Saturday, July 9, 2011

                                                  மனித நேயம்
                                             ---------------------------

         1945  -ம ஆண்டு .
             
                        ஜப்பானின் வரலாற்றில்  மறக்கமுடியாத  ஆண்டு .
           இரண்டாம் உலகப்போரின்  முடிவில் அமெரிக்க  நாடானது , ஜப்பானை  அடி பணிய வைக்க   சீனா , மற்றும் uk  நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து , ஜப்பானின் ஹிரோஷிமா , மற்றும்  நாகசாகி  நகரங்களின் மேல் அணுகுண்டு வீசி  தாக்கியது .
                  அணுகுண்டு வீச்சால்  ஏற்பட்ட பாதிப்பு  மனித வரலாற்றில்  மிகவும் மறக்க முடியாத வடு ஆகி விட்டது . உலக மக்கள் அனைவரும்  கண்ணீர் சிந்தினர் .
                       ஆகஸ்ட் , 6 ,  1945 , மற்றும் ஆகஸ்ட்  9 , 1945 ,-ம ஆண்டு இருமுறை    ஹிரோஷிமா    நாகசாகி நகரங்களை  அணுகுண்டு தாக்கியது .

            ஹிரோஷிமாவை  தாக்கிய அணுகுண்டு " லிட்டில் பாய் "- நாகசாகியை தாக்கிய அணுகுண்டு "fat man" -
             இதனால்   ஹிரோஷிமாவின்  மக்கள் தொகை  இழப்பு -90000 -லிருந்து 166000  வரையிலும் ,
         நாகசாகியின்  மக்கள் தொகை இழப்பு - 60000  -லிருந்து 80000  வரையிலும் என  கணக்கிடப்பட்டுள்ளது .
                அணுவின்  கதிர் வீச்சால்  பின்னால் ஏற்பட்ட  பாதிப்பு  வேதனைக்குரியது .

                கான்சர் ,மற்றும் லுக்கும்யா நோயால்  பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் .
 இவ்வளவு பாதிப்புகள் இருந்தும் , அத்தனைக்கும்  ஈடு கொடுத்து  , குறுகிய
   காலத்தில் , தன் உழைப்பால்  உலக நாடுகளின் பார்வையை தன் பக்கம் திருப்பியது   ஜப்பான் .
  அதி நவீன எலக்ட்ரிகல் , எலக்ரானிக்  பொருட்களில்  நம்பர்  ஒன் -ஆக  விளங்கியது ,ஜப்பான் .
       அது மட்டுமல்ல , உலக நாடுகளில்  மோட்டார்  உற்பத்தியில் முதல் தரமாக  விளங்கி வந்தது .

                  இன்று  இரண்டாம் உலகப் போருக்குப்பின்  இயற்கையின் சீற்றத்தால் சுனாமி ,
  மற்றும் நில அதிர்ச்சியால்  பாதிக்கப்பட்டு , 1945 -ம ஆண்டைப் போலவே 2011 - ம் ஆண்டும்
    ஜப்பானுக்கு சோதனையான  ஆண்டாக மாறிப் போனது .
           பத்தாயிரத்துக்கும்  அதிகமான மக்கள் பாதித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது ,.
     சுனாமி , பத்து  மீட்டருக்கும் உயரத்தில் அலைகள் மூலம் தன் சீற்றத்தை  காண்பித்து  ஜப்பானை அழித்தது.
         நில அதிர்வும்  8 .9  ரிக்டர் ( magnitude ) அளவில் பாதித்து அழிவை ஏற்படுத்தியது .
           அது மட்டுமல்ல ! இச் சீற்றத்தில்  ஜப்பானிலுள்ள  மிக முக்கிய அணு உலைகளில  ஏற்பட்ட கசிவால் , மூன்று இலச்சத்திற்கும் அதிகமான மக்கள் ஊரை விட்டு  வெளியேற்றப்பட்டனர் .

         இங்கு நாம் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயம் ,
    இரண்டாம் உலகப் போரில் எந்தெந்த நடுகல் ஜப்பானின் மீது விரோதம்
 கொண்டு , அணுகுண்டு வீச்சால் ,ஜப்பான் மக்களை அழித்ததோ,
            அதே நாடுகளான சீனா , அமெரிக்கா, மற்றும் uk  ஆகியவை ,
  தங்கள் பங்காக  பாதுகாப்பாக ராணுவ  வீரர்களையும், உபகரணங்களையும்
   மற்றும் அணு உலைகளில் ரியாக்டர் (reactor ) மூலம் ஏற்பட்ட வெப்பத்தை தணிக்க கூலன்ட்களை ( coolant ) அனுப்பி உதவி செய்தது ,.
  உணவு ,மற்றும் போர்வைகளையும் அனுப்பி வைத்தது .

  இதில் ஆப்கானிஸ்தானும் தன் பங்குக்கு  $ 50000  அனுப்பியது .
       மனித நேயம்  இன்னும் உயிரோடு தான் உள்ளது .
     விரைவில் ஜப்பான் தலை நிமிர்ந்து  நிற்கும் ! சந்தேகமில்லை .! Download As PDF

No comments:

Post a Comment