இந்தியா கொண்டு வர விரும்பினால், மறக்காமல் அந்த பொருட்களுக்கான EXPORT CERTIFICARE'-ஐ கஸ்டம்ஸ்-லிருந்து பெற்றுச் செல்லவேண்டும்.

இல்லாவிட்டால் நீங்கள் இந்தியா திரும்பும்போது அந்த பொருட்களுக்கு திரும்பவும் DUTY கட்ட வேண்டி வரும்.

PRAVASI BHARTIYA BIMA YOJANA, 2006

குறிப்பாக வேலை வாய்ப்புக்காக அயல் நாடு செல்லும் இந்தியர்களுக்காக கட்டாய ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை (INSURANCE) அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.

அதன் பெயர் 'பிரவசி பாரதிய பீமா யோஜனா' என்பதாகும். (PRAVASI BHARATIYA BIMA YOJANA) (PBBY)

குறைந்தபட்ச தொகையாக ரூபாய் ஐந்து லட்சம் நாம் வேலை ஒப்பந்தம் செய்த காலம் முழுவதற்கும் சேர்த்து பயன் பெறலாம்.

2003ஆம் ஆண்டு இந்தத் தொகை ரூ.2 லட்சமாக இருந்தது. பிப்ரவரி 1, 2006 முதல் ரூபாய் ஐந்து லட்சமாக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்தது.

இத்துடன் ரூ.25,000-க்கும் சேர்த்து கூடுதலாக சட்ட உதவி செலவுகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் என்ன நன்மைகள் என்பதைப் பார்ப்போம்.

1) ஒரு வேளை காப்பீடு செய்தவர் இறந்து விட்டால், அவர் குறிப்பிட்ட நபருக்கு (NOMINEE) ரூபாய் ஐந்து லட்சம் கிடைக்கும். அல்லது காப்பீடு செய்தவர் பணியின்போது நிரந்தர ஊனம் ஏற்பட்டாலும் காப்பீடு நிறுவனம் அவருக்கு குறிப்பிட்ட பணம் கிடைக்கும்.

2) இறந்தவர் உடலை வெளிநாட்டிலிருந்து இந்தியா கொண்டுவர ஒரு வழி வான ஊர்தி செலவை காப்பீட்டு நிறுவனம் ஏற்கும். உடலுடன் உதவியாளர் ஒருவருக்கும் வரும் செலவை நிறுவனம் ஏற்கும்.

3) பணியிலி இருப்பவரை அவர் எந்த தவறும் செய்யாத பட்சத்தில், பணியிலிருந்து வெளியேற்றப்பட்டால், ஒரு வழிப்பாதை எகானமி பிரிவு விமான பயணச்சீட்டுக்கான தொகையை காப்பீடு செய்தவர், காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கு அந்நாட்டின் இந்தியத் தூதரக சான்றிதழ் தேவை.

4) பணியில் இருக்கும்போது உடல் நலக் குறைவு ஏற்பட்டாலோ, அல்லது மருத்துவ சோதனையில் அவரால் இனி பணியில் தொடர முடியாது என்ற நிலை ஏற்பட்டாலோ மற்றும் காப்பீடு எடுத்த 12 மாதத்திற்குள் வெளிநாட்டு பணி நிறுவனம் பணி நீக்கம் செய்தாலோ, மேற்கண்ட ஒரு வழிப் பயணச்சீட்டு காப்பீட்டு நிறுவனம் காப்பீடு செய்தவருக்கு வழங்கும்.

5) இந்த காப்பீடு குறைந்தது இரண்டு வருடம் அல்லது வேலை ஒப்பந்தம் காலக்கெடு இதில் எது அதிகமோ அதுவரை செல்லுவடியாகும்.

6) பணியின்போது விபத்து, உடல் நலக்குறைவு, வியாதி இவற்றுக்காக மருத்துவமனையில், மருத்துவம் எடுத்துக் கொண்டால், மருத்துவத் தொகையாக குறைந்தபட்சம் ரூபாய் 50,000/- காப்பீட்டு காலத்தில் இந்தியாவில் இருந்தாலும், அயல் நாட்டில் இருந்தாலும் காப்பீடு செய்தவருக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்கும்.

7) வெளிநாட்டில் பணிபுரியும் பெண்களுக்கான பிரசவ பேறுக்காக ரூபாய் இருபதாயிரம் (20,000) காப்பீட்டு நிறுவனம் வழங்கும். இதற்கும் அந்நாட்டு இந்திய தூதரக சான்றிதழ் தேவை.

8) வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு (21 வயதிற்குள்) மருத்துவச் செலவுகளுக்கு ரூபாய் 25,000 (இருபத்தைந்தாயிரம்) பெற்றுக் கொள்ளலாம். (வருடத்திற்கு)

இறந்தவர் அல்லது நிரந்திர ஊனமுற்று இந்தியா திரும்பிய பணியாளர், காப்பீடு செய்தவருக்குத்தான் மேற்கண்ட சலுகை கிடைக்கும்.

காப்பீட்டு நிறுவனங்கள் எவை என பார்ப்போம்.

1) ஐசிஐசிஐ லம்போர்டு இன்சூரன்ஸ் கம்பெனி
2) யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி
3) ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி
4) நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி
5) ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி
6) நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி
7) சோழமண்டலம் MS ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி
8) பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி

மேற்கண்ட காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் காப்பீடு செய்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் பயன் பெறலாம்.

.....தொடர்வது

சில நண்பர்கள் குடும்பத்தோடு வெளிநாடு சென்று தங்க நேரிடும். அதுகுறித்து பார்ப்போம்.
Download As PDF

veli naadu sella vendumaa ?-5

வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-5


 வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-5
வெளிநாடு வாழ்க்கை முடிந்து, முடிவாக இந்தியா வந்து நிரந்தரமாக தங்குவதாக இருந்தால், வ்ங்கியுடன் தொடர்பு கொண்டு மேற்கண்ட அயல்நாடு வாழ் இந்தியருக்கான வங்கிக் கணக்கை, ORDINARY ACCOUNT ஆக மாற்றிக் கொள்ளலாம்.

வங்கிகள் RESERVE BANK OF INDIA - விற்கு இதனை தெரியப்படுத்தி விடும்.

மேலும் தற்போது 'SPEED CASH'- எனப்படும் உடனடியாக பணம் அனுப்பும் வசதியும் தற்போது உள்ளது.

வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணம் இரண்டு மணி நேரத்தில் இந்தியாவில் பெற்றுக் கொள்ளலாம்.

அதாவது வெளிநாட்டு வங்கிகளில் 'speed cash' முறையில் அனுப்பிய பணத்தை இந்தியாவில் WESTERN UNION MONEY TRANSFER' மூலம் நமது தபால் நிலையங்களிலோ அல்லது இதனுடைய ஏஜெண்ட்டுகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

நாம் பணம் அனுப்பிய ரசீது-வில ஒரு அடையாள எண் மற்றும் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்திய தபால் நிலையத்தில் எந்த ஊரிலும் மற்றும் 'WESTERN UNION MONEY TRANSFER'-ஏஜெண்டுகளிடமும் யார் பெயருக்கு பணம் அனுப்புகிறோமோ - அவருடைய அடையாள அட்டையைக் காண்பித்து உடன் பணம் பெற்றுக் கொள்ளலாம்.

இதன் மூலம் நமக்கு கால  தாமதம் ஏற்படாமல் அவசர தேவைக்கு பணம் பெற முடியும்.

ரூ.50,000-க்கு கீழ் தான் பணம் அனுப்ப முடியும். வங்கிக் கணக்கு மூலம் அனுப்பும் பணத்திற்கு உச்ச வரம்பு கிடையாது.

விடுமுறையில் இந்தியா வரும்போது கடவுச் சீட்டு மற்றும் விமான பயணச் சீட்டில் கவனிக்க வேண்டியை.

நம் கடவுச் சீட்டில் இந்தியா வரும்போது, நிறுவனமானது இரண்டு வகையான விசாக்களை உபயோகித்து நம்மை அனுப்பலாம்.

ஒன்று, நிறுவனம் நம்மை தொடர்ந்து பணி செய்ய அனுமதித்தால் EXIT-RE-ENTRY விசாவை உபயோகித்து நம்மை விடுமுறையில் அனுப்புவார்கள்.

அதாவது EXIT - என்றால  இந்தியா செல்லவும், RE-ENTRY என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், விசா தேதி - கெடு முடிவதற்கு முன் - நாம் பணிபுரியும் நாட்டுக்குத் திரும்ப வேண்டும்.

இதில் சிறு கால தாமதம் ஏற்பட்டால் கூட நம்மை நாம் பணிபுரியும் நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்கள்.
Download As PDF

VELI NAADU SELLA VENDUMAA ?-4

வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-4


பிறகு அதை பூர்த்தி செய்து, விண்ணப்பத்துடன் வெளிநாட்டு வங்கியில் காசோலை மற்றும் கடவுச் சீட்டு, விசா, work permit நகல் இவற்றை புகைப்படத்துடன் இணைத்து வங்கிக்கு அனுப்பினால், வங்கியிலிருந்து உங்கள் முகவரிக்கு வங்கி கணக்கு புத்தகம், செக் புத்தகம் வந்து விடும்.

நீங்கள் மாதா மாதம் அனுப்பும் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் சேர்ந்து விடும்.

உங்கள் குடும்பத்திற்குத் தேவையான பணத்தை செக் அனுப்பினால் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

நீங்கள் வங்கி மூலம் அனுப்பும் பணம் அனைத்தும் ரிசர்வ் பேங்க் கண்காணிப்பில் தான் உங்கள் வங்கிக்குச் செல்கிறது.

அதற்குண்டான அந்நியச் செலாவணி நம் அரசுக்குக் கிடைக்கிறது.

எனவே தான் வெளிநாடு வாழ் இந்தியருக்கு இந்திய அரசு பல  சலுகைகளை அறிவிக்கிறது.

நாம் எவ்வளவு கால ம் வெளிநாட்டில் பணி செய்து சம்பாதிப்பது என்பது முக்கியமல்ல.

சம்பாதித்த பணத்தை நல்ல முறையில் சேமித்து, பயனுள்ள பிற்கால  வாழ்விற்கு செலவு செய்யவேண்டும்.

வெளிநாடுவாழ் இந்தியருக்காக மூன்று வகையான வங்கிக் கணக்குகளை துவக்க ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.

1) NON-RESIDENT (EXTERNAL) RUPEE ACCOUNTS (NRE ACCOUNTS)

மேற்கண்ட வங்கிக் கணக்கில் வெளிநாட்டு நாணயத்தை ரூபாயாக மாற்றி நம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இதிலும் (சேவிங்ஸ்) சேமிப்பு, (கரண்ட்) நடைமுறை மற்றும் வைப்புத் தொகை கணக்குகளை வைத்துக் கொள்ளலாம்.

நாம் அனுப்பும் பணத்திற்கு வருமான வரி கிடையாது.

மேலும் இந்த வங்கிக் கணக்கை, வெளிநாட்டு நாணய கணக்காக (FCNR) (FOREIGN CURRENCY NON-RESIDENT ACCOUNTS) மாற்ற வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம்.

2) ORDINARY NON-RESIDENT ACCOUNTS (NRO ACCOUNTS)

இந்த வங்கிக் கணக்கிலும் இந்திய ரூபாயாக வரவு வைக்கப்படும். இந்தியாவில் வாழும் ஒருவருடன் சேர்த்து கூட்டு (JOINT ACCOUNT) கணக்காக வைத்துக் கொள்ளலாம்.

இந்த கணக்கில் வைத்துள்ள பணத்திற்கு வரும் வட்டியானது வரிக்கு உட்பட்டது. NRO ACCOUNT கணக்கில் அனுப்பும் பணத்திற்கு வருமான வரி கிடையாது.


3) FOREIGN CURRENCY NON RESIDENT (BANK) ACCOUNTS. (FCNR (B)ACCOUNTS)

இந்த வங்கிக் கணக்கிற்கு வெளிநாட்டிலிருந்து இந்திய ரூபாயாக மாற்றி அனுப்ப முடியாது.

வெளிநாட்டு நாணயங்களான யு எஸ் டாலர்கள், ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ், ஜப்பானிய யென், யூரோ, கனடா டாலர்கள் மற்றும் ஆஸ்திரேலியா டாலர்களாக மட்டும் அனுப்ப முடிகிற வங்கிக் கணக்காகும் இது.

தற்போது ரிசர்வ் வங்கி ஐந்து வருடங்கள் வரையிலான வைப்புத் தொகையாக இந்த கணக்கில் அனுமதிக்கிறது.

வெளிநாடு வாழ் இந்தியருக்கான தகுதி உள்ள வரை இந்த கணக்கில் வைத்துள்ள தொகையின் வட்டிக்கு வரி கிடையாது.

.......தொடரும்

Download As PDF

VELINAADU SELLA VENDUMAA ?-3

வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-3

8) கடவுச் சீட்டில் விசா பதிவாகும் முறை

நம்மை தேர்வு செய்த நிறுவனம், வேலை வாய்ப்பு நிறுவனம் நிர்வாகிகளிடமும் நமக்குரிய விசாவை கொடுத்து இருப்பார்கள். தொழில் விசாவில் இரு வகை உண்டு.

1) தனி விசா (INDIVIDUAL VISA)

2) கூட்டு விசா (GROUP VISA)

உதாரணமாக மின்-பணியாளர் பத்து பேர் ஒரு நிறுவனத்திற்கு தேவைப்பட்டால் ஒரே விசாவில் பத்து பேருக்கும் சேர்த்து இருக்கும்.

பத்து மின்-பணியாளர் தேர்வு செய்தவுடன், பத்து பேரின் கடவுச் சீட்டு, புகைப்படம், சான்றிதழ் இவற்றுடன் குரூப் விசாவையும் சேர்த்து, எந்த நாட்டிற்குச் செல்கிறோமோ, அந்நாட்டின் தூதரக அலுவலகம் உள்ள மும்பை, சென்னை, புதுதில்லி - இவற்றில் ஒரு இடத்தில் கொடுத்து கடவுச் சீட்டில் பதிவு செய்வார்கள்.

கடவுச் சீட்டில், விசா பதிவு செய்த நாளிலிருந்து மூன்று மாதத்திற்குள் நாம் வெளிநாடு சென்றுவிடவேண்டும்.

விசா தயாரானவுடன் வேலை வாய்ப்பு நிறுவனம் நம்மை தொடர்பு கொண்டு வெளிநாடு செல்ல நம்மை அழைப்பார்கள்.

பிறகு விமான பயணச் சீட்டையும், புறப்படும் தேதியையும் உறுதி செய்வார்கள்.

அந்த நாளையும் நமக்குத் தெரியப்படுத்தி, முதல் நாளே சென்னை வந்து கடவுச்சீட்டையும். விமானப் பயணச் சீட்டையும் நம்மிடம் கொடுப்பார்கள்.

(9) எந்த விமான நிலயைத்தில் இறங்கவேண்டும் மற்றும் நிறுவன ஆட்கள் நம்மை அழைத்துச் செல்வது பற்றிய விபரமும் தெரிவிப்பார்கள்.

மறக்காமல் தங்களுடைய பணிக்கான தொகையையும் பெற்றுக் கொண்டுதான் மேற்கண்டவை நமக்கு கிடைக்கும்.

இங்கு முக்கியமாக நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அது வேலை வாய்ப்பு நிறுவனம் வாங்கும் தொகை (SERVICE CHARGE) பற்றியது.

ஒருசில நிறுவனங்களை விட, மற்ற நிறுவனங்கள் வாங்கும் தொகை மிக அதிகம்.

இந்த விசயத்தில் அரசு தலையிட்டு, நிறுவனங்கள் வாங்கும் தொகையை முறைப்படுத்த வேண்டும்.

இதில் அரசின் அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் வாங்கும் தொகையைப் பின்பற்றலாம்.

விமான நிலையத்தில் நீங்கள் செய்ய வேண்டியது

நீங்கள் வெளிநாடு செல்லும் நாளும் வந்து விட்டது. பன்னாட்டு விமான நிலையத்திற்கு, விமான பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும், விமான புறப்பாடு நேரத்திற்கு மூன்று மணி நேரம் முன்னதாக (REPORTING TIME) சென்று தகவல் கொடுக்க வேண்டும்.

அப்போது தான் நீங்கள் செல்வரு உறுதி செய்யப்படும்.

(10) இமிக்ரேஷன் பகுதியில் உங்கள் கடவுச்சீட்டும், பயணச்சீட்டும் கொடுத்தவுடன், உங்களின் கடவுச்சீட்டு சரி பார்க்கப்பட்டு (IMMIGRATION CLEARENCE), உங்களுக்கு BOARDING PASS தருவார்கள்.

அத்துடன் இமிக்ரேசன் விண்ணப்பம் கொடுத்து பூர்த்தி செய்யவேண்டும் என்பார்கள்.

உங்களால் விண்ணப்பத்தை நிரப்ப முடியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கொடுத்து நிரப்ப வேண்டும்.

நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை விமான ஊர்திக்குள் உள்ளே செல்லும்போது விமான ஊழியர்கள் பெற்றுக் கொள்வார்கள்.

விமான இருக்கையில் அமர்ந்தவுடன் பாதுகாப்பு பட்டையை அணிந்து கொள்ளவேண்டும்.

விமானத்தில் உங்களுக்குத் தேவையான சைவ மற்றும் அசைவ உணவுகளை வாங்கிச் சாப்பிடலாம்.

இப்போது நாம் எந்த இடத்தில் பறந்து கொண்டு உள்ளோம் என்ற விவரம் நம் முன் உள்ள திரயை஢ல் காணலாம்.

நாம் சேருமிடம் வந்துவிட்டோ ம்.

விமானத்தில் இருந்து இறங்கியவுடன், வரிசையாக நின்று, இமிக்ரேசன் முடித்து, நமது கடவுச் சீட்டில் அந்நாட்டில் வந்து சேர்ந்ததற்கான முத்திரை குத்தப்பட்டு நம்மிடம் தருவார்கள்.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து விட்டீர்கள்.

உங்களுக்காக நீங்கள் பணி செய்யப்போகும் நிறுவனம் அனுப்பிய பிரதிநிதி கையில் நிறுவனப் பெயர் அடங்கிய அட்டையை கையில் வைத்துக் காத்திருப்பார்.

(11) ஒரு வேளை அன்று விடுமுறை தினமாக இருந்து, நிறுவனத்தின் பிரதிநிதி வரவில்லை என வைத்துக் கொள்வோம். என்ன செய்வீர்கள்?

இங்கு ஒருமுறை எனக்கு நேர்ந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வளைகுடா நாடுகளில் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமை விடுமுறை நாட்கள்.

நான் சவூதி அரேபியா சென்று இறங்கியது வெள்ளிக்கிழமை மாலை 7 மணி. அன்று விடுமுறை என்பதால் என்னை அழைத்துச் செல்லும் நபர் விமான நிலையத்திற்கு வரவில்லை.

தொலைபேசியில் தொடர்பு கொண்டால் பதில் இல்லை. என்ன செய்வது?

விமான நிலையத்தின் வெளியே சுற்றும் முற்றும் பார்த்தேன். மொழி வேறு தெரியாது.

அப்போது நான்கு தமிழ் அன்பர்கள் வாடகை வண்டியை அணுகி பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சென்று என் நிலையை விளக்கினேன்.

அன்பர் ஒருவர், 'அதற்கென்ன இன்று இரவு எங்கள் அறையில் தங்கி விட்டு, காலையில் நீங்கள் செல்லும் இடத்திற்கு வண்டி பிடித்து அனுப்புகிறோம்' - என்றார்.

அப்போது தான் எனக்கு தெம்பு வந்தது.

இரவு சாப்பாடு கொடுத்து, காலை வாடகை வண்டி பிடித்து, நான் செல்ல வேண்டிய இடத்திற்கு அனுப்பினார்கள்.

(12) நண்பர்களுக்கு என் நன்றி!

இதைப் போல் உங்களுக்கு ஒரு நிலைமை என்றால், மேற்கண்டபடி நீங்களும் சமாளிக்க வேண்டியது தான்!

நீங்கள் பணியில் சேர்ந்தவுடன், அங்கும் ஒரு மருத்துவ பரிசோதனைக்கு உங்களை அனுப்புவார்கள். அந்த மருத்துவச் சான்றிதழ், நிறுவன கடிதம், கடவுச் சீட்டு இவற்றை இணைத்து 'WORK PERMIT' - பெற அனுப்புவார்கள்.

'WORK PERMIT' - கிடைத்தவுடன் அதில் எத்தனை வருடத்திற்கு அனுமதி உள்ளதோ அதுவரை அந்நாட்டில் பணிபுரியலாம்.

நிறுவனம், தேவைப்பட்டால் மறுபடியும் 'work permit'- ஐ புதுப்பித்துக் கொள்ளும்.

நீங்கள் எங்கு வெளியே சென்றாலும், கண்டிப்பாக உங்கள் வசம் 'WORK PERMIT' வைத்திருக்க வேண்டும்.

நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய இன்னொன்று, மீண்டும் ஒரு பணி ஒப்பந்தம் கொடுத்து கையொப்பம் இடச் செய்வார்கள்.

ஏற்கனவே, நீங்கள் நேர்முகத் தேர்வு முடிந்தவுடன் பேசிய சம்பளம் மற்றும் இதர சலுகைகள் அடங்களி ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டிருப்பீர்கள்.

அதனுடைய நகலை மறக்காமல் கைவசம் வைத்திருந்து, பணியில் சேர்ந்தவுடன் கொடுக்கும் ஒப்பந்த பத்திரத்துடன் சோதித்து பார்த்து ஏதாவது வேறுபாடு உள்ளதா என பார்க்க வேண்டும்.


(13) நீங்கள் பேசிய சம்பளத்திற்கு குறைவாக இரண்டாவது ஒப்பந்தத்தில் இருந்தால் நிச்சயம் கையொப்பம் இடக்கூடாது. இதற்காக நீங்கள் வாதாடலாம்.

ஒப்பந்தம் சரி செய்தால் ஒழிய, நீங்கள் கையொப்பம் இடக்கூடாது.

இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்வது எப்படி?

நீங்கள் பணியில் சேர்ந்தவுடன் உங்கள் பெயர், அப்பா பெயர், இந்திய விலாசம், தற்போதைய நிறுவனத்தின் விலாசம், வேலையின் பெயர், கடவுச் சீட்டு எண், கடவுச் சீட்டின் நகல் ஆகியவற்றை மெயில் மூலமாகவோ அல்லது தொலை நகல் மூலமோ இந்திய தூதரகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இந்திய தூதரகத்தின் விலாசத்தை இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

உங்களைப் பற்றிய குறிப்புகளை தூதரகத்தில் பதிவு செய்து கொள்வார்கள். நீங்கள் பணிபுரியும் நாட்டில் எந்த பிரச்சினை என்றாலும் இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

உங்கள் கடவுச் சீட்டை புதுப்பிக்க மற்றும் விசா பற்றிய சந்தேகங்களும் நிவரத்தி செய்வார்கள். உங்களுக்கு அருகில் உள்ள நகரங்களுக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தூதரகங்கள் மூலம் முகாம் நடத்துவார்கள்.
Download As PDF

VELINAADU SELLA VENDUMAA ?-2

வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-2

 வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-2
பகுதி-2

(4)  மேலும் தேர்வின்போது, நாம் ஒத்துக்கொண்ட மாதச் சம்பளம் மற்றும் வேறு சலுகைகளும் சரியாகக் கிடைக்கும்.

ஏனெனில், தேர்வு முடிந்தவுடன் இங்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் இருதரப்பு கையொப்பம் இட்டு, அதன் பிரதி ஒன்றும் நமக்கு கிடைக்கும்இ

ஆனால் சில வேலை வாய்ப்பு நிறுவனங்களில் இங்கு ஒரு ஒப்பந்தமும், வெளிநாடு சென்றபின் ஒரு ஒப்பந்தமும் கொடுத்து கையொப்பம் இடும்படி வற்புறுத்தப்படுவார்கள்.

கடன் வாங்கியோ, காட்டை, வீட்டை விற்று வெளிநாடு செல்பவர்களுக்கு, வேறு வழியில்லாமல் வெளிநாட்டு நிறுவனம் வற்புறுத்தும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இடும்படி நேரிடுகிறது.

தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் மேற்கண்ட பிரச்சினை கிடையாது.

ஏதாவது பிரச்சினை என்றாலும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு சரி செய்து விடலாம்.

வெளிநாடுகளில் படித்தவர்களுக்கு மட்டும் தான் பணிவாய்ப்பு என நினைக்கக்கூடாது.

அனைத்து வகை தொழிலாளிகளுக்கும் வேலை வாய்ப்பு உண்டு. குறிப்பாக உதவியாளர், மேசன், டர்னர், வெல்டர், எலக்ட்ரீசியன் என தொழிற் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் என்ஜீனியந, டாக்டர், பேராசிரியர் அனைவருக்கும் வேலை வாய்ப்பு உண்டு.  குறைந்தது இரண்டு வருட பயிற்சி அவசியம்.


(5) வெளிநாட்டு நிறுவனத்தை தேர்வு செய்வது எப்படி?


நாம் ஒரு விளம்பரத்தைப் பார்க்கிறோம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி மற்றும் பயிற்சி நம்மிடம் உள்ளதா என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.

அடுத்து விளம்பரம் கொடுத்த வேலை வாய்ப்பு நிறுவனம் நம்பத் தகுந்ததாக மற்றும் பதிவு எண் கொடுக்கப்பட்டுள்ளதா என பார்க்கவேண்டும்.

இவை இரண்டும் திருப்தியாக இருந்தால், எந்த வெளிநாட்டு நிறுவனத்திற்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என கவனித்து, அந்த வெளிநாட்டு நிறுவனத்தைப் பற்றி அறிய, 'www.வெளிநாட்டு நிறுவனத்தின் பெயர்.com' - என்ற இணையதள முகவரியில் சென்றால், கம்பெனியின் அனைத்து விவரங்களும் நமக்குத் தெளிவாகிவிடும்.

மேலும், அந்நிறுவனத்தைப் பற்றி அறிய வேண்டுமானால், அந்த நாட்டில் உள்ள நமது வெளிநாட்டு தூதரகத்தை (INDIAN EMBASSY) தொடர்பு கொண்டு விசாரித்து தெரிந்து கொள்ளலாம் (E-MAIL).

மேற்கொண்ட அனைத்தும் நமக்கு திருப்தி அளித்தால் மட்டுமே நாம் அந்நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவேண்டும்.

இல்லையெனில் அடுத்த நல்ல நிறுவனத்திற்காக காத்திருக்கவேண்டும்.


(6) நேர்முகத் தேர்வின்போது கவனிக்க வேண்டியவை

ஆள்பாதி. ஆடை பாதி என்பது போல் முதலில் நாம் மற்றவர் கவரும் வகையில் உடை அணியவேண்டும்.

இரண்டாவது நாம் எந்த பணிக்குத் தேர்வுக்கு செல்கிறோமோ அதில் முழு அளவு திறன் படைத்தவராக இருக்கவேண்டும்.

மூன்றாவது, நம் கையில் இருக்கும் பணிச் சான்றிதழில் என்னவெல்லாம் நமக்குத் தெரியும் என குறிப்பிட்டு உள்ளோமோ அதில் தெளிவாக இருக்கவேண்டும்.

குறிப்பாக எனக்கு இந்த எந்திரத்தில் இயக்குதலும் பேணுதலும் (OPERATION AND MAINTENANCE) முழுமையாகத் தெரியும் என்று  குறிப்பிட்டிருந்தால், அந்த எந்திரத்தின் முழு பாகுபாடு நமக்கு அறிதல் வேண்டும்.

இதைவிட்டு நமக்கு இது தெரியும், அது தெரியும் என குறிப்பிட்டு, மேலோட்டமாக நுனிப்புல் மேய்த்திருந்தால் தேர்வின் முதல் சுற்றிலேயே நாம் தோல்வி அடைய நேரிடும்.

நான்காவது, நமக்கு சிறிதளவாவது  ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டும். குறைந்தபட்சம் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் புரிந்து கொள்ளும் அளவிற்காவது பதில் அளிக்கவேண்டும்.

சரி, நாம் தேர்வில் வெற்றி பெற்று விட்டடீம். அடுத்தது என்ன?


(7) மருத்துவச் சான்றிதழ் பெறும் முறை


தேர்வில் வெற்றி பெற்றவுடன், நமது கடவுச் சீட்டை வேலை வாய்ப்பு நிறுவனம் பெற்றுக் கொண்டு, நமக்கு மருத்துவச் சான்றிதழ் பெற அந்நிறுவனம் வழி செய்யும்.

அதாவது, நாம் எந்த நாட்டுக்குச் செல்லப் போகிறோமோ அந்நாட்டின் அனுமதி பெற்ற மருத்துவர்கள் இங்கு உள்ளார்கள். அவர்களிடம் சென்று, வேலை வாய்ப்பு நிறுவனம் கொடுத்த கடிதத்தை காண்பித்து, மருத்துவ பரிசோதனைக்கு தயாராகி விட வேண்டும். மருத்துவ சோதனைக்கு அந்த மருத்துவர்கள் குறிப்பிட்ட கட்டணம் வசூல் செய்வார்கள் (சுமார் ரூ.1000).

எக்ஸ்ரே, ரத்த அழுத்தம், ரத்தப் பரிசோதனை இவை அனைத்தும் முடிந்த பிறகு, கடைசியாக தலைமை மருத்துவர் நம் உடல் பகுதி முழுதும் ஏதாவது குறை உள்ளதா என பரிசோதித்து பார்ப்பார்.

பிறகு, மருத்துவ பரிசோதனைச் சான்றிதழில் (FIT) -தகுதி- என முத்திரை குத்தப்பட்டு, வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு மறுநாள் சென்றுவிடும்.

நிறுவனத்திலிருந்து உங்களுக்கு தபால் அல்லது தொலைபேசி மூலம் தகவல் கிடைத்துவிடும்.

இனி, நீங்கள் விமானத்தில் பயணம் செய்வது பற்றி கனவு காணலாம்.

அதற்கு முன் உங்கள் கடவுச் சீட்டில் 'விசா' என்ற 'பணி அனுமதி' (WORK PERMIT) எவ்வாறு பதிவாகிறது என பார்ப்போம்.
                                                                                                                                                    .......தொடரும்
-முத்து ரத்தினம்

Download As PDF

Friday, July 29, 2011

VELI NAADU SELLA VENDUMAA ?

வெளிநாடு செல்ல வேண்டுமா

 வெளிநாடு செல்ல வேண்டுமா
முகவுரை

நாம் தினமும் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒரு செய்தியை அடிக்கடி காணலாம்.
"வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி"

"மலேசியாவில் தொழிலாளர்கள் தவிப்பு"

"சவூதி அரேபியாவில் பல மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் தமிழர்கள் அவதி"

இதுபோன்ற  செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
ஏமாந்தவர்கள் உள்ளவரை, ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டுதான் இருப்பார்கள்.

இதற்கு என்ன வழி?

இதற்கு விடை காண என்னால் முயன்றவரை, என் அனுபவத்தில் இருந்து சில வழிகளை சொல்லி உள்ளேன்.
அதுமட்டுமல்லாமல் வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு எடுப்பது முதல் நமது பணி ஒப்பந்தம் முடிந்து இந்தியா வருவதுவரை என்ன செய்ய வேண்டும் என இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
புதிதாக வெளிநாடு செல்பவர்களுக்கும், ஏற்கனவே வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கும் சில வழிமுறைகளும் கூறி உள்ளேன்.
சுமார் பன்னிரண்டு வருடங்களாக, ஐந்து முறை தேர்வில் வெற்றி பெற்று, சவூதி அரேபியாவில் மின் பொறியாளராக பணிபுரிந்து வரும் நான், எவ்வாறு வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்று, முறையாக மற்றவர்களிடம் ஏமாறாமல் பொருள் ஈட்டுவது பற்றி இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதை நீங்கள் காணலாம்.

(1) கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெறும் வழி

முன்பு எல்லாம் கடவுச்சீட்டு பெற சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி சென்று பதிவு செய்து காத்திருக்க வேண்டும்.
தற்போது மாவட்டந்தோறும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கடவுச்சீட்டு பெற தனியாக அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாம் நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் கடவுச்சீட்டு அலுவலகம் சென்று பதிவு செய்தால், ஒன்று அல்லது இரண்டு மாதத்தில். காவல் துறை விசாரிப்புக்குப் பிறகு, கடவுச்சீட்டு நம் வீடு தேடி வந்துவிடும்.
அலுவலகம் செல்லும் போது நாம் மறக்காமல் எடுத்துச் செல்லவேண்டியவை;

1) ரூ.1,000-க்கான காசோலை
2) குடும்ப அடையாள அட்டை
3) பத்து பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
4) கல்விச் சான்றிதழ்
நாம் பதிவு செய்த பிறகு, நமக்கு ஒரு அடையாள எண் தருவார்கள்.
அந்த அடையாள எண் மூலம் இணையத்தின் மூலம் நம் கடவுச்சீட்டின் நிலைப்பாடு எந்த அளவில் உள்ளது, மற்றும் நமக்கு கடவுச்சீட்டு எப்போது கிடைக்கும் என தெரிந்து கொள்ளலாம்.
தற்சமயம் கோவையிலும் கடவுச்சீட்டு அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

(2) இணையதளத்தில் செல்லும் வழிமுறை
முதலில் www.tn.nic.in என்ற இணைய தளத்தில் நுழைந்து, ரீஜினல் பாஸ்போர்ட் ஆபீஸ் என்ற வலையின் மூலம், 'know your passport status' - மூலம் நமது அடையாள எண், பதிவு செய்த மாதம் வருடத்தை பதிவு செய்தால், நம் கடவுச் சீட்டின் நிலைப்பாடு எந்த அளவில் உள்ளது என அறியலாம்.
கடவுச் சீட்டு நம் கைக்கு கிடைத்தவுடன் நாம் வெளிநாடு செல்ல தயாராகி விட்டோ ம்.
அடுத்த நாம் தெரிய வேண்டியது, எந்த வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் வெளிநாடு செல்லலாம் என்பது.
தினசரிகளில் "வெளிநாடு பணிகளுக்கு ஆட்கள் தேவை" - என்ற விளம்பரத்தை நீங்கள் அடிக்கடி காணலாம்.
முக்கியமாக நாம் அந்த விளம்பரத்தில் கவனிக்க வேண்டியது, அந்த அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் அரசாங்கத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டதா, பதிவு எண் உள்ளதா என அறிய வேண்டும்.
முறையாக பதிவு செய்யாத நிறுவனம் மூலம் வெளிநாடு செல்ல ஆசைப்பட்டால், நாம் உழைத்து சேர்த்த பணம் அவ்வளவுதான்.
இதற்கும் நமது அரசாங்கம் வழி செய்துள்ளது.
சென்னையில் 'அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் நமது தமிழக அரசின் கீழ் இயங்கி வருகிறது.
இதன் முகவரி.

(3) அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்.

எண்: 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, எல் பி ரோடு, அடையாறு, சென்னை - 600 020.

தொலைபேசி எண்கள்: 044 / 244 64268 / 24464269

இணைய தள முகவரி : www.tn.gov.in
    www.southindia.com

மேற்கண்ட இணைய தள முகவரியிலும் தற்போதைய நேர்முகத் தேர்வு பற்றிய தகவல்களைப் பெறலாம்.

அரசு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்ய கடவுச்சீட்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஐந்து மற்றும் கல்வித் சான்றிதழ், பணிச் சான்றிதழ் வேண்டும்.

நமது தொழிற்சார்ந்த வேலைகளுக்குத் தகுந்தவாறு பதிவுக் கட்டணம் வசூல் செய்வார்கள்.

இந்நிறுவனம் மூலம் மூன்று முறை நமக்கு நேர்முகத் தேர்வுக்கு உதவி செய்வார்கள்.

நேர்முகத் தேர்வில் வெற்றிபெற்று தகுதி பெற்றுவிட்டால், மருத்துவ சோதனை முடித்து வெளிநாடு செல்ல தயாராகி விடலாம்.

இதற்கு ஒரு முறையான, சரியான கட்டணம் மட்டுமே பெற்றுக் கொள்கிறார்கள். கட்டணத்திற்கான ரசீதும் பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு சமயம் நம்மால் குறிப்பிட்ட நேரத்தில் வெளிநாடு செல்ல முடியாமல் நேரிட்டாலோ அல்லது நம்மை தேர்வு செய்த வெளிநாட்டு நிறுவனம்  யாதொரு காரணத்தாலோ நம்மை அழைக்க முடியாமல் போனாலோ நாம் கட்டிய கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
Download As PDF

Tuesday, July 26, 2011

KARUPPUP PANAM

பணம் என்ற ஒன்று இருந்தால் தானே கறுப்பு, சிவப்பு,
பழைய பண்ட மாற்று முறையே சிறப்பு!.
பருப்பு கொடுத்து புளி வாங்குடா தோழா,
நாட்டில் பட்டினி என்ற சொல் இராது பாரடா..!
    
வங்கி எண்ணிக்கை குறையும் பணம் போட,
கிடங்கி எண்ணிக்கை உயரும் தானியம் போட.
விளைச்சலால் தானே நாட்டில் எங்கும் பசுமை,
விலைவாசியும் குறையும் என்பது இனிமை.
    
ஆண்டி ஆவர், ஹவாலா கும்பல் விழிபிதுங்கி,
திவாலாகி போண்டி ஆவர், சுவிஸ் வங்கி !
வெள்ளை, கறுப்பானது  கயவர் மடமை,
கறுப்பை,வெளிக்கொணர்வது அரசின் கடமை.!

அன்னிய கடனில் மூழ்கி நிற்கும் டைட்டானிக்,
நம் நாடு நீர்மூழ்கி கப்பலாகி மூச்சு விடுவது,
நல்லவர் சிலர் நாட்டின் தூண்களாய் இருப்பது !
வல்லரசு தேவை, வேண்டும் முதலில் நல்லரசு

பணம் இருந்தால் தானே கறுப்பு, சிவப்பு,
பழைய பண்டமாற்று முறையே சிறப்பு!.
விளைச்சல் கொடுத்து பொருளை வாங்குடா நண்பா,
மன உளைச்சல் இன்றி வாழுடா தெம்பா..!

பணம் பத்தும் பேசும்...
பண்டாமாற்று பத்தையும் தாண்டி பேசும்...!
பொருளுக்கு பொருள் தேடி கொடு.
இருளுக்கு வழி சொல்லி விரட்டிவிடு...!

-முத்து ரத்தினம்
Download As PDF

Saturday, July 16, 2011

MRMUTHURATHINAM: PAALAI VANACH CHOLAI

MRMUTHURATHINAM: PAALAI VANACH CHOLAI: "                                 பாலைவனச்  சோலை                                           -----------------------------------------     ப..." Download As PDF

Friday, July 15, 2011

paalavam-solaivanam

பாலைவனம் சோலை வனமானது அரபு நாட்டில்,
தண்ணீரால் அல்ல, எரிபொருளால்.....!
சோலை வனம் பாலைவனமாகிடுமோ நம்நாட்டில்..?!
மணலால் அல்ல, விவசாயியின் கண்ணீரால்.....!

நாளொரு மேனியாய், விவசாயிகள் பிரச்சினை....!
கவலை கொள்வோர், கண்டுகொள்வோர் யாருமில்லை,
புலம்பல்கள் இன்னும் ஓய்தபாடில்லை...
எவன் பொருளுக்கு எவன் விலை வைப்பது...?

நாட்டின் முதுகெலும்பு விவசாயி..! சொல்றாங்க தெரியுமா...?
முதுகெலும்பு இல்லா நாடுதான் நி(ற்க)லைக்க முடியுமா...?
சோகத்தில் புலம்பினான் ஒரு விவசாயி
வந்தும் கெடுக்கின்றது வராமலும் வாட்டுகின்றது மழை..!

இதோ புலம்புகிறான் இன்னொரு விவசாயி..
நெஞ்சம் கனத்து ஏங்கிப்போகிறது,
நிம்மதியாக உறங்குவதுக்காவது,
ஆறடிநிலம் கிடைக்குமா? என்று...!.

அரசே வேண்டாம் இந்த விஷப்பரீட்சை !
உடனடி தேவை, வேளாண் அறுவை சிகிச்சை...!
விளைநிலங்களை துண்டிடும்.....
தலைகள் தண்டிக்கப்படவேண்டும்....!

மானியத்தில் அரசு தரவேண்டும் விதைநெல்,
தரகர் இன்றி வேண்டும் நேரடி கொள்முதல்,
தடையில்லா மின்சாரம்....,
விளைச்சலுக்கு மதிப்பீடு.....!

ஆம் இனி நம் மனமெங்கும் நந்தவனம்

-அன்புடன்
முத்து ரத்தினம்

Jul 14, 2011 Download As PDF

Wednesday, July 13, 2011

MAKKAL THOKAI KANAKKEDUPPU

மக்கள் தொகை கணக்கெடுப்பு
-----------------------------------------------------
( முத்து ரத்தினம் )
இந்தியா ஒரு தீபகற்பம் . மூன்று பக்கமும் கடலாலும் ,ஒரு பக்கம் பனி படர்ந்த இமயமலையாலும்

சூழப்பட்ட ,இயற்கையாகவே பாதுகாப்பு அரண் கொண்ட நாடு என்பது அனைவரும் அறிந்த ஒன்று .

இன்றைய நிலவரப்படி , அதாவது 2010 - இந்தியாவின் மக்கள் தொகை 1 .15 பில்லியன் .(1 ,150 ,000 ,௦௦௦000 ௦௦௦)

உலகின் அதிக மக்கள் தொகை உள்ள இரண்டாவது நாடு.

நம் நாடு சுதந்திரம் அடையும் பொழுது, நம் நாட்டின் மக்கள் தொகை வெறும் 350 மில்லியன் தான் .

கடந்த அறுபத்து மூன்று ஆண்டுகளில் மக்கள் தொகை மூன்று மடங்கு உயர்ந்து விட்டது.!

வரும் 2030 -ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 1 .53 பில்லியன் உயரும் என எதி பார்க்கப்படுகிறது.

தற்போது 2011 -ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது .
ஒரு நாட்டின் சரியான கணக்கு விகிதம் எப்படி எடுப்பது ?

வீடு வீடாகச் சென்று , வீட்டில் மொத்தம் எத்தனை பேர் உள்ளார்கள் ? வயது என்ன ?

என்ன வேலை செய்து கொண்டுள்ளார்கள் ? என அலசுவது பழைய முறை.!

அந்த முறையைத் தான் இன்னும் நமது கணக்கெடுப்பு அதிகாரிகள் பின் பற்றி

வருகிறார்கள்.

நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும், தற்போதைய ஓட்டுனர் உரிமம் மாதிரி
"அடையாள அட்டை " வழங்க வேண்டும் .
அந்த அடையாள அட்டையில் பெயர், பிறந்த தேதி , விலாசம் , கடவுச்சீட்டு எண்
(இருந்தால் ) பொறிக்கப்பட்டு , புகைப்படத்துடன் ஒரு அடையாள எண் கொடுத்துவிட வேண்டும்.

அந்த அடையாள அட்டையை எப்பொழுதும் ,ஓட்டுனர் உரிமம் மாதிரி , ஒவ்வொரு
இந்தியரும் கையில் வைத்திருக்க வேண்டும்.
அது எந்த நேரத்திலும் காவல் துறையின் சோதனைக்கு உட்பட வேண்டும்.

மேற்சொன்ன அடையாள அட்டையின் மூலம் சுலபமாக வேறு நாட்டவர்களை
அடையாளம் கண்டு கொள்ளலாம்.

அடையாள அட்டை சோதனைக்கு உட்படும் போது அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள
அடையாள எண்ணை ,கணினியில் டைப் செய்தால் , ஒருவருடைய முழு ஜாதகமும்
திரையில் தெரியும்.

உடனே ,இந்திய அரசு முனைப்பாக செயல்பட்டு , அடையாள அட்டை வழங்கும்
பணியை தொடங்க வேண்டும்.

இன்றைக்கு , வளர்ந்த நாடுகள் இந்த முறையைத் தான் பின்பற்றி வருகிறார்கள்.

ஒவ்வொரு குழந்தை பிறந்தவுடனும் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட
வேண்டும்.

அதே போல் ஒருவர் இறந்தாலோ உடனே மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் (நகராட்சி ,அல்லது பேரூராட்சி )தெரியபடுத்தினால் , கணினியில் அவருடைய அடையாள எண்ணை
நீக்கிவிடலாம் .

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் , அந்நிய தீய சக்திகள் இந்தியாவில் ஊடுருவதை
எளிதில் தடுத்து விடலாம்.

மற்ற நாடுகளிலிருந்து TOURISTUKALAAKAVO , பணி நிமித்தம் காரணமாகவோ இந்தியா
வருவதை தவிர்த்து விட்டு , சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறி , தொழில்
செய்து கொண்டிருக்கும் பாகிஸ்தான், பங்களாதே஦#183் ,மற்றும் நேபால் நாட்டவர்கள் அதிகம்.

குறிப்பாக மேற்கு வங்கத்தில் , கல்கத்தாவில் பங்களாதே஦#183் நாட்டைச் சேர்ந்தவர்கள்
அதிகமாக குடியேறி உள்ளனர்.

கா஦#183்மீர் வழியாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவி வந்து
விடுகின்றனர்.
நேபாளிலிருந்து ,இந்தியாவின் கோரக்பூர் வழியாக இந்தியாவிற்குள் வந்து தங்கி உள்ளனர்.

எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தி , எல்லைசோதனை சாவடிகளை தீவிர
கண்காணிப்பில் வைத்து இருந்தால் , மேற்சொன்ன அடையாள அட்டை முறையும்
நடைமுறைபடுத்திவிட்டால் நூறு விழுக்காடு மக்கள் தொகை கணக்கு நமக்கு
கிடைத்துவிடும்.

இதே மாதிரி , வன இலாகாவினரும் , வன விலங்குகள் எண்ணிக்கையை கணக்கெடுப்பதில் , உதாரணமாக , புலிகளின் எண்ணிக்கையை ,புலியின் காலடி
தடத்தை வைத்து பழைய முறையே பின் பற்றி வருகின்றனர்.

நாடும் , அறிவியலும் வளர்ந்துவிட்ட நிலையில் , நாம் நவீன முறையில் -
ரேடார் (RADAR ) மூலம் விலங்குகள் கணக்கெடுப்பு நடத்த முடியும் .

அரசு நவீன கருவிகளை இறக்குமதி செய்து ,சரியான திட்டங்கள் மூலம் ,சுலபமான முறையில் , மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க ஆவன செய்ய வேண்டும் ,.

------------------------------------------------- Download As PDF

Sunday, July 10, 2011

EAN ?

ஏன் ?
--------------
முத்து ரத்தினம்
-----------------------------

என் விழியிரண்டும் மூட மறுக்குது , ஏன் ?

என் எதிரில் நீ இருந்தால் !

மூடினாலும் தூக்கம் வர மறுக்குது , ஏன் ?

என் எதிரில் உன் பிம்பம் !.

சாவை கூட என் மனம் ஏங்குது , ஏன் ?

எமன் பாசக்கயிறாய் நீ இருந்தால் !.

உன்னுடனே நானும் சேர்ந்து சுற்றுவேன் , ஏன் ?

பூமியாக நீ இருந்தால் !.

உன் பார்வை திரும்பும் இடமெல்லாம் என் பார்வை , ஏன் ?

சூரியனாக நீ , சூரியகாந்தியாக நான் !

கண்ணே , நானே உன்னை அனைபபேன் , ஏன் ?

நெருப்பாக நீ , கார்பன்-டை - ஆக்சைடாக நான். !

--------------------------------------------------- Download As PDF

MAKKAL THOKAI KANAKKEDUPPU

மக்கள் தொகை கணக்கெடுப்பு
-----------------------------------------------------
( முத்து ரத்தினம் )
இந்தியா ஒரு தீபகற்பம் . மூன்று பக்கமும் கடலாலும் ,ஒரு பக்கம் பனி படர்ந்த இமயமலையாலும்

சூழப்பட்ட ,இயற்கையாகவே பாதுகாப்பு அரண் கொண்ட நாடு என்பது அனைவரும் அறிந்த ஒன்று .

இன்றைய நிலவரப்படி , அதாவது 2010 - இந்தியாவின் மக்கள் தொகை 1 .15 பில்லியன் .(1 ,150 ,000 ,௦௦௦000 ௦௦௦)

உலகின் அதிக மக்கள் தொகை உள்ள இரண்டாவது நாடு.

நம் நாடு சுதந்திரம் அடையும் பொழுது, நம் நாட்டின் மக்கள் தொகை வெறும் 350 மில்லியன் தான் .

கடந்த அறுபத்து மூன்று ஆண்டுகளில் மக்கள் தொகை மூன்று மடங்கு உயர்ந்து விட்டது.!

வரும் 2030 -ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 1 .53 பில்லியன் உயரும் என எதி பார்க்கப்படுகிறது.

தற்போது 2011 -ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது .
ஒரு நாட்டின் சரியான கணக்கு விகிதம் எப்படி எடுப்பது ?

வீடு வீடாகச் சென்று , வீட்டில் மொத்தம் எத்தனை பேர் உள்ளார்கள் ? வயது என்ன ?

என்ன வேலை செய்து கொண்டுள்ளார்கள் ? என அலசுவது பழைய முறை.!

அந்த முறையைத் தான் இன்னும் நமது கணக்கெடுப்பு அதிகாரிகள் பின் பற்றி

வருகிறார்கள்.

நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும், தற்போதைய ஓட்டுனர் உரிமம் மாதிரி
"அடையாள அட்டை " வழங்க வேண்டும் .
அந்த அடையாள அட்டையில் பெயர், பிறந்த தேதி , விலாசம் , கடவுச்சீட்டு எண்
(இருந்தால் ) பொறிக்கப்பட்டு , புகைப்படத்துடன் ஒரு அடையாள எண் கொடுத்துவிட வேண்டும்.

அந்த அடையாள அட்டையை எப்பொழுதும் ,ஓட்டுனர் உரிமம் மாதிரி , ஒவ்வொரு
இந்தியரும் கையில் வைத்திருக்க வேண்டும்.
அது எந்த நேரத்திலும் காவல் துறையின் சோதனைக்கு உட்பட வேண்டும்.

மேற்சொன்ன அடையாள அட்டையின் மூலம் சுலபமாக வேறு நாட்டவர்களை
அடையாளம் கண்டு கொள்ளலாம்.

அடையாள அட்டை சோதனைக்கு உட்படும் போது அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள
அடையாள எண்ணை ,கணினியில் டைப் செய்தால் , ஒருவருடைய முழு ஜாதகமும்
திரையில் தெரியும்.

உடனே ,இந்திய அரசு முனைப்பாக செயல்பட்டு , அடையாள அட்டை வழங்கும்
பணியை தொடங்க வேண்டும்.

இன்றைக்கு , வளர்ந்த நாடுகள் இந்த முறையைத் தான் பின்பற்றி வருகிறார்கள்.

ஒவ்வொரு குழந்தை பிறந்தவுடனும் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட
வேண்டும்.

அதே போல் ஒருவர் இறந்தாலோ உடனே மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் (நகராட்சி ,அல்லது பேரூராட்சி )தெரியபடுத்தினால் , கணினியில் அவருடைய அடையாள எண்ணை
நீக்கிவிடலாம் .

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் , அந்நிய தீய சக்திகள் இந்தியாவில் ஊடுருவதை
எளிதில் தடுத்து விடலாம்.

மற்ற நாடுகளிலிருந்து TOURISTUKALAAKAVO , பணி நிமித்தம் காரணமாகவோ இந்தியா
வருவதை தவிர்த்து விட்டு , சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறி , தொழில்
செய்து கொண்டிருக்கும் பாகிஸ்தான், பங்களாதே஦#183் ,மற்றும் நேபால் நாட்டவர்கள் அதிகம்.

குறிப்பாக மேற்கு வங்கத்தில் , கல்கத்தாவில் பங்களாதே஦#183் நாட்டைச் சேர்ந்தவர்கள்
அதிகமாக குடியேறி உள்ளனர்.

கா஦#183்மீர் வழியாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவி வந்து
விடுகின்றனர்.
நேபாளிலிருந்து ,இந்தியாவின் கோரக்பூர் வழியாக இந்தியாவிற்குள் வந்து தங்கி உள்ளனர்.

எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தி , எல்லைசோதனை சாவடிகளை தீவிர
கண்காணிப்பில் வைத்து இருந்தால் , மேற்சொன்ன அடையாள அட்டை முறையும்
நடைமுறைபடுத்திவிட்டால் நூறு விழுக்காடு மக்கள் தொகை கணக்கு நமக்கு
கிடைத்துவிடும்.

இதே மாதிரி , வன இலாகாவினரும் , வன விலங்குகள் எண்ணிக்கையை கணக்கெடுப்பதில் , உதாரணமாக , புலிகளின் எண்ணிக்கையை ,புலியின் காலடி
தடத்தை வைத்து பழைய முறையே பின் பற்றி வருகின்றனர்.

நாடும் , அறிவியலும் வளர்ந்துவிட்ட நிலையில் , நாம் நவீன முறையில் -
ரேடார் (RADAR ) மூலம் விலங்குகள் கணக்கெடுப்பு நடத்த முடியும் .

அரசு நவீன கருவிகளை இறக்குமதி செய்து ,சரியான திட்டங்கள் மூலம் ,சுலபமான முறையில் , மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க ஆவன செய்ய வேண்டும் ,.

------------------------------------------------- Download As PDF