Saturday, July 30, 2011

VELI NAADU SELLA VENDUMAA ?-10

வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி - 10

 வெளிநாடு செல்ல  வேண்டுமா? பகுதி - 10
நிறைவு பகுதி

பெரும்பாலும் உங்களுடைய ஒரு மாத சம்பளம் நிறுவனத்திடம் இருக்குமாறு, நிறுவனம் உஷாராக இருக்கும். நீங்கள் முடிவாக (EXIT) செல்லும்போது தான் உங்களுடைய சம்பள பிடித்தங்கள் அனைத்தும் கிளியர் செய்து அனுப்புவார்கள்.

உங்கள் தகுதிக்கும், திறமைக்கும் அதற்குரிய சம்பளமும் இல்லாமல் நீங்கள் வெளிநாட்டிற்கு வரக்கூடாது.

உங்களை அனுப்பும் ஏஜென்சிகள், உங்களுடைய அவசரத்தைப் பார்த்து. நீங்கள்  அங்கு செல்லுங்கள். ஓவர்டைம் உண்டு, இன்கிரிமெண்ட் உண்டு என பொய் சொல்லி விமானத்தில் ஏற்றி அனுப்பி விடப் பார்ப்பார்கள்.

ஒப்பந்த பத்திரத்தில் (Agreement) அனைத்தும் உங்களுக்கு திருப்தியாக இருந்தால் ஒழிய கையெழுத்து இடக்கூடாது. அதே நேரம் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களும் அதில் கையெழுத்து இட்டிருக்கவேண்டும்.

எனக்குத் தெரிந்து, சவூதி அரேபியாவில் ஆடு மற்றும் ஒட்டகம் பராமரிக்க ஐடிஐ முடித்தவர்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி!

வெளிநாடு சென்றால் நிறைய சம்பாதிக்கலாம் என்பது உண்மைதான்! அதற்காக அவசரப்படாமல், முறையாக நல்ல வேலை வாய்ப்பு நிறுவனங்களை அணுகி, சர்வீஸ் சார்ஜ் அதிகம் வாங்காத நல்ல நிறுவனங்கள் மூலம், நல்ல வேலையாக தேர்ந்தெடுத்து, நமக்கு உணவு தங்கும் இடம் இலவசமாக தரும் நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, சம்பளமும் சரியாக தரும் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து  வெளிநாடு வந்தால் நிறைய சம்பாதிக்கலாம். உங்கள் குடும்பமும் வசதியாக இருக்கும்.

சில நாடுகளுக்கு நாம் பணிக்குச் செல்வதை தவிர்த்து விட வேண்டும். குறிப்பாக மலேசியா, கொரியா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு நாம் பணிக்குச் சென்றால், இன்றும் அங்கு கொத்தடிமை முறை இருப்பதாக அங்குள்ள நண்பர்கள் மூலமாகவும், செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் மூலமாகவும் அறிகிறோம்.

அப்படி செல்வதாக இருந்தால் கூட ஒரு தடவைக்கு பல தடவை.. நான் முன்பு சொன்ன இணைய தளம் மூலமாகவும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, நமக்கு திருப்தி ஏற்பட்டால் தான் பணிக்குச் செல்ல வேண்டும்.

நம்பகத்தன்மை இல்லாத அயல்நாடு வேலைக்கு அனுப்பும் ஏஜென்சியை நம்பி அங்கு சென்று அவஸ்தை படக்கூடாது.

இன்னொரு முக்கியமான விஷயம். பெண்கள் அயல்நாடுகளுக்கு பணிக்குச் செல்லும்போது கூடுதல் விழிப்புணர்வு தேவை.

டாக்டர், நர்ஸ் போன்ற பணிகளுக்கு பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகம்.

எந்த நாட்டிற்கும், வீட்டு பணிகளுக்கு என செல்லும்போது பெண்கள் அதிக இன்னல்களுக்கு ஆளாவதாக சொல்லக் கேள்வி. அதிக வேலைப் பளு, பாலியல் தொந்தரவுகள் போன்ற கொடுமைகளை அவர்கள் அனுபவிக்கிறார்கள். நாலைந்து மாதங்களுக்கு ஒரு முறை சம்பளம்; சமயத்தில் அடி உதை ஆகியவையும் உண்டு.

எனவே  பெண்களே உஷார்!
Download As PDF

VELI NAADU SELLA VENDUMAA ?-9

வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி - 9


 வெளிநாடு செல்ல  வேண்டுமா? பகுதி - 9
நாம் கொடுக்கும் குடும்ப விசாரணை ஏற்கனவே வந்திருக்கும் விசாவுடன் சரிபார்த்து, மனைவி மற்றும் குழந்தைகளின் கடவுச்சீட்டில் (Passport) முத்திரை செய்வார்கள்.

கடவுச்சீட்டில் முத்திரை செய்யவும், ஏஜென்சிக்கு சர்வீஸ் தொகையாக பணம் தரவேண்டும்.

குடும்ப விசாவுடன் மனைவி, குழந்தைகள் கடவுச்சீட்டுக்கள் கைக்கு கிடைத்தவுடன் விமான பயணச்சீட்டு பெற்று, தேதியை உறுதி செய்யவேண்டும். இவர்கள் நீங்கள் பணிபுரியும் நாட்டில் விமான நிலையத்திற்கு வந்தவுடன், நீங்கள் சென்று, உங்கள் அடையாள (Work Permit) அங்குள்ள அதிகாரிகளிடம் காண்பித்து, மனைவி குழந்தைகளை உங்கள் இருப்பிடத்திற்கு அழைத்து வரலாம்.

வாழ்க வளமுடன்!


வேலை  வாய்ப்பு உள்ள தொழில்கள்



வளைகுடா நாடுகளில் அடிப்படை தொழில்கள் தவிர, தொழிற்பயிற்சி முடித்து (I.T.I)  டர்னர், வெல்டர், பிட்டர், எலக்ட்ரீசியன் போன்ற தொழில்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு உண்டு.

மேற்கத்திய நாடுகளில் ஐ.டி எனப்படும் கணினி தொழிற் சம்பந்தமான வேலைகளுக்கு வாய்ப்பு முதலில் அதிகமாக இருந்தாலும், தற்போது பாதியாக குறைந்து உள்ளது.

டாக்டர், என்ஜீனியர், நர்ஸ் போன்றவர்களுக்கு தங்களுடைய அடிப்படை படிப்புடன் மாஸ்டர்ஸ் டிகிரி (Master's Degree) எனப்படும் கூடுதல் தகுதி, உதாரணமாக MBBS உடன் MS  படிப்பும் இருந்தால் கூடுதல் உடனடி வேலை வாய்ப்புகள் உள்ளன.

என்ஜீனியர் படிப்பிலும் கூடுதலாக M.B.A மற்றும் M.E படிப்பு இருந்தால் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஆஸ்திரேலியா, துபாய் போன்ற நாடுகளில் தற்போது வேலை வாய்ப்பு குறைந்தாலும், சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன் போன்ற நாடுகளில் இன்றும் அதே வேலை வாய்ப்பு இருந்து கொண்டேதான் உள்ளது.

படிப்புடன், வேலைத் திறமையும் இருந்துவிட்டால் போதும் உலகத்தின் எந்த மூலையிலும்  நாம் பெருமையுடன் அதிக வருமானத்துடன் வலம் வரலாம்.

இந்த விஷயத்தில் உலகத்தில் தமிழன் முதல் இடத்தில் இருக்கிறான் என்பது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம்.

கீழ்கண்ட  நிறுவனங்களில் நிரந்தரமாக தொடர்ந்து அதிக வேலை வாய்ப்பு உண்டு என்பது தினசரிகளில் வரும் விளம்பரங்களே சாட்சி.

1. ஆயில் மற்றும் கேஸ் நிறுவனங்கள்

2. மின்வாரிய கட்டுமான பணிகள்

3. சாலை மற்றும் பில்டிங் கட்டுமான பணிகள்

4. தொழிற்சாலை பணிகள்

5. சேல்ஸ் மேன்

6. ஐ.டி. சம்பந்தமான  பணிகள்

7. மருத்துவமனை பணிகள்

8. பராமரிப்பு மற்றும் துப்புரவு பணிகள்

9. தொலைத் தொடர்பு சம்பந்தமான பணிகள்

10. ஹெவி  டிரைவர் பணிகள்

மேலும் வெளிநாடு வேலைகளுக்கு வரும் அன்பர்கள் முக்கியமா க தெரிந்து கொள்ள வேண்டியது;
 வெளிநாடு செல்ல  வேண்டுமா? பகுதி - 9
Mar 13, 2011
Download As PDF

VELI NAADU SELLA VENDUMAA ?-8

வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-8


அயல் நாடு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகத்தில் தெரிவித்து, தீர்த்துக் கொள்ளலாம்.

அதுமட்டும் இல்லாமல், இந்தியாவின் தலைநகரமான புதுதில்லியில் உள்ள அயல்நாடு வாழ் இந்தியருக்கான நல வாரியத்தில் தொடர்பு கொண்டும் சிக்கல்களை தீர்த்துக் கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி;

MINISTRY OF OVERSEAS INDIAN AFFAIRS,
9th FLOOR, AKBAR BHAWAN,
CHANAKYA PURI,
NEW DELHI - 110 021.

தொலைபேசி : +91 11 24197900
தொலைபேசி : +91 11 24674140

நல வாரிய சில முக்கிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள,

1. Mr Nirmal Singh
Secretary
Ministry of Overseas Indian Affairs
Tel: 24674143 / 24674144
email: secretary@moia.nic.in
email: jsds@moia.nic.in

2. Mr. Malay Mishra
Joint Secretary (Diaspora Services)
Ministry of Overseas Indian Affairs
Tel: 26874240
email: jsds@moia.nic.in

3. Mr. G Gurucharan
Joint Secretary (Financial Services)
Ministry of Overseas Indian Affairs
Tel: 24676210
email: jsfs@moia.nic.in

4. Mr.Jagadananda Panda
Protectpr General of Emigrants,
Ministry of Overseas Indian Affairs.
Tel: 26874250
e-mail: pge@moia.nic.in

வெளிநாடு வாழ் இந்தியருக்காக நமது அரசாங்கம், கடந்த மே மாதம்  2004ஆம் ஆண்டு  MINISTRY OF OVERSEAS INDIAN AFFAIRS-ஐ நிறுவியது.

மேலும் இத்துடன் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புக்கான இமிக்ரேசன் துறையையும் இணைத்தது.
 வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-8
Mar 05, 2011
Download As PDF

veli naadu sella vendumaa ?-8

வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-8


அயல் நாடு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகத்தில் தெரிவித்து, தீர்த்துக் கொள்ளலாம்.

அதுமட்டும் இல்லாமல், இந்தியாவின் தலைநகரமான புதுதில்லியில் உள்ள அயல்நாடு வாழ் இந்தியருக்கான நல வாரியத்தில் தொடர்பு கொண்டும் சிக்கல்களை தீர்த்துக் கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி;

MINISTRY OF OVERSEAS INDIAN AFFAIRS,
9th FLOOR, AKBAR BHAWAN,
CHANAKYA PURI,
NEW DELHI - 110 021.

தொலைபேசி : +91 11 24197900
தொலைபேசி : +91 11 24674140

நல வாரிய சில முக்கிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள,

1. Mr Nirmal Singh
Secretary
Ministry of Overseas Indian Affairs
Tel: 24674143 / 24674144
email: secretary@moia.nic.in
email: jsds@moia.nic.in

2. Mr. Malay Mishra
Joint Secretary (Diaspora Services)
Ministry of Overseas Indian Affairs
Tel: 26874240
email: jsds@moia.nic.in

3. Mr. G Gurucharan
Joint Secretary (Financial Services)
Ministry of Overseas Indian Affairs
Tel: 24676210
email: jsfs@moia.nic.in

4. Mr.Jagadananda Panda
Protectpr General of Emigrants,
Ministry of Overseas Indian Affairs.
Tel: 26874250
e-mail: pge@moia.nic.in

வெளிநாடு வாழ் இந்தியருக்காக நமது அரசாங்கம், கடந்த மே மாதம்  2004ஆம் ஆண்டு  MINISTRY OF OVERSEAS INDIAN AFFAIRS-ஐ நிறுவியது.

மேலும் இத்துடன் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புக்கான இமிக்ரேசன் துறையையும் இணைத்தது.
Download As PDF

veli naadu sella vendumaa ?-7

வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி - 7


சில நண்பர்கள் குடும்பத்தோடு வெளிநாடு சென்று தங்க நேரிடும்.

அப்போது அவர்கள் குழந்தைகளின் படிப்பு பாதிக்காமல் இருக்க வேண்டுமல்லவா?

அவ்வாறு பாதிக்கப்படாமல் இருக்க, நமது இந்திய அரசாங்கம், அந்தந்த நாடுகளின் முக்கிய நகரங்களில் இந்திய தூதரக கல்விக் கூடங்களை (INDIAN EMBASSY SCHOOL) நிறுவி திறம்பட நடத்தி வருகிறது.

எல் கே ஜி-யில் இருந்து, செகண்டரி பள்ளிவரை ஆசிரியர்களை பல்வேறு பாடங்களுக்கு நியமித்து, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பயனளிக்கிறது.

மேற்படிப்புக்கு தொலை தூரக் கல்வி மூலம் பயன்பெற, ஆங்காங்கே பயிற்சி மையங்களை நிறுவி உதவி வருகிறது.

சில பல்கலைக்கழகங்களும், பயிற்சி மையங்களை நாடுகளின் முக்கிய நகரங்களில் நிறுவி, பயிற்சி பெற வைக்கின்றன.

தேர்வு மையங்களும் அமைத்து, தேர்வு எழுத வைத்து, பட்டங்கள் (DEGREES) பெற ஆவன செய்கிறார்கள்.

அவ்வாறு பெறும் பட்டங்கள், இந்திய அரசு அங்கீகாரம் அளித்து, அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பெறலாம்.

அயல் நாடு செல்லும் தமிழர்கள் குறிப்பாக அந்தந்த நாட்டிலுள்ள நமது தமிழ்ச் சங்கங்களை அவசியம் தொடர்பு கொள்ளவேண்டும்.

அங்கு நடக்கும் விழாக்களிலும், நிகழ்ச்சிகளிலும் தமிழ்ச்சங்க உறுப்பினராகி பங்கு கொள்ள வேண்டும்.

இதன் மூலம் பல தமிழ் அன்பர்களின் நட்பு ஏற்படும். இந்தியாவில் கொண்டாட முடியாத பண்டிகைகளை அங்குள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொண்டாடலாம்.

நமக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் அங்கு தெளிவுபடுத்தி தீர்த்துக் கொள்ளலாம்.

அந்தந்த நாடுகளின் தமிழ்ச்சங்க முகவரிகளை இணையதளங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

புதியதாக வெளிநாடு செல்லும் அன்பர்கள் முதலிலேயே தமிழ்ச்சங்க நிர்வாகிகளை தொடர்பு  கொண்டு நமக்கு வேண்டிய உதவிகளைப் பெறலாம்.

இந்தியாவில் நாம் யாருக்காவது உதவி செய்ய விரும்பினாலும், பலர் சேர்ந்து கூட்டாக பொருள் உதவி தமிழ்ச்சங்கங்கள் மூலம் செய்யலாம். பல நிதி உதவி பெறும் நிறுவனங்கள் பலன் பெறும்.

..... தொடரும்
Download As PDF

veli naadu sella vendumaa ?-6

வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-6


 வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-6
பணி ஒப்பந்தம் முடித்து EXIT-ல் வரும் போது கவனிக்க வேண்டியது;

இரண்டு வருடமோ அல்லது அதற்கு மேலோ உங்களுடைய தேவையில்லை என திருப்பி அனுப்புகிறது என வைத்து கொள்ளுங்கள்.

உங்கள் கடவுச் சீட்டில் EXIT-முத்திரை இடப்பட்டு இந்தியாவுக்கு வருகிறீர்கள்.

நீங்கள் என்ன என்ன பொருட்கள் கொண்டு வரலாம் என்பதை 'INDIA CUSTOMS RULES FOR TRANSFERRING RESIDENCY TO INDIA'-என்ற இணைய தளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

நாம் வெளிநாட்டில் பயன்படுத்திய வீட்டு உபயோகப் பொருட்களை 'கார்கோ' (Cargo) மூலம் இந்தியா கொண்டு வரலாம். இதற்கு கஸ்டம்ஸ் DUTY கிடையாது.

மற்றும் நீங்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்லும் போது விலை உயர்ந்த பொருட்களை கொண்டு சென்று மறுபடியும் அதை இந்தியா கொண்டு வர விரும்பினால், மறக்காமல் அந்த பொருட்களுக்கான EXPORT CERTIFICARE'-ஐ கஸ்டம்ஸ்-லிருந்து பெற்றுச் செல்லவேண்டும்.

இல்லாவிட்டால் நீங்கள் இந்தியா திரும்பும்போது அந்த பொருட்களுக்கு திரும்பவும் DUTY கட்ட வேண்டி வரும்.

PRAVASI BHARTIYA BIMA YOJANA, 2006

குறிப்பாக வேலை வாய்ப்புக்காக அயல் நாடு செல்லும் இந்தியர்களுக்காக கட்டாய ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை (INSURANCE) அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.

அதன் பெயர் 'பிரவசி பாரதிய பீமா யோஜனா' என்பதாகும். (PRAVASI BHARATIYA BIMA YOJANA) (PBBY)

குறைந்தபட்ச தொகையாக ரூபாய் ஐந்து லட்சம் நாம் வேலை ஒப்பந்தம் செய்த காலம் முழுவதற்கும் சேர்த்து பயன் பெறலாம்.

2003ஆம் ஆண்டு இந்தத் தொகை ரூ.2 லட்சமாக இருந்தது. பிப்ரவரி 1, 2006 முதல் ரூபாய் ஐந்து லட்சமாக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்தது.

இத்துடன் ரூ.25,000-க்கும் சேர்த்து கூடுதலாக சட்ட உதவி செலவுகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் என்ன நன்மைகள் என்பதைப் பார்ப்போம்.

1) ஒரு வேளை காப்பீடு செய்தவர் இறந்து விட்டால், அவர் குறிப்பிட்ட நபருக்கு (NOMINEE) ரூபாய் ஐந்து லட்சம் கிடைக்கும். அல்லது காப்பீடு செய்தவர் பணியின்போது நிரந்தர ஊனம் ஏற்பட்டாலும் காப்பீடு நிறுவனம் அவருக்கு குறிப்பிட்ட பணம் கிடைக்கும்.

2) இறந்தவர் உடலை வெளிநாட்டிலிருந்து இந்தியா கொண்டுவர ஒரு வழி வான ஊர்தி செலவை காப்பீட்டு நிறுவனம் ஏற்கும். உடலுடன் உதவியாளர் ஒருவருக்கும் வரும் செலவை நிறுவனம் ஏற்கும்.

3) பணியிலி இருப்பவரை அவர் எந்த தவறும் செய்யாத பட்சத்தில், பணியிலிருந்து வெளியேற்றப்பட்டால், ஒரு வழிப்பாதை எகானமி பிரிவு விமான பயணச்சீட்டுக்கான தொகையை காப்பீடு செய்தவர், காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கு அந்நாட்டின் இந்தியத் தூதரக சான்றிதழ் தேவை.

4) பணியில் இருக்கும்போது உடல் நலக் குறைவு ஏற்பட்டாலோ, அல்லது மருத்துவ சோதனையில் அவரால் இனி பணியில் தொடர முடியாது என்ற நிலை ஏற்பட்டாலோ மற்றும் காப்பீடு எடுத்த 12 மாதத்திற்குள் வெளிநாட்டு பணி நிறுவனம் பணி நீக்கம் செய்தாலோ, மேற்கண்ட ஒரு வழிப் பயணச்சீட்டு காப்பீட்டு நிறுவனம் காப்பீடு செய்தவருக்கு வழங்கும்.

5) இந்த காப்பீடு குறைந்தது இரண்டு வருடம் அல்லது வேலை ஒப்பந்தம் காலக்கெடு இதில் எது அதிகமோ அதுவரை செல்லுவடியாகும்.

6) பணியின்போது விபத்து, உடல் நலக்குறைவு, வியாதி இவற்றுக்காக மருத்துவமனையில், மருத்துவம் எடுத்துக் கொண்டால், மருத்துவத் தொகையாக குறைந்தபட்சம் ரூபாய் 50,000/- காப்பீட்டு காலத்தில் இந்தியாவில் இருந்தாலும், அயல் நாட்டில் இருந்தாலும் காப்பீடு செய்தவருக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்கும்.

7) வெளிநாட்டில் பணிபுரியும் பெண்களுக்கான பிரசவ பேறுக்காக ரூபாய் இருபதாயிரம் (20,000) காப்பீட்டு நிறுவனம் வழங்கும். இதற்கும் அந்நாட்டு இந்திய தூதரக சான்றிதழ் தேவை.

8) வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு (21 வயதிற்குள்) மருத்துவச் செலவுகளுக்கு ரூபாய் 25,000 (இருபத்தைந்தாயிரம்) பெற்றுக் கொள்ளலாம். (வருடத்திற்கு)

இறந்தவர் அல்லது நிரந்திர ஊனமுற்று இந்தியா திரும்பிய பணியாளர், காப்பீடு செய்தவருக்குத்தான் மேற்கண்ட சலுகை கிடைக்கும்.

காப்பீட்டு நிறுவனங்கள் எவை என பார்ப்போம்.

1) ஐசிஐசிஐ லம்போர்டு இன்சூரன்ஸ் கம்பெனி
2) யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி
3) ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி
4) நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி
5) ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி
6) நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி
7) சோழமண்டலம் MS ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி
8) பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி

மேற்கண்ட காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் காப்பீடு செய்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் பயன் பெறலாம்.

.....தொடர்வது

சில நண்பர்கள் குடும்பத்தோடு வெளிநாடு சென்று தங்க நேரிடும். அதுகுறித்து பார்ப்போம்.
Download As PDF

veli naadu sella vendumaa ?-5

வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-5


 வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-5
வெளிநாடு வாழ்க்கை முடிந்து, முடிவாக இந்தியா வந்து நிரந்தரமாக தங்குவதாக இருந்தால், வ்ங்கியுடன் தொடர்பு கொண்டு மேற்கண்ட அயல்நாடு வாழ் இந்தியருக்கான வங்கிக் கணக்கை, ORDINARY ACCOUNT ஆக மாற்றிக் கொள்ளலாம்.

வங்கிகள் RESERVE BANK OF INDIA - விற்கு இதனை தெரியப்படுத்தி விடும்.

மேலும் தற்போது 'SPEED CASH'- எனப்படும் உடனடியாக பணம் அனுப்பும் வசதியும் தற்போது உள்ளது.

வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணம் இரண்டு மணி நேரத்தில் இந்தியாவில் பெற்றுக் கொள்ளலாம்.

அதாவது வெளிநாட்டு வங்கிகளில் 'speed cash' முறையில் அனுப்பிய பணத்தை இந்தியாவில் WESTERN UNION MONEY TRANSFER' மூலம் நமது தபால் நிலையங்களிலோ அல்லது இதனுடைய ஏஜெண்ட்டுகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

நாம் பணம் அனுப்பிய ரசீது-வில ஒரு அடையாள எண் மற்றும் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்திய தபால் நிலையத்தில் எந்த ஊரிலும் மற்றும் 'WESTERN UNION MONEY TRANSFER'-ஏஜெண்டுகளிடமும் யார் பெயருக்கு பணம் அனுப்புகிறோமோ - அவருடைய அடையாள அட்டையைக் காண்பித்து உடன் பணம் பெற்றுக் கொள்ளலாம்.

இதன் மூலம் நமக்கு கால  தாமதம் ஏற்படாமல் அவசர தேவைக்கு பணம் பெற முடியும்.

ரூ.50,000-க்கு கீழ் தான் பணம் அனுப்ப முடியும். வங்கிக் கணக்கு மூலம் அனுப்பும் பணத்திற்கு உச்ச வரம்பு கிடையாது.

விடுமுறையில் இந்தியா வரும்போது கடவுச் சீட்டு மற்றும் விமான பயணச் சீட்டில் கவனிக்க வேண்டியை.

நம் கடவுச் சீட்டில் இந்தியா வரும்போது, நிறுவனமானது இரண்டு வகையான விசாக்களை உபயோகித்து நம்மை அனுப்பலாம்.

ஒன்று, நிறுவனம் நம்மை தொடர்ந்து பணி செய்ய அனுமதித்தால் EXIT-RE-ENTRY விசாவை உபயோகித்து நம்மை விடுமுறையில் அனுப்புவார்கள்.

அதாவது EXIT - என்றால  இந்தியா செல்லவும், RE-ENTRY என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், விசா தேதி - கெடு முடிவதற்கு முன் - நாம் பணிபுரியும் நாட்டுக்குத் திரும்ப வேண்டும்.

இதில் சிறு கால தாமதம் ஏற்பட்டால் கூட நம்மை நாம் பணிபுரியும் நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்கள்.
Download As PDF

VELI NAADU SELLA VENDUMAA ?-4

வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-4


பிறகு அதை பூர்த்தி செய்து, விண்ணப்பத்துடன் வெளிநாட்டு வங்கியில் காசோலை மற்றும் கடவுச் சீட்டு, விசா, work permit நகல் இவற்றை புகைப்படத்துடன் இணைத்து வங்கிக்கு அனுப்பினால், வங்கியிலிருந்து உங்கள் முகவரிக்கு வங்கி கணக்கு புத்தகம், செக் புத்தகம் வந்து விடும்.

நீங்கள் மாதா மாதம் அனுப்பும் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் சேர்ந்து விடும்.

உங்கள் குடும்பத்திற்குத் தேவையான பணத்தை செக் அனுப்பினால் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

நீங்கள் வங்கி மூலம் அனுப்பும் பணம் அனைத்தும் ரிசர்வ் பேங்க் கண்காணிப்பில் தான் உங்கள் வங்கிக்குச் செல்கிறது.

அதற்குண்டான அந்நியச் செலாவணி நம் அரசுக்குக் கிடைக்கிறது.

எனவே தான் வெளிநாடு வாழ் இந்தியருக்கு இந்திய அரசு பல  சலுகைகளை அறிவிக்கிறது.

நாம் எவ்வளவு கால ம் வெளிநாட்டில் பணி செய்து சம்பாதிப்பது என்பது முக்கியமல்ல.

சம்பாதித்த பணத்தை நல்ல முறையில் சேமித்து, பயனுள்ள பிற்கால  வாழ்விற்கு செலவு செய்யவேண்டும்.

வெளிநாடுவாழ் இந்தியருக்காக மூன்று வகையான வங்கிக் கணக்குகளை துவக்க ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.

1) NON-RESIDENT (EXTERNAL) RUPEE ACCOUNTS (NRE ACCOUNTS)

மேற்கண்ட வங்கிக் கணக்கில் வெளிநாட்டு நாணயத்தை ரூபாயாக மாற்றி நம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இதிலும் (சேவிங்ஸ்) சேமிப்பு, (கரண்ட்) நடைமுறை மற்றும் வைப்புத் தொகை கணக்குகளை வைத்துக் கொள்ளலாம்.

நாம் அனுப்பும் பணத்திற்கு வருமான வரி கிடையாது.

மேலும் இந்த வங்கிக் கணக்கை, வெளிநாட்டு நாணய கணக்காக (FCNR) (FOREIGN CURRENCY NON-RESIDENT ACCOUNTS) மாற்ற வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம்.

2) ORDINARY NON-RESIDENT ACCOUNTS (NRO ACCOUNTS)

இந்த வங்கிக் கணக்கிலும் இந்திய ரூபாயாக வரவு வைக்கப்படும். இந்தியாவில் வாழும் ஒருவருடன் சேர்த்து கூட்டு (JOINT ACCOUNT) கணக்காக வைத்துக் கொள்ளலாம்.

இந்த கணக்கில் வைத்துள்ள பணத்திற்கு வரும் வட்டியானது வரிக்கு உட்பட்டது. NRO ACCOUNT கணக்கில் அனுப்பும் பணத்திற்கு வருமான வரி கிடையாது.


3) FOREIGN CURRENCY NON RESIDENT (BANK) ACCOUNTS. (FCNR (B)ACCOUNTS)

இந்த வங்கிக் கணக்கிற்கு வெளிநாட்டிலிருந்து இந்திய ரூபாயாக மாற்றி அனுப்ப முடியாது.

வெளிநாட்டு நாணயங்களான யு எஸ் டாலர்கள், ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ், ஜப்பானிய யென், யூரோ, கனடா டாலர்கள் மற்றும் ஆஸ்திரேலியா டாலர்களாக மட்டும் அனுப்ப முடிகிற வங்கிக் கணக்காகும் இது.

தற்போது ரிசர்வ் வங்கி ஐந்து வருடங்கள் வரையிலான வைப்புத் தொகையாக இந்த கணக்கில் அனுமதிக்கிறது.

வெளிநாடு வாழ் இந்தியருக்கான தகுதி உள்ள வரை இந்த கணக்கில் வைத்துள்ள தொகையின் வட்டிக்கு வரி கிடையாது.

.......தொடரும்

Download As PDF

VELINAADU SELLA VENDUMAA ?-3

வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-3

8) கடவுச் சீட்டில் விசா பதிவாகும் முறை

நம்மை தேர்வு செய்த நிறுவனம், வேலை வாய்ப்பு நிறுவனம் நிர்வாகிகளிடமும் நமக்குரிய விசாவை கொடுத்து இருப்பார்கள். தொழில் விசாவில் இரு வகை உண்டு.

1) தனி விசா (INDIVIDUAL VISA)

2) கூட்டு விசா (GROUP VISA)

உதாரணமாக மின்-பணியாளர் பத்து பேர் ஒரு நிறுவனத்திற்கு தேவைப்பட்டால் ஒரே விசாவில் பத்து பேருக்கும் சேர்த்து இருக்கும்.

பத்து மின்-பணியாளர் தேர்வு செய்தவுடன், பத்து பேரின் கடவுச் சீட்டு, புகைப்படம், சான்றிதழ் இவற்றுடன் குரூப் விசாவையும் சேர்த்து, எந்த நாட்டிற்குச் செல்கிறோமோ, அந்நாட்டின் தூதரக அலுவலகம் உள்ள மும்பை, சென்னை, புதுதில்லி - இவற்றில் ஒரு இடத்தில் கொடுத்து கடவுச் சீட்டில் பதிவு செய்வார்கள்.

கடவுச் சீட்டில், விசா பதிவு செய்த நாளிலிருந்து மூன்று மாதத்திற்குள் நாம் வெளிநாடு சென்றுவிடவேண்டும்.

விசா தயாரானவுடன் வேலை வாய்ப்பு நிறுவனம் நம்மை தொடர்பு கொண்டு வெளிநாடு செல்ல நம்மை அழைப்பார்கள்.

பிறகு விமான பயணச் சீட்டையும், புறப்படும் தேதியையும் உறுதி செய்வார்கள்.

அந்த நாளையும் நமக்குத் தெரியப்படுத்தி, முதல் நாளே சென்னை வந்து கடவுச்சீட்டையும். விமானப் பயணச் சீட்டையும் நம்மிடம் கொடுப்பார்கள்.

(9) எந்த விமான நிலயைத்தில் இறங்கவேண்டும் மற்றும் நிறுவன ஆட்கள் நம்மை அழைத்துச் செல்வது பற்றிய விபரமும் தெரிவிப்பார்கள்.

மறக்காமல் தங்களுடைய பணிக்கான தொகையையும் பெற்றுக் கொண்டுதான் மேற்கண்டவை நமக்கு கிடைக்கும்.

இங்கு முக்கியமாக நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அது வேலை வாய்ப்பு நிறுவனம் வாங்கும் தொகை (SERVICE CHARGE) பற்றியது.

ஒருசில நிறுவனங்களை விட, மற்ற நிறுவனங்கள் வாங்கும் தொகை மிக அதிகம்.

இந்த விசயத்தில் அரசு தலையிட்டு, நிறுவனங்கள் வாங்கும் தொகையை முறைப்படுத்த வேண்டும்.

இதில் அரசின் அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் வாங்கும் தொகையைப் பின்பற்றலாம்.

விமான நிலையத்தில் நீங்கள் செய்ய வேண்டியது

நீங்கள் வெளிநாடு செல்லும் நாளும் வந்து விட்டது. பன்னாட்டு விமான நிலையத்திற்கு, விமான பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும், விமான புறப்பாடு நேரத்திற்கு மூன்று மணி நேரம் முன்னதாக (REPORTING TIME) சென்று தகவல் கொடுக்க வேண்டும்.

அப்போது தான் நீங்கள் செல்வரு உறுதி செய்யப்படும்.

(10) இமிக்ரேஷன் பகுதியில் உங்கள் கடவுச்சீட்டும், பயணச்சீட்டும் கொடுத்தவுடன், உங்களின் கடவுச்சீட்டு சரி பார்க்கப்பட்டு (IMMIGRATION CLEARENCE), உங்களுக்கு BOARDING PASS தருவார்கள்.

அத்துடன் இமிக்ரேசன் விண்ணப்பம் கொடுத்து பூர்த்தி செய்யவேண்டும் என்பார்கள்.

உங்களால் விண்ணப்பத்தை நிரப்ப முடியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கொடுத்து நிரப்ப வேண்டும்.

நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை விமான ஊர்திக்குள் உள்ளே செல்லும்போது விமான ஊழியர்கள் பெற்றுக் கொள்வார்கள்.

விமான இருக்கையில் அமர்ந்தவுடன் பாதுகாப்பு பட்டையை அணிந்து கொள்ளவேண்டும்.

விமானத்தில் உங்களுக்குத் தேவையான சைவ மற்றும் அசைவ உணவுகளை வாங்கிச் சாப்பிடலாம்.

இப்போது நாம் எந்த இடத்தில் பறந்து கொண்டு உள்ளோம் என்ற விவரம் நம் முன் உள்ள திரயை஢ல் காணலாம்.

நாம் சேருமிடம் வந்துவிட்டோ ம்.

விமானத்தில் இருந்து இறங்கியவுடன், வரிசையாக நின்று, இமிக்ரேசன் முடித்து, நமது கடவுச் சீட்டில் அந்நாட்டில் வந்து சேர்ந்ததற்கான முத்திரை குத்தப்பட்டு நம்மிடம் தருவார்கள்.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து விட்டீர்கள்.

உங்களுக்காக நீங்கள் பணி செய்யப்போகும் நிறுவனம் அனுப்பிய பிரதிநிதி கையில் நிறுவனப் பெயர் அடங்கிய அட்டையை கையில் வைத்துக் காத்திருப்பார்.

(11) ஒரு வேளை அன்று விடுமுறை தினமாக இருந்து, நிறுவனத்தின் பிரதிநிதி வரவில்லை என வைத்துக் கொள்வோம். என்ன செய்வீர்கள்?

இங்கு ஒருமுறை எனக்கு நேர்ந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வளைகுடா நாடுகளில் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமை விடுமுறை நாட்கள்.

நான் சவூதி அரேபியா சென்று இறங்கியது வெள்ளிக்கிழமை மாலை 7 மணி. அன்று விடுமுறை என்பதால் என்னை அழைத்துச் செல்லும் நபர் விமான நிலையத்திற்கு வரவில்லை.

தொலைபேசியில் தொடர்பு கொண்டால் பதில் இல்லை. என்ன செய்வது?

விமான நிலையத்தின் வெளியே சுற்றும் முற்றும் பார்த்தேன். மொழி வேறு தெரியாது.

அப்போது நான்கு தமிழ் அன்பர்கள் வாடகை வண்டியை அணுகி பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சென்று என் நிலையை விளக்கினேன்.

அன்பர் ஒருவர், 'அதற்கென்ன இன்று இரவு எங்கள் அறையில் தங்கி விட்டு, காலையில் நீங்கள் செல்லும் இடத்திற்கு வண்டி பிடித்து அனுப்புகிறோம்' - என்றார்.

அப்போது தான் எனக்கு தெம்பு வந்தது.

இரவு சாப்பாடு கொடுத்து, காலை வாடகை வண்டி பிடித்து, நான் செல்ல வேண்டிய இடத்திற்கு அனுப்பினார்கள்.

(12) நண்பர்களுக்கு என் நன்றி!

இதைப் போல் உங்களுக்கு ஒரு நிலைமை என்றால், மேற்கண்டபடி நீங்களும் சமாளிக்க வேண்டியது தான்!

நீங்கள் பணியில் சேர்ந்தவுடன், அங்கும் ஒரு மருத்துவ பரிசோதனைக்கு உங்களை அனுப்புவார்கள். அந்த மருத்துவச் சான்றிதழ், நிறுவன கடிதம், கடவுச் சீட்டு இவற்றை இணைத்து 'WORK PERMIT' - பெற அனுப்புவார்கள்.

'WORK PERMIT' - கிடைத்தவுடன் அதில் எத்தனை வருடத்திற்கு அனுமதி உள்ளதோ அதுவரை அந்நாட்டில் பணிபுரியலாம்.

நிறுவனம், தேவைப்பட்டால் மறுபடியும் 'work permit'- ஐ புதுப்பித்துக் கொள்ளும்.

நீங்கள் எங்கு வெளியே சென்றாலும், கண்டிப்பாக உங்கள் வசம் 'WORK PERMIT' வைத்திருக்க வேண்டும்.

நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய இன்னொன்று, மீண்டும் ஒரு பணி ஒப்பந்தம் கொடுத்து கையொப்பம் இடச் செய்வார்கள்.

ஏற்கனவே, நீங்கள் நேர்முகத் தேர்வு முடிந்தவுடன் பேசிய சம்பளம் மற்றும் இதர சலுகைகள் அடங்களி ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டிருப்பீர்கள்.

அதனுடைய நகலை மறக்காமல் கைவசம் வைத்திருந்து, பணியில் சேர்ந்தவுடன் கொடுக்கும் ஒப்பந்த பத்திரத்துடன் சோதித்து பார்த்து ஏதாவது வேறுபாடு உள்ளதா என பார்க்க வேண்டும்.


(13) நீங்கள் பேசிய சம்பளத்திற்கு குறைவாக இரண்டாவது ஒப்பந்தத்தில் இருந்தால் நிச்சயம் கையொப்பம் இடக்கூடாது. இதற்காக நீங்கள் வாதாடலாம்.

ஒப்பந்தம் சரி செய்தால் ஒழிய, நீங்கள் கையொப்பம் இடக்கூடாது.

இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்வது எப்படி?

நீங்கள் பணியில் சேர்ந்தவுடன் உங்கள் பெயர், அப்பா பெயர், இந்திய விலாசம், தற்போதைய நிறுவனத்தின் விலாசம், வேலையின் பெயர், கடவுச் சீட்டு எண், கடவுச் சீட்டின் நகல் ஆகியவற்றை மெயில் மூலமாகவோ அல்லது தொலை நகல் மூலமோ இந்திய தூதரகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இந்திய தூதரகத்தின் விலாசத்தை இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

உங்களைப் பற்றிய குறிப்புகளை தூதரகத்தில் பதிவு செய்து கொள்வார்கள். நீங்கள் பணிபுரியும் நாட்டில் எந்த பிரச்சினை என்றாலும் இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

உங்கள் கடவுச் சீட்டை புதுப்பிக்க மற்றும் விசா பற்றிய சந்தேகங்களும் நிவரத்தி செய்வார்கள். உங்களுக்கு அருகில் உள்ள நகரங்களுக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தூதரகங்கள் மூலம் முகாம் நடத்துவார்கள்.
Download As PDF

VELINAADU SELLA VENDUMAA ?-2

வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-2

 வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-2
பகுதி-2

(4)  மேலும் தேர்வின்போது, நாம் ஒத்துக்கொண்ட மாதச் சம்பளம் மற்றும் வேறு சலுகைகளும் சரியாகக் கிடைக்கும்.

ஏனெனில், தேர்வு முடிந்தவுடன் இங்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் இருதரப்பு கையொப்பம் இட்டு, அதன் பிரதி ஒன்றும் நமக்கு கிடைக்கும்இ

ஆனால் சில வேலை வாய்ப்பு நிறுவனங்களில் இங்கு ஒரு ஒப்பந்தமும், வெளிநாடு சென்றபின் ஒரு ஒப்பந்தமும் கொடுத்து கையொப்பம் இடும்படி வற்புறுத்தப்படுவார்கள்.

கடன் வாங்கியோ, காட்டை, வீட்டை விற்று வெளிநாடு செல்பவர்களுக்கு, வேறு வழியில்லாமல் வெளிநாட்டு நிறுவனம் வற்புறுத்தும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இடும்படி நேரிடுகிறது.

தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் மேற்கண்ட பிரச்சினை கிடையாது.

ஏதாவது பிரச்சினை என்றாலும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு சரி செய்து விடலாம்.

வெளிநாடுகளில் படித்தவர்களுக்கு மட்டும் தான் பணிவாய்ப்பு என நினைக்கக்கூடாது.

அனைத்து வகை தொழிலாளிகளுக்கும் வேலை வாய்ப்பு உண்டு. குறிப்பாக உதவியாளர், மேசன், டர்னர், வெல்டர், எலக்ட்ரீசியன் என தொழிற் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் என்ஜீனியந, டாக்டர், பேராசிரியர் அனைவருக்கும் வேலை வாய்ப்பு உண்டு.  குறைந்தது இரண்டு வருட பயிற்சி அவசியம்.


(5) வெளிநாட்டு நிறுவனத்தை தேர்வு செய்வது எப்படி?


நாம் ஒரு விளம்பரத்தைப் பார்க்கிறோம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி மற்றும் பயிற்சி நம்மிடம் உள்ளதா என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.

அடுத்து விளம்பரம் கொடுத்த வேலை வாய்ப்பு நிறுவனம் நம்பத் தகுந்ததாக மற்றும் பதிவு எண் கொடுக்கப்பட்டுள்ளதா என பார்க்கவேண்டும்.

இவை இரண்டும் திருப்தியாக இருந்தால், எந்த வெளிநாட்டு நிறுவனத்திற்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என கவனித்து, அந்த வெளிநாட்டு நிறுவனத்தைப் பற்றி அறிய, 'www.வெளிநாட்டு நிறுவனத்தின் பெயர்.com' - என்ற இணையதள முகவரியில் சென்றால், கம்பெனியின் அனைத்து விவரங்களும் நமக்குத் தெளிவாகிவிடும்.

மேலும், அந்நிறுவனத்தைப் பற்றி அறிய வேண்டுமானால், அந்த நாட்டில் உள்ள நமது வெளிநாட்டு தூதரகத்தை (INDIAN EMBASSY) தொடர்பு கொண்டு விசாரித்து தெரிந்து கொள்ளலாம் (E-MAIL).

மேற்கொண்ட அனைத்தும் நமக்கு திருப்தி அளித்தால் மட்டுமே நாம் அந்நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவேண்டும்.

இல்லையெனில் அடுத்த நல்ல நிறுவனத்திற்காக காத்திருக்கவேண்டும்.


(6) நேர்முகத் தேர்வின்போது கவனிக்க வேண்டியவை

ஆள்பாதி. ஆடை பாதி என்பது போல் முதலில் நாம் மற்றவர் கவரும் வகையில் உடை அணியவேண்டும்.

இரண்டாவது நாம் எந்த பணிக்குத் தேர்வுக்கு செல்கிறோமோ அதில் முழு அளவு திறன் படைத்தவராக இருக்கவேண்டும்.

மூன்றாவது, நம் கையில் இருக்கும் பணிச் சான்றிதழில் என்னவெல்லாம் நமக்குத் தெரியும் என குறிப்பிட்டு உள்ளோமோ அதில் தெளிவாக இருக்கவேண்டும்.

குறிப்பாக எனக்கு இந்த எந்திரத்தில் இயக்குதலும் பேணுதலும் (OPERATION AND MAINTENANCE) முழுமையாகத் தெரியும் என்று  குறிப்பிட்டிருந்தால், அந்த எந்திரத்தின் முழு பாகுபாடு நமக்கு அறிதல் வேண்டும்.

இதைவிட்டு நமக்கு இது தெரியும், அது தெரியும் என குறிப்பிட்டு, மேலோட்டமாக நுனிப்புல் மேய்த்திருந்தால் தேர்வின் முதல் சுற்றிலேயே நாம் தோல்வி அடைய நேரிடும்.

நான்காவது, நமக்கு சிறிதளவாவது  ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டும். குறைந்தபட்சம் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் புரிந்து கொள்ளும் அளவிற்காவது பதில் அளிக்கவேண்டும்.

சரி, நாம் தேர்வில் வெற்றி பெற்று விட்டடீம். அடுத்தது என்ன?


(7) மருத்துவச் சான்றிதழ் பெறும் முறை


தேர்வில் வெற்றி பெற்றவுடன், நமது கடவுச் சீட்டை வேலை வாய்ப்பு நிறுவனம் பெற்றுக் கொண்டு, நமக்கு மருத்துவச் சான்றிதழ் பெற அந்நிறுவனம் வழி செய்யும்.

அதாவது, நாம் எந்த நாட்டுக்குச் செல்லப் போகிறோமோ அந்நாட்டின் அனுமதி பெற்ற மருத்துவர்கள் இங்கு உள்ளார்கள். அவர்களிடம் சென்று, வேலை வாய்ப்பு நிறுவனம் கொடுத்த கடிதத்தை காண்பித்து, மருத்துவ பரிசோதனைக்கு தயாராகி விட வேண்டும். மருத்துவ சோதனைக்கு அந்த மருத்துவர்கள் குறிப்பிட்ட கட்டணம் வசூல் செய்வார்கள் (சுமார் ரூ.1000).

எக்ஸ்ரே, ரத்த அழுத்தம், ரத்தப் பரிசோதனை இவை அனைத்தும் முடிந்த பிறகு, கடைசியாக தலைமை மருத்துவர் நம் உடல் பகுதி முழுதும் ஏதாவது குறை உள்ளதா என பரிசோதித்து பார்ப்பார்.

பிறகு, மருத்துவ பரிசோதனைச் சான்றிதழில் (FIT) -தகுதி- என முத்திரை குத்தப்பட்டு, வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு மறுநாள் சென்றுவிடும்.

நிறுவனத்திலிருந்து உங்களுக்கு தபால் அல்லது தொலைபேசி மூலம் தகவல் கிடைத்துவிடும்.

இனி, நீங்கள் விமானத்தில் பயணம் செய்வது பற்றி கனவு காணலாம்.

அதற்கு முன் உங்கள் கடவுச் சீட்டில் 'விசா' என்ற 'பணி அனுமதி' (WORK PERMIT) எவ்வாறு பதிவாகிறது என பார்ப்போம்.
                                                                                                                                                    .......தொடரும்
-முத்து ரத்தினம்

Download As PDF

Friday, July 29, 2011

VELI NAADU SELLA VENDUMAA ?

வெளிநாடு செல்ல வேண்டுமா

 வெளிநாடு செல்ல வேண்டுமா
முகவுரை

நாம் தினமும் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒரு செய்தியை அடிக்கடி காணலாம்.
"வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி"

"மலேசியாவில் தொழிலாளர்கள் தவிப்பு"

"சவூதி அரேபியாவில் பல மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் தமிழர்கள் அவதி"

இதுபோன்ற  செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
ஏமாந்தவர்கள் உள்ளவரை, ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டுதான் இருப்பார்கள்.

இதற்கு என்ன வழி?

இதற்கு விடை காண என்னால் முயன்றவரை, என் அனுபவத்தில் இருந்து சில வழிகளை சொல்லி உள்ளேன்.
அதுமட்டுமல்லாமல் வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு எடுப்பது முதல் நமது பணி ஒப்பந்தம் முடிந்து இந்தியா வருவதுவரை என்ன செய்ய வேண்டும் என இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
புதிதாக வெளிநாடு செல்பவர்களுக்கும், ஏற்கனவே வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கும் சில வழிமுறைகளும் கூறி உள்ளேன்.
சுமார் பன்னிரண்டு வருடங்களாக, ஐந்து முறை தேர்வில் வெற்றி பெற்று, சவூதி அரேபியாவில் மின் பொறியாளராக பணிபுரிந்து வரும் நான், எவ்வாறு வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்று, முறையாக மற்றவர்களிடம் ஏமாறாமல் பொருள் ஈட்டுவது பற்றி இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதை நீங்கள் காணலாம்.

(1) கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெறும் வழி

முன்பு எல்லாம் கடவுச்சீட்டு பெற சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி சென்று பதிவு செய்து காத்திருக்க வேண்டும்.
தற்போது மாவட்டந்தோறும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கடவுச்சீட்டு பெற தனியாக அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாம் நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் கடவுச்சீட்டு அலுவலகம் சென்று பதிவு செய்தால், ஒன்று அல்லது இரண்டு மாதத்தில். காவல் துறை விசாரிப்புக்குப் பிறகு, கடவுச்சீட்டு நம் வீடு தேடி வந்துவிடும்.
அலுவலகம் செல்லும் போது நாம் மறக்காமல் எடுத்துச் செல்லவேண்டியவை;

1) ரூ.1,000-க்கான காசோலை
2) குடும்ப அடையாள அட்டை
3) பத்து பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
4) கல்விச் சான்றிதழ்
நாம் பதிவு செய்த பிறகு, நமக்கு ஒரு அடையாள எண் தருவார்கள்.
அந்த அடையாள எண் மூலம் இணையத்தின் மூலம் நம் கடவுச்சீட்டின் நிலைப்பாடு எந்த அளவில் உள்ளது, மற்றும் நமக்கு கடவுச்சீட்டு எப்போது கிடைக்கும் என தெரிந்து கொள்ளலாம்.
தற்சமயம் கோவையிலும் கடவுச்சீட்டு அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

(2) இணையதளத்தில் செல்லும் வழிமுறை
முதலில் www.tn.nic.in என்ற இணைய தளத்தில் நுழைந்து, ரீஜினல் பாஸ்போர்ட் ஆபீஸ் என்ற வலையின் மூலம், 'know your passport status' - மூலம் நமது அடையாள எண், பதிவு செய்த மாதம் வருடத்தை பதிவு செய்தால், நம் கடவுச் சீட்டின் நிலைப்பாடு எந்த அளவில் உள்ளது என அறியலாம்.
கடவுச் சீட்டு நம் கைக்கு கிடைத்தவுடன் நாம் வெளிநாடு செல்ல தயாராகி விட்டோ ம்.
அடுத்த நாம் தெரிய வேண்டியது, எந்த வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் வெளிநாடு செல்லலாம் என்பது.
தினசரிகளில் "வெளிநாடு பணிகளுக்கு ஆட்கள் தேவை" - என்ற விளம்பரத்தை நீங்கள் அடிக்கடி காணலாம்.
முக்கியமாக நாம் அந்த விளம்பரத்தில் கவனிக்க வேண்டியது, அந்த அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் அரசாங்கத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டதா, பதிவு எண் உள்ளதா என அறிய வேண்டும்.
முறையாக பதிவு செய்யாத நிறுவனம் மூலம் வெளிநாடு செல்ல ஆசைப்பட்டால், நாம் உழைத்து சேர்த்த பணம் அவ்வளவுதான்.
இதற்கும் நமது அரசாங்கம் வழி செய்துள்ளது.
சென்னையில் 'அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் நமது தமிழக அரசின் கீழ் இயங்கி வருகிறது.
இதன் முகவரி.

(3) அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்.

எண்: 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, எல் பி ரோடு, அடையாறு, சென்னை - 600 020.

தொலைபேசி எண்கள்: 044 / 244 64268 / 24464269

இணைய தள முகவரி : www.tn.gov.in
    www.southindia.com

மேற்கண்ட இணைய தள முகவரியிலும் தற்போதைய நேர்முகத் தேர்வு பற்றிய தகவல்களைப் பெறலாம்.

அரசு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்ய கடவுச்சீட்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஐந்து மற்றும் கல்வித் சான்றிதழ், பணிச் சான்றிதழ் வேண்டும்.

நமது தொழிற்சார்ந்த வேலைகளுக்குத் தகுந்தவாறு பதிவுக் கட்டணம் வசூல் செய்வார்கள்.

இந்நிறுவனம் மூலம் மூன்று முறை நமக்கு நேர்முகத் தேர்வுக்கு உதவி செய்வார்கள்.

நேர்முகத் தேர்வில் வெற்றிபெற்று தகுதி பெற்றுவிட்டால், மருத்துவ சோதனை முடித்து வெளிநாடு செல்ல தயாராகி விடலாம்.

இதற்கு ஒரு முறையான, சரியான கட்டணம் மட்டுமே பெற்றுக் கொள்கிறார்கள். கட்டணத்திற்கான ரசீதும் பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு சமயம் நம்மால் குறிப்பிட்ட நேரத்தில் வெளிநாடு செல்ல முடியாமல் நேரிட்டாலோ அல்லது நம்மை தேர்வு செய்த வெளிநாட்டு நிறுவனம்  யாதொரு காரணத்தாலோ நம்மை அழைக்க முடியாமல் போனாலோ நாம் கட்டிய கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
Download As PDF

Tuesday, July 26, 2011

KARUPPUP PANAM

பணம் என்ற ஒன்று இருந்தால் தானே கறுப்பு, சிவப்பு,
பழைய பண்ட மாற்று முறையே சிறப்பு!.
பருப்பு கொடுத்து புளி வாங்குடா தோழா,
நாட்டில் பட்டினி என்ற சொல் இராது பாரடா..!
    
வங்கி எண்ணிக்கை குறையும் பணம் போட,
கிடங்கி எண்ணிக்கை உயரும் தானியம் போட.
விளைச்சலால் தானே நாட்டில் எங்கும் பசுமை,
விலைவாசியும் குறையும் என்பது இனிமை.
    
ஆண்டி ஆவர், ஹவாலா கும்பல் விழிபிதுங்கி,
திவாலாகி போண்டி ஆவர், சுவிஸ் வங்கி !
வெள்ளை, கறுப்பானது  கயவர் மடமை,
கறுப்பை,வெளிக்கொணர்வது அரசின் கடமை.!

அன்னிய கடனில் மூழ்கி நிற்கும் டைட்டானிக்,
நம் நாடு நீர்மூழ்கி கப்பலாகி மூச்சு விடுவது,
நல்லவர் சிலர் நாட்டின் தூண்களாய் இருப்பது !
வல்லரசு தேவை, வேண்டும் முதலில் நல்லரசு

பணம் இருந்தால் தானே கறுப்பு, சிவப்பு,
பழைய பண்டமாற்று முறையே சிறப்பு!.
விளைச்சல் கொடுத்து பொருளை வாங்குடா நண்பா,
மன உளைச்சல் இன்றி வாழுடா தெம்பா..!

பணம் பத்தும் பேசும்...
பண்டாமாற்று பத்தையும் தாண்டி பேசும்...!
பொருளுக்கு பொருள் தேடி கொடு.
இருளுக்கு வழி சொல்லி விரட்டிவிடு...!

-முத்து ரத்தினம்
Download As PDF

Saturday, July 16, 2011

MRMUTHURATHINAM: PAALAI VANACH CHOLAI

MRMUTHURATHINAM: PAALAI VANACH CHOLAI: "                                 பாலைவனச்  சோலை                                           -----------------------------------------     ப..." Download As PDF

Friday, July 15, 2011

paalavam-solaivanam

பாலைவனம் சோலை வனமானது அரபு நாட்டில்,
தண்ணீரால் அல்ல, எரிபொருளால்.....!
சோலை வனம் பாலைவனமாகிடுமோ நம்நாட்டில்..?!
மணலால் அல்ல, விவசாயியின் கண்ணீரால்.....!

நாளொரு மேனியாய், விவசாயிகள் பிரச்சினை....!
கவலை கொள்வோர், கண்டுகொள்வோர் யாருமில்லை,
புலம்பல்கள் இன்னும் ஓய்தபாடில்லை...
எவன் பொருளுக்கு எவன் விலை வைப்பது...?

நாட்டின் முதுகெலும்பு விவசாயி..! சொல்றாங்க தெரியுமா...?
முதுகெலும்பு இல்லா நாடுதான் நி(ற்க)லைக்க முடியுமா...?
சோகத்தில் புலம்பினான் ஒரு விவசாயி
வந்தும் கெடுக்கின்றது வராமலும் வாட்டுகின்றது மழை..!

இதோ புலம்புகிறான் இன்னொரு விவசாயி..
நெஞ்சம் கனத்து ஏங்கிப்போகிறது,
நிம்மதியாக உறங்குவதுக்காவது,
ஆறடிநிலம் கிடைக்குமா? என்று...!.

அரசே வேண்டாம் இந்த விஷப்பரீட்சை !
உடனடி தேவை, வேளாண் அறுவை சிகிச்சை...!
விளைநிலங்களை துண்டிடும்.....
தலைகள் தண்டிக்கப்படவேண்டும்....!

மானியத்தில் அரசு தரவேண்டும் விதைநெல்,
தரகர் இன்றி வேண்டும் நேரடி கொள்முதல்,
தடையில்லா மின்சாரம்....,
விளைச்சலுக்கு மதிப்பீடு.....!

ஆம் இனி நம் மனமெங்கும் நந்தவனம்

-அன்புடன்
முத்து ரத்தினம்

Jul 14, 2011 Download As PDF

Wednesday, July 13, 2011

MAKKAL THOKAI KANAKKEDUPPU

மக்கள் தொகை கணக்கெடுப்பு
-----------------------------------------------------
( முத்து ரத்தினம் )
இந்தியா ஒரு தீபகற்பம் . மூன்று பக்கமும் கடலாலும் ,ஒரு பக்கம் பனி படர்ந்த இமயமலையாலும்

சூழப்பட்ட ,இயற்கையாகவே பாதுகாப்பு அரண் கொண்ட நாடு என்பது அனைவரும் அறிந்த ஒன்று .

இன்றைய நிலவரப்படி , அதாவது 2010 - இந்தியாவின் மக்கள் தொகை 1 .15 பில்லியன் .(1 ,150 ,000 ,௦௦௦000 ௦௦௦)

உலகின் அதிக மக்கள் தொகை உள்ள இரண்டாவது நாடு.

நம் நாடு சுதந்திரம் அடையும் பொழுது, நம் நாட்டின் மக்கள் தொகை வெறும் 350 மில்லியன் தான் .

கடந்த அறுபத்து மூன்று ஆண்டுகளில் மக்கள் தொகை மூன்று மடங்கு உயர்ந்து விட்டது.!

வரும் 2030 -ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 1 .53 பில்லியன் உயரும் என எதி பார்க்கப்படுகிறது.

தற்போது 2011 -ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது .
ஒரு நாட்டின் சரியான கணக்கு விகிதம் எப்படி எடுப்பது ?

வீடு வீடாகச் சென்று , வீட்டில் மொத்தம் எத்தனை பேர் உள்ளார்கள் ? வயது என்ன ?

என்ன வேலை செய்து கொண்டுள்ளார்கள் ? என அலசுவது பழைய முறை.!

அந்த முறையைத் தான் இன்னும் நமது கணக்கெடுப்பு அதிகாரிகள் பின் பற்றி

வருகிறார்கள்.

நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும், தற்போதைய ஓட்டுனர் உரிமம் மாதிரி
"அடையாள அட்டை " வழங்க வேண்டும் .
அந்த அடையாள அட்டையில் பெயர், பிறந்த தேதி , விலாசம் , கடவுச்சீட்டு எண்
(இருந்தால் ) பொறிக்கப்பட்டு , புகைப்படத்துடன் ஒரு அடையாள எண் கொடுத்துவிட வேண்டும்.

அந்த அடையாள அட்டையை எப்பொழுதும் ,ஓட்டுனர் உரிமம் மாதிரி , ஒவ்வொரு
இந்தியரும் கையில் வைத்திருக்க வேண்டும்.
அது எந்த நேரத்திலும் காவல் துறையின் சோதனைக்கு உட்பட வேண்டும்.

மேற்சொன்ன அடையாள அட்டையின் மூலம் சுலபமாக வேறு நாட்டவர்களை
அடையாளம் கண்டு கொள்ளலாம்.

அடையாள அட்டை சோதனைக்கு உட்படும் போது அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள
அடையாள எண்ணை ,கணினியில் டைப் செய்தால் , ஒருவருடைய முழு ஜாதகமும்
திரையில் தெரியும்.

உடனே ,இந்திய அரசு முனைப்பாக செயல்பட்டு , அடையாள அட்டை வழங்கும்
பணியை தொடங்க வேண்டும்.

இன்றைக்கு , வளர்ந்த நாடுகள் இந்த முறையைத் தான் பின்பற்றி வருகிறார்கள்.

ஒவ்வொரு குழந்தை பிறந்தவுடனும் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட
வேண்டும்.

அதே போல் ஒருவர் இறந்தாலோ உடனே மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் (நகராட்சி ,அல்லது பேரூராட்சி )தெரியபடுத்தினால் , கணினியில் அவருடைய அடையாள எண்ணை
நீக்கிவிடலாம் .

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் , அந்நிய தீய சக்திகள் இந்தியாவில் ஊடுருவதை
எளிதில் தடுத்து விடலாம்.

மற்ற நாடுகளிலிருந்து TOURISTUKALAAKAVO , பணி நிமித்தம் காரணமாகவோ இந்தியா
வருவதை தவிர்த்து விட்டு , சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறி , தொழில்
செய்து கொண்டிருக்கும் பாகிஸ்தான், பங்களாதே஦#183் ,மற்றும் நேபால் நாட்டவர்கள் அதிகம்.

குறிப்பாக மேற்கு வங்கத்தில் , கல்கத்தாவில் பங்களாதே஦#183் நாட்டைச் சேர்ந்தவர்கள்
அதிகமாக குடியேறி உள்ளனர்.

கா஦#183்மீர் வழியாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவி வந்து
விடுகின்றனர்.
நேபாளிலிருந்து ,இந்தியாவின் கோரக்பூர் வழியாக இந்தியாவிற்குள் வந்து தங்கி உள்ளனர்.

எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தி , எல்லைசோதனை சாவடிகளை தீவிர
கண்காணிப்பில் வைத்து இருந்தால் , மேற்சொன்ன அடையாள அட்டை முறையும்
நடைமுறைபடுத்திவிட்டால் நூறு விழுக்காடு மக்கள் தொகை கணக்கு நமக்கு
கிடைத்துவிடும்.

இதே மாதிரி , வன இலாகாவினரும் , வன விலங்குகள் எண்ணிக்கையை கணக்கெடுப்பதில் , உதாரணமாக , புலிகளின் எண்ணிக்கையை ,புலியின் காலடி
தடத்தை வைத்து பழைய முறையே பின் பற்றி வருகின்றனர்.

நாடும் , அறிவியலும் வளர்ந்துவிட்ட நிலையில் , நாம் நவீன முறையில் -
ரேடார் (RADAR ) மூலம் விலங்குகள் கணக்கெடுப்பு நடத்த முடியும் .

அரசு நவீன கருவிகளை இறக்குமதி செய்து ,சரியான திட்டங்கள் மூலம் ,சுலபமான முறையில் , மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க ஆவன செய்ய வேண்டும் ,.

------------------------------------------------- Download As PDF

Sunday, July 10, 2011

EAN ?

ஏன் ?
--------------
முத்து ரத்தினம்
-----------------------------

என் விழியிரண்டும் மூட மறுக்குது , ஏன் ?

என் எதிரில் நீ இருந்தால் !

மூடினாலும் தூக்கம் வர மறுக்குது , ஏன் ?

என் எதிரில் உன் பிம்பம் !.

சாவை கூட என் மனம் ஏங்குது , ஏன் ?

எமன் பாசக்கயிறாய் நீ இருந்தால் !.

உன்னுடனே நானும் சேர்ந்து சுற்றுவேன் , ஏன் ?

பூமியாக நீ இருந்தால் !.

உன் பார்வை திரும்பும் இடமெல்லாம் என் பார்வை , ஏன் ?

சூரியனாக நீ , சூரியகாந்தியாக நான் !

கண்ணே , நானே உன்னை அனைபபேன் , ஏன் ?

நெருப்பாக நீ , கார்பன்-டை - ஆக்சைடாக நான். !

--------------------------------------------------- Download As PDF

MAKKAL THOKAI KANAKKEDUPPU

மக்கள் தொகை கணக்கெடுப்பு
-----------------------------------------------------
( முத்து ரத்தினம் )
இந்தியா ஒரு தீபகற்பம் . மூன்று பக்கமும் கடலாலும் ,ஒரு பக்கம் பனி படர்ந்த இமயமலையாலும்

சூழப்பட்ட ,இயற்கையாகவே பாதுகாப்பு அரண் கொண்ட நாடு என்பது அனைவரும் அறிந்த ஒன்று .

இன்றைய நிலவரப்படி , அதாவது 2010 - இந்தியாவின் மக்கள் தொகை 1 .15 பில்லியன் .(1 ,150 ,000 ,௦௦௦000 ௦௦௦)

உலகின் அதிக மக்கள் தொகை உள்ள இரண்டாவது நாடு.

நம் நாடு சுதந்திரம் அடையும் பொழுது, நம் நாட்டின் மக்கள் தொகை வெறும் 350 மில்லியன் தான் .

கடந்த அறுபத்து மூன்று ஆண்டுகளில் மக்கள் தொகை மூன்று மடங்கு உயர்ந்து விட்டது.!

வரும் 2030 -ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 1 .53 பில்லியன் உயரும் என எதி பார்க்கப்படுகிறது.

தற்போது 2011 -ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது .
ஒரு நாட்டின் சரியான கணக்கு விகிதம் எப்படி எடுப்பது ?

வீடு வீடாகச் சென்று , வீட்டில் மொத்தம் எத்தனை பேர் உள்ளார்கள் ? வயது என்ன ?

என்ன வேலை செய்து கொண்டுள்ளார்கள் ? என அலசுவது பழைய முறை.!

அந்த முறையைத் தான் இன்னும் நமது கணக்கெடுப்பு அதிகாரிகள் பின் பற்றி

வருகிறார்கள்.

நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும், தற்போதைய ஓட்டுனர் உரிமம் மாதிரி
"அடையாள அட்டை " வழங்க வேண்டும் .
அந்த அடையாள அட்டையில் பெயர், பிறந்த தேதி , விலாசம் , கடவுச்சீட்டு எண்
(இருந்தால் ) பொறிக்கப்பட்டு , புகைப்படத்துடன் ஒரு அடையாள எண் கொடுத்துவிட வேண்டும்.

அந்த அடையாள அட்டையை எப்பொழுதும் ,ஓட்டுனர் உரிமம் மாதிரி , ஒவ்வொரு
இந்தியரும் கையில் வைத்திருக்க வேண்டும்.
அது எந்த நேரத்திலும் காவல் துறையின் சோதனைக்கு உட்பட வேண்டும்.

மேற்சொன்ன அடையாள அட்டையின் மூலம் சுலபமாக வேறு நாட்டவர்களை
அடையாளம் கண்டு கொள்ளலாம்.

அடையாள அட்டை சோதனைக்கு உட்படும் போது அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள
அடையாள எண்ணை ,கணினியில் டைப் செய்தால் , ஒருவருடைய முழு ஜாதகமும்
திரையில் தெரியும்.

உடனே ,இந்திய அரசு முனைப்பாக செயல்பட்டு , அடையாள அட்டை வழங்கும்
பணியை தொடங்க வேண்டும்.

இன்றைக்கு , வளர்ந்த நாடுகள் இந்த முறையைத் தான் பின்பற்றி வருகிறார்கள்.

ஒவ்வொரு குழந்தை பிறந்தவுடனும் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட
வேண்டும்.

அதே போல் ஒருவர் இறந்தாலோ உடனே மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் (நகராட்சி ,அல்லது பேரூராட்சி )தெரியபடுத்தினால் , கணினியில் அவருடைய அடையாள எண்ணை
நீக்கிவிடலாம் .

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் , அந்நிய தீய சக்திகள் இந்தியாவில் ஊடுருவதை
எளிதில் தடுத்து விடலாம்.

மற்ற நாடுகளிலிருந்து TOURISTUKALAAKAVO , பணி நிமித்தம் காரணமாகவோ இந்தியா
வருவதை தவிர்த்து விட்டு , சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறி , தொழில்
செய்து கொண்டிருக்கும் பாகிஸ்தான், பங்களாதே஦#183் ,மற்றும் நேபால் நாட்டவர்கள் அதிகம்.

குறிப்பாக மேற்கு வங்கத்தில் , கல்கத்தாவில் பங்களாதே஦#183் நாட்டைச் சேர்ந்தவர்கள்
அதிகமாக குடியேறி உள்ளனர்.

கா஦#183்மீர் வழியாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவி வந்து
விடுகின்றனர்.
நேபாளிலிருந்து ,இந்தியாவின் கோரக்பூர் வழியாக இந்தியாவிற்குள் வந்து தங்கி உள்ளனர்.

எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தி , எல்லைசோதனை சாவடிகளை தீவிர
கண்காணிப்பில் வைத்து இருந்தால் , மேற்சொன்ன அடையாள அட்டை முறையும்
நடைமுறைபடுத்திவிட்டால் நூறு விழுக்காடு மக்கள் தொகை கணக்கு நமக்கு
கிடைத்துவிடும்.

இதே மாதிரி , வன இலாகாவினரும் , வன விலங்குகள் எண்ணிக்கையை கணக்கெடுப்பதில் , உதாரணமாக , புலிகளின் எண்ணிக்கையை ,புலியின் காலடி
தடத்தை வைத்து பழைய முறையே பின் பற்றி வருகின்றனர்.

நாடும் , அறிவியலும் வளர்ந்துவிட்ட நிலையில் , நாம் நவீன முறையில் -
ரேடார் (RADAR ) மூலம் விலங்குகள் கணக்கெடுப்பு நடத்த முடியும் .

அரசு நவீன கருவிகளை இறக்குமதி செய்து ,சரியான திட்டங்கள் மூலம் ,சுலபமான முறையில் , மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க ஆவன செய்ய வேண்டும் ,.

------------------------------------------------- Download As PDF

Saturday, July 9, 2011

KACHCHTH THEEVU- THEERVU ENNA ?

கச்சத்தீவு ---தீர்வு என்ன ?
-------------------------------------------------

கச்சத் தீவு பாக்- ஜலசந்தியில் சுமார் முக்கால் சதுர மைலில் அமைந்துள்ள ஒரு தீவு.
இந்திய கடற்கரை எல்லையிலிருந்து பன்னிரண்டரை மைல் தூரத்திலும், இலங்கை
கடற்கரை எல்லையிலிருந்து பத்தரை மைல் தூரத்திலும் உள்ளது.
உயர்திரு.முகம்மது செரீப் , முன்னால் எம்.பி. (பெரியகுளம்) அவர்களால் பார்லிமெண்டில்
1-4-1968 ஆம் ஆண்டு , கச்ச்த் தீவு ராமனாதபுர ராஜாவுக்கு சொந்தமானது தான் என
போதுமான ரெக்கார்டுகள் சமர்ப்பிக்கப்பட்டன.
அப்போது உடன் , அரசு விரைந்து செயல்பட்டிருந்தால் ,இண்டர்ணேசனல் கோர்ட்டுக்குச்
சென்றீருதால் நமது பூர்வீகச்சொத்தான கச்ச்த் தீவு நம் வசம் இருந்து இருக்கும்.
ஆயிரக்கனக்கான உயிர் பலியும் கொடுத்திருக்க வேண்டியதில்லை.
இலங்கைக்கு அருகில் இருப்பதால் அது இலங்கைக்கு சொந்தமாகி விடாது. கச்சத்தீவு இந்தியாவின்
பூர்வீக சொத்து .
1) இங்லீஷ் கால்வாய் -இல் மிங்குயர்-என்ரோ என்ற தீவு உள்ளது, அது பிரிட்டீஸ் கடற்கரைக்கு
அதிக தூரத்திலும் ,ஃப்ரன்ச் கடற்கரைக்கு பக்கத்திலும் உள்ளது.
அதனால் ஃப்ரன்ச் அரசாங்கம் தீவு எங்கள் வசம் தான் இருக்க வெண்டும் என இண்டர்ணேசனல்
கோர்ட்டில் மோதியது.
ஆனால் ப்ரிட்டன், தீவு எங்கள் பூர்வீக சொத்து என்பதற்கான 1953-ம் வருட டாக்குமெண்டுகள்-
கோர்ட்டில் சமர்பித்தது.
முடிவில் அத்தீவு ப்ரிட்டன் வசம் கிடைத்தது.
2) கிளீப்போர்டன் என்ற தீவு மெக்சிகன் கடற்கரைக்கரைக்கு அருகில் உள்ளது. ஆனால் அது ஃப்ரான்சின்
பூர்வீக சொத்து.
மெக்சிகனும் இண்டர்ணேசனல் கோர்ட்டில் மோதியது.
வெற்றி ஃப்ரான்சுக்குத்தான்.
எமர்ஜென்சி காலத்தில் இந்தியாவும், இலங்கையும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
ஆனால் இலங்கை ஒப்பந்தப்படி நடக்காமல் மனித உரிமை மீறல் செய்து மீனவர் மீது துப்பாக்கி
சூடு நடத்தியது.

எனவே நாம் நம் வசம் உள்ள ஆதாரங்களூடன் இண்டர்ணேசனல் கோர்ட்டுக்கு சென்றால்
நமது பூர்வீகச் சொத்தான வாலி தீப் என்ற கச்ச்த்தீவு நமக்குத்தான் .
நமது மீனவர்களும் சுதந்த்திரமாக கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லலாம்..
புதிய அ.தி.மு.க. ஆட்சியும் ,இவ்விசயதில் ஆவன செய்து ,மத்திய அரசை
கலந்து ,பிரச்சனைக்கு முடிவு கட்டும் என நம்புவோம்.

நமது அரசாங்கம் இதற்கு முயற்சி செய்து ,கச்ச்த்தீவை மீட்டு, பல ஆயிரக்கனக்காNA
மீனவர்களீன் உயிரைக் காத்து , இலங்கையின் அட்டாகாசத்திற்கு முடிவு கட்ட ஆவன
செய்ய வேண்டும். Download As PDF

SETHU SAMUTHRA KAALVAAI THITTAM

சேது சமுத்திர கால்வாய்த் திட்டம்
----------------------------------------------------------
(முத்து ரத்தினம் )

" சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம் ,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் "

இது பாரதியார் கண்ட கனவு மட்டுமல்ல , நூற்று ஐம்பது ஆண்டு கால
தமிழர்களின் கனவாகும்.

இந்தியாவிலிருந்து பாக் ஜலசந்தி வழியாக இலங்கைக்கு கால்வாய் (canal ) அமைக்கும்
திட்டத்திற்கு முதன் முதலாய் அடிக்கல் நாட்டியவர் பிரிட்டிஷ் கமாண்டர் A . D . TAYLOR
என்பவர் . ஆண்டு 1860 .

அதற்குப் பிறகு திரு . ஜவகர்லால் நேரு அமைச்சரவை இத்திட்டத்திற்கு 1955 - ம் ஆண்டு
திரு . ராமசாமி முதலியார் தலைமயில் உயிர் கொடுத்து , திட்ட அறிக்கைக்கு கமிட்டி அமைத்தது .

அடுத்தடுத்து ,

1961 - ம் ஆண்டு தூத்துக்குடியிலிருந்து மண்டபம் வழியாக , பாக் - ஜலசந்தி மூலம் சேது
சமுத்திர கால்வாய் திட்டம் தீட்டப்பட்டு , பின்னர் கைவிடப்பட்டது .

1968 -ம் ஆண்டு தூத்துக்குடியிலிருந்து பாம்பன் வழியாக , பாக் - ஜலசந்தி மூலம் அடுத்த
திட்டம் தீட்டப்பட்டு அதுவும் கைவிடப்பட்டது .

1996 - ம் ஆண்டு தூத்துகுடியிலிருந்து ராமேஸ்வரம் வழியாக , பாக் - ஜலசந்தி மூலம்
திட்டம் தீட்டப்பட்டு கைவிடப்பட்டது .

பிறகு , தனுஷ்கோடி வழியாகவும் ஒரு திட்டம் உருவானது .

முடிவாக ,

தற்போதைய , தூத்துகுடியிலிருந்து மன்னார் வளைகுடா , பாக் - ஜலசந்தி வழியாக
சேது சமுத்திர கால்வாய் அமைக்கும் திட்டம் , செயல் ஆக்கத்திற்கு முடிவானது .

இத் திட்டத்தின் பலன்கள்
-----------------------------------------------

இத்திட்டத்தின் மூலம் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் நேரிடையாக
பலன் அடையும் .

வருடந்தோறும் , இத்திட்டத்தின் மூலம் மூவாயிரம் கப்பல்கள் சேது சமுத்திர
கால்வாய் மூலம் செல்லும் என கணக்கிடப்பட்டுள்ளது .

இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதிகள் இணையும் .

தமிழ் நாட்டின் எண்ணூர், கடலூர் , நாகப்பட்டினம் , தொண்டி, கொளச்சல் , கன்யாகுமரி
போன்ற பதின்மூன்று சிறிய கப்பல் தளங்கள் பயன் பெறும் .

வணிகக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிதான் இந்தியாவிற்குள் வந்து கொண்டு
உள்ளன .

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தின் படி , சுமார் நானூறு கிலோ - மீட்டர் அளவு -
இலங்கையைச் சுற்றி வருவது குறையும் . நேரமும் கணிசமாகக் குறையும்

இத் திட்டத்தின் பாதகங்கள்
--------------------------------------------

சேது சமுத்திர நவீன திட்டத்தின் படி , கால்வாய் வழியாக செல்லும் கப்பல்கள்
, அதிக பட்சமாக முப்பதாயிரம் (௩௦௦௦௦) டன்கள் சரக்குகள் வரை தான் ஏற்றிச் செல்ல முடியும் .

ஆனால் , தற்போதைய நவீன கப்பல்களின் டாங்குகள் , மற்றும் சரக்குகள் எடை
அறுபதாயிரம் (60000 ) டன்னிலிருந்து ஒரு லட்ச்சத்து ஐம்பதாயிரம் டன் வரை ஏற்றிச் செல்கின்றன .

இத்தகைய நவீன கப்பல்கள் சேது கால்வாய் மூலம் பயணம் செய்ய வழியில்லை .

உலகமறிந்த சுனாமி நிபுணர் டாட்- மூர்த்தி இந்திய அரசுக்கு முக்கியச் செய்தி
ஒன்றை விடுத்துள்ளார் . அதாவது ,

" தற்போதைய சேது சமுத்திர வழி , தெற்கு கேரளாவை ,சுனாமி தாக்கும் அபாயம்
உள்ளது " -என எச்சரித்துள்ளார் ,

தனுஷ்கோடி வழியாக சேது சமுத்திர கால்வாய் அமைப்பது நல்லது எனவும்
கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது .

மீன் பிடித் தொழில் பெருமளவு பாதிக்கும் எனவும் , கிட்டத்தட்ட வருடத்திற்கு

150 கோடி ( 1 .5 பில்லியன் ) நஷ்டம் வரும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் , விலை மதிக்க முடியாத " தோரியம் " - படிவங்கள் பாதிக்க வாய்ப்புள்ளது .

ஏனென்றால் , நாட்டின் அணு சக்தி மின் - நிலையங்களுக்கான " தோரியம் "-
நுக்லியர் எரி பொருள் - நமக்கு கிடைக்காமல் போய் விடும் .

மொத்தத்தில் , முன் வைத்த காலை பின் வைக்காமல் செலவு கூடினாலும் , பாரதி

கண்ட கனவை நினைவாக்க , அரசு ஆவன செய்ய வேண்டும் .

அதுவே , தமிழர்களின் ஒட்டு மொத்த விருப்பம் Download As PDF

VITHI

விதி
------------

1985 -ம ஆண்டு
என்னுடன் மேட்டூர் மில்லில் வேலை பார்த்தவர் குண்டு ராவ் . ஸ்பின்னிங் பகுதியில்
பணியாற்றினார் .
என்னிடம் நன்கு பழகுவார் .
குண்டுராவுக்கு வயது 23 . கம்பனி கொடுத்திருந்த விடுதியில் தங்கி இருந்தார் .
இவருக்கு பூர்வீகம் மைசூருக்கு அருகில் உள்ள ஒரு கிராமம் . பூர்விக சொத்தாக
தோட்டம் ஒன்று உண்டு.
அவ்வப்போது அவருடைய குடும்பத்தை பற்றி பேச்சு வரும் .நானும் என்
குடும்பத்தை பற்றி சொல்வேன்.
இவருடன் கூடப் பிறந்தவர்கள் ஐந்து பேர் . இவர் தான் கடைக்குட்டி .
இவருடைய சகோதரர்களின் கதையை இவர் கூறும் போது முற்போக்குவாதியான
என்னையே " அந்த விஷயம் " நிலை குலைய வைத்தது .
அடுத்தடுத்து , நடந்த அந்த நிகழ்வுகளை குண்டுராவ் எனக்கு விவரித்தபோது
உடம்பெல்லாம் புல்லரித்தது உண்மை.
அதற்கு அவர் சொன்ன காரணம் " எங்கள் குடும்பத்துக்கு,
" நாக தோஷமாக " இருக்கலாம் "- என்றார்.
அதாவது , இவருடைய மூத்த சகோதரர்கள் அனைவரும் ( நான்கு பேரும் )
ஏதாவது ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து நாகப் பாம்பு தீண்டி , உயிரைக் காப்பாற்ற
முடியாமல் இறந்து விட்டனர்.
இத்தனைக்கும் இவர்களுடைய அப்பா ,அம்மா சொந்த ஊரிலேயே , தோட்டத்திலேயே
வீடு கட்டி வாழ்ந்து வந்தனர் .
அடுத்தடுத்து இடைவெளிவிட்டு , ஒருவர் பின் ஒருவராக இறந்தாலும்
அனைவருக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது
எல்லோருமே கல்யாண வயதிற்கு முன்னமேயே விஷம் தீண்டி இறந்தனர்.
கடைக்குட்டியான குண்டுராவ் ,மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது சொந்த
ஊருக்குச் செல்வார் .இரண்டு அல்லது மூன்று நாட்கள் இருந்து விட்டு வருவார் .
குண்டுராவின் அப்பா , அம்மாவிற்கு ஏகப்பட்ட வேதனைகள் . வேண்டாத
தெய்வங்கள் இல்லை .
யார் என்ன சொன்னாலும் , எல்லா கோயில்களுக்கும் சென்று பரிகாரம் செய்வார்கள்.
லீவில் குண்டுராவ் வீட்டிற்குச் சென்றாலும், பெற்றோர் அவரை தோட்டத்துப்
பக்கமே அனுப்ப மாட்டார்கள் .இவர் விரும்பினாலும் அப்பா , அம்மா மிகவும் பிடிவாதமாக இருந்தார்கள் .
இருப்பது ஒரு பிள்ளை . இவன் ஒருவனாவது , நமது குடும்பம் தழைக்க
கல்யாணம் செய்து , குழந்தை குட்டிகளுடன் நன்றாக இருக்க வேண்டும் என கடவுளை வேண்டினார்கள்
ஒரு நாள் குண்டுராவின் வீட்டிலிருந்து கடிதம் வந்தது .
" வரும் திங்கட் கிழமை நீ கண்டிப்பாக ஊருக்கு வரவும் . உனக்கு பெண் பார்த்திருக்கிறோம்
வந்து பார்த்து விட்டு , உன் விருப்பத்தை தெரிவித்தால் , மேற்கொண்டு ஆவன செய்யலாம் "-
என அப்பா எழுதி இருந்தார் .
குண்டுராவை நாங்கள் எல்லாம் கிண்டல் செய்தோம் . " ஆகா , எங்களுக்கெல்லாம்
மைசூரில் பெரிய பார்ட்டி இருக்கிறது " - என ஆளாளுக்கு நக்கலடிதோம் .
அவருடைய முகத்தில் கல்யாண களை கட்டியிருந்தது .
அந்த நாளும் வந்தது . பெண் பார்க்கும் படலம் முடிந்தது . இவருக்கு பரம திருப்தி .
இவரை விட குண்டுராவின் அம்மாவிற்கு மிக்க சந்தோசம் .
தங்கள் குடும்பம் வாழையடி வழியாகப் போகிறது என பூரிப்பு .
அடுத்த வாரமே கல்யாண நாள் குறித்து , கல்யாண வேளையில் பிசியாக இறங்கி
விட்டார் .
குண்டுராவ் , கம்பனிக்கு ஒரு மாதம் லீவு சொல்லி விட்டார் .
எங்களுக்கு , போன் மூலமாக குண்டுராவ் விஷத்தை சொன்னார் . எல்லோரும் அவருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் - சொன்னோம்
மறு நாள் , முக்கிய வேலையாக மிசினில் பிரேக் டவுன் சரி செய்து கொண்டிருந்தேன் .
அப்போது ஒரு எலக்ட்ரிசியன் வந்து அந்த துக்க செய்தியைச் சொன்னான் .
" உங்கள் நண்பர் குண்டுராவ் இறந்துவிட்டதாக கம்பனிக்கு டெலி கிராம் வந்துள்ளது !".
எனக்கு சிறிது நேரம் கண்ணெல்லாம் இருட்டாகி விட்டது மாதிரி தோன்றியது.
அப்படியே ஒரு ஐந்து நிமிஷம் கிழே அமர்ந்து விட்டேன் ,
. பிறகு ஆபிசுக்கு ஓடினேன் .குண்டு ராவின் சக ஆபிசரும் அந்த துக்க செய்தியை உறுதி செய்தார் .
கம்பனியிலிருந்து அவருடைய விட்டிற்கு போனில் தொடர்பு கொண்டு விசாரித்தோம் .

நடந்தது இது தான் .
பெண் பார்த்துவிட்டு சென்ற மூன்றாம் நாள் , கல்யாண அழைபிதலை எடுத்துக் கொண்டு
மொபெட் - ல் நண்பர்களுக்கு கல்யாணத்திற்கு அழைக்கச் சென்றிருக்கிறார் .
இத்தனைக்கும் குறைந்த வேகத்திலேயே சென்றிருக்கிறார் .
ஒரு திருப்பத்தில் இவருடைய மொபெட் மீது இவருக்கு எமனாய் வந்த ஒரு லாரி
மோதியதில் பரிதாபமாக அதே இடத்தில இறந்து விட்டார் .
இது என்ன சோதனை ?
குடும்பத்தில் எல்லா சகோதரர்களுக்கும் நிகழ்ந்த மாதிரி நாக தோஷமும் இவருக்கு
ஏற்படவில்லை. குடும்ப வாரிசுகள் அனைவரும் மறைந்தது எதனால் ? ஏன் ?
இன்னும் புலப்படவில்லை !

----------------------------------------------------------------------------- Download As PDF

NILAVIL NAAN

நிலவில் நான் (முத்து ரத்தினம் )
-----------------------------------

எனக்கொரு இடம் வேண்டும் அந்த நிலவில்,

நிற்கக்கூட இடமில்லை இந்த பூமியில் .

தேய் பிறையில் வருவேன் இங்கு விடுமுறையில்,

வளர் பிறையில் செல்வேன் அங்கு இன்பக்களிப்பில்.

பாட்டி வடை சுட்ட கதை ஒன்றுண்டு அந்நாளில் ,

நாயர் டீ கடை உண்டு நிலவில் இந்நாளில் .

நிலாச்சோறு உண்டு மகிழ்வோம் பௌர்ணமியில் ,

மாதமொருமுறை விடுப்பு அவசியம் அமாவாசையில் .

ஜாதி , மத பேதமின்றி அனைவரும் குடியேறுவோம் ,

உலகின் "மாதிரி" சமத்துவபுரம் அங்கு அமைப்போம் .

ஊழலுக்கு எதிரான சட்டங்கள் இயற்றுவோம் ,

தன்னலமற்ற தலைவர் பலரை உருவாக்குவோம்.

----------------------- Download As PDF

NILAM

நிலம்
---------------
(முத்துரத்தினம் )
--------------------------

என் தாத்தா அந்தக் காலத்தில் பெரிய மிராசுதார் . மாணிக்கம்பாளையம் கிராமத்தில்

அவர் வைத்ததுதான் சட்டம். சுற்றியுள்ள கிராமத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் ஊர்க்கவுண்டர்.

நல்ல குமார கவுண்டர் என்றால் மிகப்பிரபலம் .

அவரிடம் உள்ள கெட்ட பழக்கங்கள் சில. அவற்றுள் ஒன்று குதிரையில் பயணம் செய்வது.

பயணம் செய்வது தவறு இல்லை. ஆனால் தினம் ஒரு குதிரை வாங்குவார் .அது தான் தவறு .

அதில் சுமார் இருபது கிலோமீட்டர் தூரம் உள்ள ஈரோடு வரை சென்று திரும்புவார் .

அந்தக் காலத்தில் பேருந்துகள் ஒன்றிரண்டு ஓடினாலும் அவர் பேருந்தில் ஏற மாட்டார் .

பேருந்தை முந்திக்கொண்டு குதிரையில் செல்வார். அதில் அவருக்கு பெருமிதம். யார் கண்டார்கள் ?

ஒரு வேளை என் தாத்தாவுக்கும் , தாத்தா குறுநில மன்னராக இருந்திருப்பார் போலும் .

இப்படி பணத்தை கண்டபடி செலவழிப்பதும், குடிப்பதுமாக இருந்ததால் , இருந்த சொத்துக்கள்

கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பித்தன . கூட இருந்த நண்பர்களும் பணத்துக்காகத்தான்.

என் தாத்தாவின் பலவீனத்தைப் பயன்படுத்தி , அவரிடமிருந்த நிலபுலன்களை அபகரித்தனர் பலர்.

இந்தவிதமான என் தாத்தாவின் செயல்களில் என் அம்மாயி ( பாட்டி ) தலையிடக்கூடாது !

அப்படிக்கேட்டால் அடி உதை தான் .

நான்கு பெண் குழந்தைகளையும், ஒரு ஆண் பிள்ளையையும் வைத்துக்கொண்டு , என் அம்மாயி

பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமல்ல .

எல்லாச் சொத்துக்களும் போக , கடைசியில் ஓலை வீட்டில் படுத்த படுக்கையாகி விட்டார் , என் தாத்தா .

இதற்கிடையில் மூத்த இரண்டு பெண் பிள்ளைகளும் கல்யாணமாகி சென்று விட்டிருந்தனர் .

அதாவது என் பெரியம்மாக்கள்.

அடுத்தது என் அம்மா.

என் அம்மாவுக்கும் சுமாரான இடத்தில் , பக்கத்து கிராமமான ஊஞ்சப்பாளையம் என்ற ஊரில்

திருமணம் நடந்தது . கல்யாணத்தை பார்த்த கையோடு என் தாத்தா இறந்து விட்டார் .

என் அப்பா , வேலை தேடி , சொந்த கிராமத்தில் இருந்து , பக்கத்தில் உள்ள மேட்டூருக்குச் சென்று

மில்லில் சேர்ந்து விட்டார் .

ஓரளவு நல்ல வருமானம் . அப்பாவுக்கு என் தாத்தாவின் அதாவது மாமனாரின் நேர் எதிர் குணம் .

என் அம்மாவின் சொல்லை தட்ட மாட்டார் . வாங்கும் சம்பளத்தை அப்படியே அம்மாவிடம்

கொடுத்துவிடுவார்.

பிறகு தினசரி செலவுக்கு வாங்கிக் கொள்வார் . சரியான நேரத்திற்கு வேலைக்குச் சென்று

, வேலை முடிந்தவுடன் வீடு திரும்பி விடுவார்.

எனக்குத் தெரிந்து அவர் பார்த்த சினிமாக்கள் மிகக் குறைவு . நல்ல பக்திப்படங்களாக

இருந்தால் பார்ப்பார் .

என் அம்மாவும் , அப்பாவின் சம்பாத்தியத்தில் சிக்கனமாக செலவு செய்து , சீட்டு சேர்த்து

மாடு வளர்த்து பால் ஊற்றி , சேமித்து சொந்த வீடும் கட்டியாகி விட்டது.

இதற்கிடையில் என் அம்மாவே முன்னின்று கடைக்குட்டியான என் சின்னம்மாவிற்கு திருமணம்

நடத்தி வைத்தார். தான் தம்பிக்கும் , படிக்கவைத்து வேலைக்கும் ஏற்பாடு செய்தார்.

பிறகு மாமாவிற்கும் திருமணம் நடத்தி , எங்கள் வீட்டுக்கு அருகிலேயே மலிவாய் விலைக்கு வந்த

வீட்டையும் வங்கிக் கொடுத்தார் , என் அம்மா .

அது மட்டுமல்ல, எங்கள் பாட்டியையும் சொந்த கிராமத்திலிருந்து , மேட்டூருக்கு கூட்டி வந்தனர்

என் பெற்றோர் .

இவ்வளவு காரியங்களையும் ,தன் உடன்பிறந்தவர்களுக்கு செய்கிறாளே என் அம்மா என அதிருப்தி

கொண்டது கிடையாது என் அப்பா.

மாமாவையும், என் சின்னம்மாவையும் அவர் மைத்துனன், மைத்துனி என நினைக்காமல் ,

தன் பிள்ளைகளாகவே நினைத்தார்.

இதற்கும் மேலாக என் சின்னம்மாவுடைய மூன்று பிள்ளைப் பெருகளுக்கும் - தாய் வீடாக -

எங்கள் வீட்டிற்கு கூட்டி வந்து , பிரசவம் முடிந்தவுடன் , ஒவ்வொரு குழந்தைக்கும் டாலர் செயின்

அணிவித்து , திருப்பி புகுந்த வீட்டிற்கு தாயையும் , சேயையும் அனுப்பி வைப்பனர் , என் பெற்றோர் .

என் மாமாவிற்கு , என் அம்மாவின் மேல் அளவு கடந்த பாசம் . வளர்த்து ஆளாக்கியவராயிற்றே !

தாய் ஸ்தானத்தில் இருந்து அனைத்தும் செய்த அக்கா அல்லவா !

ஊரில் உள்ள நல்லது , கேட்டது அனைத்திற்கும் இருவரும் சேர்ந்தே செல்வார்கள்.

மாமாவும் , அம்மாவைப் போல சிக்கனமாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார்.

எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர். வெத்தலை , பாக்கு சில சமயம் போடுவார் .மற்றபடி என் தாத்தாவுக்கு நேர்

எதிர் குணங்கள் .

அம்மாவிற்கும் , மாமாவிற்கும் ரொம்ப நாட்களாகவே ஒரு வைராக்கியம் .

எங்கள் தாத்தா வாழ்ந்த கிராமத்திலேயோ அல்லது அருகிலோ நிலம் வாங்க வேண்டும் என்பதுதான் அது.

அந்த நாளும் வந்தது . மாணிக்கம்பாளையம் அருகில் , செவானூர் கிராமத்தில் மூன்று ஏக்கர்

நிலம் விலைக்கு வந்தது .

சிக்கலான சூழ்நிலையிலும் அம்மாவும், மாமாவும் அந்த இடத்தை விடவில்லை. என் அப்பாவின்

பெயரிலும் , மாமாவின் பெயரிலும் கிரயம் ஆயிற்று

அம்மாவுக்கும் , மாமாவுக்கும் வெற்றிப் பெருமிதம் .

நாங்கள் தோட்டத்திலிருந்து முப்பது கிலோமீட்டர் தள்ளி இருந்தாலும் , மாமா மின் வாரியத்தில்

பணி புரிந்ததாலும் , தோட்டத்தை பராமரித்து விவசாயம் செய்ய முடியாதலால் , எங்கள் உறவினர்

ஒருவரிடம் ஒப்படைத்து பராமரித்து வந்தோம் .

நிலத்தில் நெல், கரும்பு , மஞ்சள் என பயிரிட்டு ஓரளவு வருமானமும் வந்து கொண்டிருந்தது .

என் அக்கா , அண்ணன் திருமணம் முடிந்து செட்டிலாகி விட்டார்கள்.

நானும் சொந்தம் போகாமலிருக்க ,என் மாமா பெண்ணையே திருமணம் செய்து இரண்டு

பையன்களும் பிறந்து விட்டார்கள் .

கடந்த சில மாதங்களாக , எங்கள் தோட்டத்தை பராமரித்து வருபவர் , வீட்டிற்கு வரும்

போதெல்லாம் ஒரு புகார் சொல்லிக் கொண்டு போவார் .

அதாவது ," எங்கள் பக்கத்து தோட்டக்காரர் அப்பா -சற்று வயதானவர் -எங்கள் தோட்டத்திற்கும் ,

அவர்கள் தோட்டத்திற்கும் இடையில் உள்ள வயல் வரப்பை சிறிது சிறிதாக வெட்டிக் கொண்டே

வருகிறார் -"- என்பது தான் அந்த புகாரின் சாராம்சம் .

சில சமயம் மாமாவும் , அம்மாவும் சென்று , எங்கள் உறவினர் சொல்வது சரியா எனப்பர்த்துவிட்டு ,

அவர் சொல்வது சரிதான் என தெரிந்து , பக்கத்து தோட்டக்காரரிடம் சண்டை போட்டு விட்டு திரும்பினர் .

எனக்கும் , என் அண்ணனுக்கும் தெரியப்படுத்தினார்கள் . நாங்கள் அதிக சிரத்தை எடுத்துக்கொள்ளவில்லை.

ஒன்று , நாங்கள் அவரவர் வேளையில் பிசி . இரண்டாவது நாங்கள் உழைத்து , வியர்வை சிந்தி ,

கஷ்டப்பட்டு நிலத்தை வாங்காததினால் வந்த அசிரத்தையா என தெரியவில்லை ,!

எங்கள் உறவினர் , ஒரு நாள் நேராக எங்களிடமே வந்து விட்டார்.

" வர வர பக்கத்து தோட்டக்காரரின் தொல்லை அதிகமாகிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக

மண்வெட்டியால் வரப்பை வெட்டி , தற்போது வரப்பில் நடக்கக் கூட முடியாமல் போய் விட்டது.

" உங்கள் அம்மாவிற்கும் , மாமாவிற்கும் வயதாகிவிட்டது, இனிமேல் நீங்கள் தான் பார்க்க

வேண்டும் . நீங்களும் கண்டும் காணாமல் இருக்கிறீர்களே ! உடனே வந்து ஆவன செய்யுங்கள்.

நான் ஏதாவது கேட்டால் என்னையே அடிக்க வருகிறார்கள் "- என புலம்பினார் .

எனக்கு சரியான கோபம் . மறுநாள் என்ன , ஏது என விசாரிக்க கிளம்பி விட்டேன்.

பொறுமையாகவே , பக்கத்து தோட்டக்காரரிடம் " நீங்கள் செய்வது சரியா " எனக் கேட்டேன்.

அதற்கு, " நீங்களே வாருங்கள் . இங்கு நின்று பாருங்கள் . இந்த எல்லைக்கல்லுக்கும் , கடைசி

எல்லைக்கல்லுக்கும் இடையில் உங்கள் நிலம் வளைந்து செல்கிறது . அதற்காகத்தான்

நாங்கள் வரப்பை வெட்டி நேர் செய்கிறோம் " -என்றார் .

"சரி , நாளை வருகிறேன் " -என அவரிடம் சொல்லி விட்டு ஏன் அம்மா , மாமாவிடம்

இது பற்றி விசாரித்தேன் .

மாமாவிற்கும் , அம்மாவிற்கும் என் மேல் சரியான கோபம் .அது அம்மாவின் பேச்சில்

தெரிந்தது.

" என்னடா , அவர்களை மிரட்டிவிட்டு வாடா என உன்னை அனுப்பினால் , அவர்கள்

சொன்னார்களாம் , இவன் நியாயம் பேச வந்து விட்டான் ."

" நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த நிலத்தை வாங்கியிருப்போம் . உனக்கு எப்படித்

தெரியும் ? நாம் நிலத்தை வாங்கி இருபத்து ஐந்து வருடங்களாகி விட்டது . வாங்கியது

வாங்கியபடி , அப்படியே நிலத்தில் வேளாண்மை செய்து கொண்டு இருக்கிறோம் ."

"அவர்கள் , நிலம் வாங்கி ஐந்து வருடங்கள் தான் ஆகிறது . அது பத்தாமல் , நம்

நிலத்தில் வேறு பங்கு கேட்க வந்து விட்டார்களோ ?"

என பொரிந்து தள்ளினார்கள் .

அன்று இரவு எனக்கு தூக்கமே எல்லை. மனதில் பல எண்ண ஓட்டங்கள் .

" மனிதன் பிறக்கும் போது எண்ண கொண்டு வருகிறான் . இறக்கும் போது என்ன உடன் கொண்டு செல்கிறான் "

" யாருக்கும் , யாருடையதும் சொந்தமில்லை . இன்று ஒருவருடைய சொத்து , நாளை வேறு

ஒருவருடைய கைக்கு சென்று விடுகிறது."

"உதாரணமாக , என் தாத்தாவின் சொத்தான நிலங்கள் , இன்று வேறு ஒருவருடைய கையில்.

நாளை யாருடைய கையிலோ ?! யாரறிவர் ?.

" பிறப்புக்கும் ,இறப்புக்கும் இடையில் மனிதன் தனக்கும், தான் சந்ததிக்கும் சொத்துக்காக

ஆளாய்ப் பறக்கிறான் ."

" யாருக்குமே , இது போதும் என்ற மன நிறைவு கிடையாது ."

" பெரிய பணக்காரனிலிருந்து , அன்னக்காவடி வரை நாளைக்காக சேர்த்து வைக்கிறான் ."

" மாறி வரும் இந்த உலகத்தில் எதுவும் , யாருக்கும் நிலையானதல்ல. நேற்று ஒருவர் கையிலும்

இன்று ஒருவர் கையிலும் , நாளை மற்றொருவர் கையிலும் மாறி, மாறி சுழன்று கொண்டே

இருக்கும் ."

" நாம் வாழும் பூமியே சுழன்று கொண்டிருக்கும் பொழுது , அதில் வாழும் நாமும் ஏற்ற ,

இறக்கங்களை , வாழ்க்கையின் மேடு ,பள்ளங்களை சந்த்க்கத்தனே வேண்டும். !"

" நம் உயுருள்ளவரை அனுபவிக்கலாமே தவிர , எந்த பொருளுக்கும் , நாம் சொந்தம்

கொண்டாட முடியாது. "

" உலகத்தில் பெரிய சந்தோசமே , அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி பார்ப்பதுதான். "

ஒரு தீர்கமான முடிவோடு உறங்கிப்போனேன் .

மறு நாள் நான் மட்டும் தனியாக தோட்டத்திற்குப் போனேன்.

எனக்காக, என் முடிவுக்காக , பக்கத்து தோட்டக்கரரின் குடும்பமே காத்திருந்தது.

என் வயது ஒத்த , பெரியவரின் மகனைக் கூப்பிட்டேன் . அவர் தானே நிலத்தின் சொந்தக்காரர்.

நான் அவரிடம் " உங்களுக்குத்தேவை நம் இருவர் நிலத்திற்கும் இடையில் உள்ள வளைவு

நேராக வேண்டும் . அவ்வளவுதானே , கயிறு கொண்டு வாருங்கள் , நேராகப் பிடிக்கலாம் ."

என்றேன்.

அவர்கள் குடும்பத்தவர் அனைவருக்கும் ஒரே ஆச்சரியம் ! சந்தோசம் ! என்னை நன்றிப்

பெருக்கோடு பார்த்தார்கள் .

அதற்குள் பெரியவர் " உங்கள் அம்மா, மாமா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் ?- என்றார்.

" அதற்கு நான் உத்திரவாதம் " -என்றேன் .

கயிறு கொண்டு வந்து நேராகப் பிடித்து , பின் வரப்பை அவரையே சரி செய்யச் சொன்னேன் .

வீட்டிற்கு வந்ததும் , நான் எதிபார்த்தபடி என் அண்ணன் , அம்மா , மாமா எவர்களிடம்

வாங்கி கட்டிக்கொண்டேன் .

" நாங்கள் வாங்கும் போது அன்றைய நிலத்தின் மதிப்பு மூன்று ஏக்கருக்கும் சேர்த்து

ரூபாய் அறுபதாயிரம் தான் ."

" இன்று அந்த நிலத்தின் மதிப்பு ரூபாய் இருபது லட்சம் . நீ பாட்டுக்கு இடத்தை

தாரை வார்த்து கொடுத்து விட்டாயே ."

" என்னவோ , நீங்கள் தான் நாளைக்கு அனுபவிக்கப் போகிறவர்கள் . இப்படி இருந்தால்

நீ நாளைக்கு உன் குழந்தைகளுக்கு என்ன சேர்த்து வைக்கப் போகிறாய் ? " என்றார் ,என் அம்மா

மாமாவுக்கு என்ன பேசுவது என தயக்கம் . ஒரு வகையில் நான் மருமகனாயிற்றே !

பதிலுக்கு நான் ," அம்மா , நான் செய்தது தவறு எனப் பட்டால் , அந்த நிலத்தில் எனக்காக

வரும் பங்கில் குறைத்து கொள்ளுங்கள். இதனால் நான் தாழ்ந்து விட மாட்டேன்."

கோபமாக சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

இந்த சம்பவத்திலிருந்து , எங்கள் தோட்டத்தை பராமரிபவரிடமிருந்து எந்த புகாரும் வரவில்லை.

இரண்டு மாதங்கள் சென்று இருக்கும் .

ஒரு நாள் தோட்டத்தை பராமரிக்கும் உறவினர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.

பக்கத்துக்கு தோட்டக்காரர் பைக் விபத்தில் இறந்து விட்டதாகச் சொன்னார்.

எனக்கு இருந்த வேலைச் சுமையில் உடனே சென்று துக்கம் விசாரிக்க முடியவில்லை.

ஒரு வாரம் கழித்து அவர்கள் வீட்டிற்க்குச் சென்று ,துக்கம் விசாரித்துவிட்டு , எங்கள்

தோட்டத்தை சுற்றி வந்து கொண்டு இருந்தேன் .

அப்போது பக்கத்து தோட்டத்தின் ஒரு மூலையில் , ஒரு சமாதி கட்டி முடியும் தருவாயில்

இருந்தது .அது பக்கத்து தோட்டக்காரரின் சமாதி .,

இரண்டு கொத்தனார்கள் வேலையின் போது பேசிகொண்டிருந்தார்கள்.

" எவ்வளவு ரேட் பேசியிருக்கே ? "

" மொத்தம் பத்து சதுர அடி வருது , ஒரு சதுர அடிக்கு ஐம்பது வீதம் ஐந்நூறு பேசி உள்ளேன் "

பளீரென என் மூலையில் ஒரு மின்னல் .

" அட ! நண்பர் தனக்காகத்தான் இவ்வளவு நாள் போராடி , எங்களிடமிருந்து அந்த

பத்து சதுர அடி நிலத்தைப் பெற்றுக் கொண்டாரா ?!

அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தித்தேன் .


------------------------------------------------------------------------------------ Download As PDF