Saturday, July 9, 2011

EYARKAI VIVASAAYAM

                இயற்கை   விவசாயம்
                                                                       ---------------------------------

                 வயலும்  , வரப்பும்  செழிப்பா   இருந்தா
                உழுபவன் பாடு   கொண்டாட்டம் !
                 விளைச்சலுக்கு  ஏத்த கூலி மறுத்தா
                  விவசாயி  நிலை  திண்டாட்டம் !.
                ஒரு ஏக்கருக்கு , ஒரு மாடு , எரு
               இயற்கை உரம் போதுமே !
               அந்நிய நாட்டு செயற்கை உரம் ,
              மண்  வளம் பாழாகுமே !
              சொட்டுநீர் பாசனம் தேவை இக்கணம்
               மழை நீரை சேகரிப்போம் !
              உழுபவன் கணக்கு பார்த்தா உலக்கை
             தான் என்பதை மாற்றுவோம் !
              எல்லா வளமும் இருக்கு தமிழ்நாட்டில் ,
            இல்லை , ஒழுங்கு முறை விவசாயம் !
             ஒன்று கூடி ஏர் உழுவோம் ,
            விலை வாசியைக் குறைப்போம் !
                                           ----------------------------------- Download As PDF

No comments:

Post a Comment