Saturday, July 30, 2011

veli naadu sella vendumaa ?-5

வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-5


 வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-5
வெளிநாடு வாழ்க்கை முடிந்து, முடிவாக இந்தியா வந்து நிரந்தரமாக தங்குவதாக இருந்தால், வ்ங்கியுடன் தொடர்பு கொண்டு மேற்கண்ட அயல்நாடு வாழ் இந்தியருக்கான வங்கிக் கணக்கை, ORDINARY ACCOUNT ஆக மாற்றிக் கொள்ளலாம்.

வங்கிகள் RESERVE BANK OF INDIA - விற்கு இதனை தெரியப்படுத்தி விடும்.

மேலும் தற்போது 'SPEED CASH'- எனப்படும் உடனடியாக பணம் அனுப்பும் வசதியும் தற்போது உள்ளது.

வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணம் இரண்டு மணி நேரத்தில் இந்தியாவில் பெற்றுக் கொள்ளலாம்.

அதாவது வெளிநாட்டு வங்கிகளில் 'speed cash' முறையில் அனுப்பிய பணத்தை இந்தியாவில் WESTERN UNION MONEY TRANSFER' மூலம் நமது தபால் நிலையங்களிலோ அல்லது இதனுடைய ஏஜெண்ட்டுகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

நாம் பணம் அனுப்பிய ரசீது-வில ஒரு அடையாள எண் மற்றும் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்திய தபால் நிலையத்தில் எந்த ஊரிலும் மற்றும் 'WESTERN UNION MONEY TRANSFER'-ஏஜெண்டுகளிடமும் யார் பெயருக்கு பணம் அனுப்புகிறோமோ - அவருடைய அடையாள அட்டையைக் காண்பித்து உடன் பணம் பெற்றுக் கொள்ளலாம்.

இதன் மூலம் நமக்கு கால  தாமதம் ஏற்படாமல் அவசர தேவைக்கு பணம் பெற முடியும்.

ரூ.50,000-க்கு கீழ் தான் பணம் அனுப்ப முடியும். வங்கிக் கணக்கு மூலம் அனுப்பும் பணத்திற்கு உச்ச வரம்பு கிடையாது.

விடுமுறையில் இந்தியா வரும்போது கடவுச் சீட்டு மற்றும் விமான பயணச் சீட்டில் கவனிக்க வேண்டியை.

நம் கடவுச் சீட்டில் இந்தியா வரும்போது, நிறுவனமானது இரண்டு வகையான விசாக்களை உபயோகித்து நம்மை அனுப்பலாம்.

ஒன்று, நிறுவனம் நம்மை தொடர்ந்து பணி செய்ய அனுமதித்தால் EXIT-RE-ENTRY விசாவை உபயோகித்து நம்மை விடுமுறையில் அனுப்புவார்கள்.

அதாவது EXIT - என்றால  இந்தியா செல்லவும், RE-ENTRY என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், விசா தேதி - கெடு முடிவதற்கு முன் - நாம் பணிபுரியும் நாட்டுக்குத் திரும்ப வேண்டும்.

இதில் சிறு கால தாமதம் ஏற்பட்டால் கூட நம்மை நாம் பணிபுரியும் நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்கள்.
Download As PDF

No comments:

Post a Comment