Tuesday, May 1, 2012

'நிலத்தடி நீர் - ஒரு பார்வை'

உலகின் தண்ணீர் தேவையை (நிலத்தடி நீரானது) இருபது சதவீதம் தீர்த்து வைக்கிறது, நிலத்தடி நீர்.  உலகின் நிலத்தடி நீர் எந்த அளவு உள்ளதோ அதே அளவு கிட்டத்தட்ட சுத்தமான நீர் பனிப்பாறைகளிலும், ஐஸ் கட்டிகளாகவும் உள்ளது. வடதுருவம் மற்றும் தென்துருவம் இதில் அடக்கம்.

நிலத்தடி நீரை பெரும்பாலும் நாம் விவசாயத்திற்கு பயன்படுத்துகிறோம். ஆனால் பல இடங்களில் குடிநீராகவும் பயன்படுத்துவது (சுத்தப்படுத்தாமல்) அபாயகாரமானது.

ஏனெனில் அதில் 25 சதவீதம் ஆர்செனிக் என்ற நச்சுப் பொருள் கலந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நகரம், அமெரிக்காவில் உள்ள LOVE CANEL (லவ் கேனல்) என்ற இடம்.

1978-ல், அந்நகரத்தில் வாழும் மக்களுக்கு, அவர்களுக்கு குடிநீரால் (நிலத்தடி நீர்) புற்றுநோய் மற்றும் பிறப்பில் ஊனம் கண்டறியப்பட்டுள்ளது.

நிலத்தடி நீரை கண்டிப்பாக சுத்தப்படுத்தாமல் குடிநீராக பயன்படுத்துவது முறையல்ல.

'சிறு துளி பெருவெள்ளம்' - நாம் அனைவரும் அறிந்த பழமொழி. அதற்கேற்ப நாம் அனைவரும் கூட்டு முயற்சியுடன் நீரை சிக்கனமாக செலவழித்தால் ஒழிய, தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

சமீபத்தில் கோவையில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அன்பர் ஒருவர் பொது மேடையில், ஐந்து லிட்டர் நீரில் குளித்து சாதனைபுரிந்து, நீரின் தேவையை அனைவரம் புரிந்து கொள்ள வலியுறுத்தினார். அவர் தொழில் ஆடு மேய்ப்பது!

அரசாங்கமும் மக்களுக்கு இதுபோன்ற தண்ணீரின் அத்தியாவசியத்தை பற்றி கொண்டு செல்ல வேண்டும்.

தண்ணீர் நமக்கு போதுமான அளவு இருக்கிறது. ஆனால் அதை பயன்படுத்தும் முறைதான் நமக்குத் தெரிவதில்லை.

ஐ.நா-வின் கூற்றுப்படி ஒருவருக்கு, ஒரு நாளைக்கு ஐம்பது லிட்டர் நீர் தேவைப்படுகிறது. அதாவது குடிக்க, சமைக்க, துணி துவைக்க, குளிக்க.  நீர் தேவையை அதிகப்படுத்த, நாம் குறைக்க வேண்டியது மக்கள் தொகை பெருக்கத்தை!

இவ்விஷயத்தில் நம் அரசாங்கம் பெருமளவு அக்கறை எடுத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, வருமுன் காப்போம் என்ற திட்டத்தின்படி, மழை வருமுன் ஏரி, குளங்கள் ஆகியவற்றை தூர்வாரி தயார் நிலையில் வைத்திருந்தால், வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தி நீரை சேமித்து, சுத்தப்படுத்தி உபயோகிக்கலாம்.

ஆனால் நம் தமிழ்நாட்டில் ஏரி-குளங்கள் அரசியல்வாதிகளின் தலையீட்டால் தற்போது வீடு மற்றும் தொழிற்சாலைகள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.

தற்போது ஏரி-குளங்களை பார்க்க முடியவில்லை. மழைக் காலங்களில், அவசரகால நடவடிக்கை மற்றும் போர்க்கால நடவடிக்கை என வந்தபின் கையை பிசைந்து, வேடிக்கை பார்ப்பதைவிட முன்னெச்சரிக்கையாக 'வருமுன் காப்போம்' திட்டத்தை அரசு கவனத்தில் கொண்டால் நல்லது.

நீரை சுத்தப்படுத்தி, உபயோகிக்கும் முறை பல இருந்தாலும் முக்கியமான சிலவற்றைப் பார்ப்போம்.

பெரும்பான்மையான நீர் தேவைப்படும் பட்சத்தில் இம்முறை மிக முக்கியமான ஒன்று. இந்தியாவும், சீனாவும் தற்போது இம்முறைக்கு அதிக கவனம் கொண்டுள்ளது வரவேற்கவேண்டியது.

நாம் நீருக்காக (Raw Water) காசு செலவழிக்க வேண்டியது இல்லை. ஆனால் இம்முறைக்கு முதலீடு அதிகம். (Initial Capital)

நதிநீர் இணைப்புக்கு ஆகும் செலவைவிட இது ஒன்றும் அதிகமல்ல. நம் தமிழ்நாட்டில் தண்ணியினால் (Tasmac) வரும் பணத்தை குடி தண்ணீருக்காக உபயோகப்படுத்தலாம். பல இலவச திட்டங்களை நிறுத்திவிட்டு!

விவசாயிகளும் பெருமகிழ்ச்சி அடைவர்.

உலகிலேயே மிகப்பெரிய கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் 'JA BELL ALI DESALINATION PLANT' - ஐக்கிய அரபு நாட்டில் உள்ளது.

'INTERNATIONAL DESALINATION ASSOCIATION' - கூற்றுப்படி,  2008 வரை உலகில் 13080 - குடிநீர் சுத்தமாக்கும் நிலையங்கள் உள்ளது.

இதன் மூலம் ஒரு நாளைக்கு 12 மில்லியன் காலன் தண்ணீர் சுத்தப்படுத்தப்படுகிறது.

கடல் நீரை சுத்தப்படுத்தும் முறை வளர்ந்த் நாடுகளான குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் மற்றும் சவூதி அரேபியாவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுழற்சி முறை:

நாம் உகயோகித்த நீரை வீணாக்காமல் சுழற்சி முறையில் (Water Treatment) நீரை சுத்தமாக்கி குடிநீராகவும், விவசாய பயன்பாட்டிற்காகவும் செலவழிக்கலாம்.

புதிய அறிவியல் நுட்பத்துடன் கூடிய தண்ணீரை சிக்கனமாக உபயோகிக்கும் முறைகளைப் பார்ப்போம்.

(1) விவசாயத்திற்கு 'Drip Irrigation' - எனப்படும் சொட்டு நீர் பாசன முறையைப் பயன்படுத்தினால் பெருமளவு நீரை சேமிக்கலாம்.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெரும்பான்மையான விவசாயிகள் சொட்டு நீர் பாசன முறைக்கு மாறி இருப்பது வரவேற்கத்தக்கது.

மேலும் இம்முறையில் Low-Pressure Sprinklers எனப்படும் குறைவான  அழுத்தத்துடன் கூடிய தண்ணீர் ஸ்பிரே செய்யும் முறை குறிப்பிடத்தக்கது.

இனி அசுத்தமான குடிநீரால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்.

உலக வங்கி, உலகில் 88% நோய்கள் அசுத்தமான குடிநீரால்தான் உண்டாகிறது என வலியுறுத்துகிறது.

அதாவது,

(1) நான்கு பில்லியன் மக்கள் டயாரியா - என்ற நோயால் பாதிக்கப்பட்டு, ஆறு மில்லியன் குழந்தைகள் இறந்துள்ளனர்.

(2) 300 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

(3) 200 மில்லியன் மக்கள் 'SCHISTOSMIASIS' - என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள் தான் அதிகம் என்பது வேதனையான செய்தி.

யுனஸ்கோவின் எச்சரிக்கைப்படி,

வருடத்திற்கு 500 மில்லியன் டன் உலோகங்கள், சால்வன்ட். toxie sludge - தண்ணீருடன் கலக்கிறது. 70 சதவீத தொழிற்சாலைக் கழிவுகள் நதிகளிலும், ஏரிகளிலும் கலந்து நீரை அசுத்தப்படுத்துகின்றன.

அரசாங்கம் மிக முனைப்புடன் செயல்பட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
Earth Day Network-ன் விவரப்படி, ஆர்சனிக் (நச்சுப் பொருள்) கலந்த நிலத்தடி நீர் அர்ஜைன்டைனா, பங்களாதேஷ், சிலி, சீனா, இந்தியா, மெக்சிகோ மற்றும் தாய்லாந்து நாட்டில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 50 சதவீதம் நிலத்தடி நீரில் பெஸ்டிசைட்ஸ் நச்சுப் பொருள் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அடுத்து ஐம்பது ஆண்டுகளில் உலக மக்கள் தொகை மேலும் 40 சதவீதத்திலிருந்து 50%வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு, தொழிற்சாலை மற்றும் மற்ற துறைகளின் வளர்ச்சி என கணக்கெடுத்தால், நீர் தட்டுப்பாடு - தேவை அபாயகரமானதாக இருக்கும்.

நிலத்தடி நீர் பூமிக்கு வெளியே வந்து மட்டும் நமக்கு நன்மை செய்வது மட்டுமல்ல. பூமிக்கு அடியிலும் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்துகிறது.

சில இடங்களில் 50 டிகிரி பாரன்ஹீட் /10 டிகிரி வரை வெப்பம் உள்ள நிலையில் நிலத்தடி நீர் உள்ளது.

நிலத்தடி நீர் ஒரு இடத்தில் நிலையாக இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாறுவதும் உண்டு.

அதே நேரத்தில் சீதோஷ்ண நிலை மற்றும் பருவகாலம் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு நிலத்தின் மட்டத்திலிருந்து கீழே செல்வதும் உண்டு.

தண்ணீரை சேமிப்போம்..! வளமாக வாழ்வோம்..!
Download As PDF

No comments:

Post a Comment