Saturday, July 9, 2011

KACHCHTH THEEVU- THEERVU ENNA ?

கச்சத்தீவு ---தீர்வு என்ன ?
-------------------------------------------------

கச்சத் தீவு பாக்- ஜலசந்தியில் சுமார் முக்கால் சதுர மைலில் அமைந்துள்ள ஒரு தீவு.
இந்திய கடற்கரை எல்லையிலிருந்து பன்னிரண்டரை மைல் தூரத்திலும், இலங்கை
கடற்கரை எல்லையிலிருந்து பத்தரை மைல் தூரத்திலும் உள்ளது.
உயர்திரு.முகம்மது செரீப் , முன்னால் எம்.பி. (பெரியகுளம்) அவர்களால் பார்லிமெண்டில்
1-4-1968 ஆம் ஆண்டு , கச்ச்த் தீவு ராமனாதபுர ராஜாவுக்கு சொந்தமானது தான் என
போதுமான ரெக்கார்டுகள் சமர்ப்பிக்கப்பட்டன.
அப்போது உடன் , அரசு விரைந்து செயல்பட்டிருந்தால் ,இண்டர்ணேசனல் கோர்ட்டுக்குச்
சென்றீருதால் நமது பூர்வீகச்சொத்தான கச்ச்த் தீவு நம் வசம் இருந்து இருக்கும்.
ஆயிரக்கனக்கான உயிர் பலியும் கொடுத்திருக்க வேண்டியதில்லை.
இலங்கைக்கு அருகில் இருப்பதால் அது இலங்கைக்கு சொந்தமாகி விடாது. கச்சத்தீவு இந்தியாவின்
பூர்வீக சொத்து .
1) இங்லீஷ் கால்வாய் -இல் மிங்குயர்-என்ரோ என்ற தீவு உள்ளது, அது பிரிட்டீஸ் கடற்கரைக்கு
அதிக தூரத்திலும் ,ஃப்ரன்ச் கடற்கரைக்கு பக்கத்திலும் உள்ளது.
அதனால் ஃப்ரன்ச் அரசாங்கம் தீவு எங்கள் வசம் தான் இருக்க வெண்டும் என இண்டர்ணேசனல்
கோர்ட்டில் மோதியது.
ஆனால் ப்ரிட்டன், தீவு எங்கள் பூர்வீக சொத்து என்பதற்கான 1953-ம் வருட டாக்குமெண்டுகள்-
கோர்ட்டில் சமர்பித்தது.
முடிவில் அத்தீவு ப்ரிட்டன் வசம் கிடைத்தது.
2) கிளீப்போர்டன் என்ற தீவு மெக்சிகன் கடற்கரைக்கரைக்கு அருகில் உள்ளது. ஆனால் அது ஃப்ரான்சின்
பூர்வீக சொத்து.
மெக்சிகனும் இண்டர்ணேசனல் கோர்ட்டில் மோதியது.
வெற்றி ஃப்ரான்சுக்குத்தான்.
எமர்ஜென்சி காலத்தில் இந்தியாவும், இலங்கையும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
ஆனால் இலங்கை ஒப்பந்தப்படி நடக்காமல் மனித உரிமை மீறல் செய்து மீனவர் மீது துப்பாக்கி
சூடு நடத்தியது.

எனவே நாம் நம் வசம் உள்ள ஆதாரங்களூடன் இண்டர்ணேசனல் கோர்ட்டுக்கு சென்றால்
நமது பூர்வீகச் சொத்தான வாலி தீப் என்ற கச்ச்த்தீவு நமக்குத்தான் .
நமது மீனவர்களும் சுதந்த்திரமாக கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லலாம்..
புதிய அ.தி.மு.க. ஆட்சியும் ,இவ்விசயதில் ஆவன செய்து ,மத்திய அரசை
கலந்து ,பிரச்சனைக்கு முடிவு கட்டும் என நம்புவோம்.

நமது அரசாங்கம் இதற்கு முயற்சி செய்து ,கச்ச்த்தீவை மீட்டு, பல ஆயிரக்கனக்காNA
மீனவர்களீன் உயிரைக் காத்து , இலங்கையின் அட்டாகாசத்திற்கு முடிவு கட்ட ஆவன
செய்ய வேண்டும். Download As PDF

No comments:

Post a Comment