Saturday, July 9, 2011

NILAVIL NAAN

நிலவில் நான் (முத்து ரத்தினம் )
-----------------------------------

எனக்கொரு இடம் வேண்டும் அந்த நிலவில்,

நிற்கக்கூட இடமில்லை இந்த பூமியில் .

தேய் பிறையில் வருவேன் இங்கு விடுமுறையில்,

வளர் பிறையில் செல்வேன் அங்கு இன்பக்களிப்பில்.

பாட்டி வடை சுட்ட கதை ஒன்றுண்டு அந்நாளில் ,

நாயர் டீ கடை உண்டு நிலவில் இந்நாளில் .

நிலாச்சோறு உண்டு மகிழ்வோம் பௌர்ணமியில் ,

மாதமொருமுறை விடுப்பு அவசியம் அமாவாசையில் .

ஜாதி , மத பேதமின்றி அனைவரும் குடியேறுவோம் ,

உலகின் "மாதிரி" சமத்துவபுரம் அங்கு அமைப்போம் .

ஊழலுக்கு எதிரான சட்டங்கள் இயற்றுவோம் ,

தன்னலமற்ற தலைவர் பலரை உருவாக்குவோம்.

----------------------- Download As PDF

No comments:

Post a Comment