இயற்கை விவசாயம்
---------------------------------
வயலும் , வரப்பும் செழிப்பா இருந்தா
உழுபவன் பாடு கொண்டாட்டம் !
விளைச்சலுக்கு ஏத்த கூலி மறுத்தா
விவசாயி நிலை திண்டாட்டம் !.
ஒரு ஏக்கருக்கு , ஒரு மாடு , எரு
இயற்கை உரம் போதுமே !
அந்நிய நாட்டு செயற்கை உரம் ,
மண் வளம் பாழாகுமே !
சொட்டுநீர் பாசனம் தேவை இக்கணம்
மழை நீரை சேகரிப்போம் !
உழுபவன் கணக்கு பார்த்தா உலக்கை
தான் என்பதை மாற்றுவோம் !
எல்லா வளமும் இருக்கு தமிழ்நாட்டில் ,
இல்லை , ஒழுங்கு முறை விவசாயம் !
ஒன்று கூடி ஏர் உழுவோம் ,
விலை வாசியைக் குறைப்போம் !
-----------------------------------
Download As PDF
No comments:
Post a Comment