'ஒளி' - மயமான தமிழகம்
|
நம்மிடம் போதுமான மின் உற்பத்தி இல்லையா? தேவைக்கு மீறி மின்சாரத்தை நாம் பயன்படுத்துகிறோமா?
இவற்றையெல்லாம் அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
முதலில் தமிழ்நாடு மின் வாரியத்தின்கீழ் உள்ள மின் உற்பத்தி நிலையங்களைப் பார்ப்போம்.
1) Gas Turbine Power Stations
தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் மேற்கூறிய கேஸ் டர்பைன் மூலம் மின் உற்பத்தி செய்யும் இடங்கள் உள்ளன.
a) பேசின் பிரிட்ஜ் (BBGTPS)
இதன் உற்பத்தி - 120 MW (மெகாவாட்)
b) குத்தாலம் (GTPP)
இதன் உற்பத்தி - 100 MW
c) வலத்தூர் (Ramnad) (VGTPS)
இதன் உற்பத்தி - 95 MW
d) திருமாகோட்டை (kovilkalappal)
இதன் உற்பத்தி - 107.88 MW
2) THERMAL - POWER STATION
தமிழ்நாட்டில் நான்கு இடடிங்களில் அனல்மின் நிலையங்கள் உள்ளன. அவை எங்கு, எவ்வளவு மின் உற்பத்தி என பார்ப்போம்.
a) வட சென்னை - NCTPS - 1800mw
b) எண்ணுர் - ETPS . 1000 mw
c) மேட்டூர் - MTPS - 800 mw
d) தூத்துக்குடி - TTPS - 1050 mw
3) HYDRAO POWER STATION
தமிழ்நாட்டில் உள்ள ஹைட்ரோ மின் உற்பத்தி நிலையங்கள் மொத்தம் 27 இடங்களில் உள்ளன.
a) சாத்தனூர் - 7.5 mw
b) மேட்டூர் டர்னல் - 200 mw
c) மேட்டூர் டேம் - 500 mw
d) கீழ் மேட்டூர் - 120 mw
e) பவானி கட்டளை - 30 mw
f) மறவாகண்டி - 0.75 mw
g) கீழ் பவானி - 16 mw
h) மோயார்- 36mw
பைகாரா - 59.2 mw
குந்தா (i+ii+iii)- 60+175+
ஆழியார் - 60 mw
பூனாச்சி - 2 mw
காடம்பாறை - 400 mw
வைகை - 6 mw
பைகாரா - 2 mw
முகுர்த்தி - 700 mw
திருமூர்த்தி - 1.95 mw
சர்க்கார்பதி - 30 mw
சோலையார் - 70 mw
சோலையார்-II - 25 mw
பெரியார் - 140 mw
சுருளியார் - 35 mw
சேர்வலார் - 20 mw
பாபநாசம் - 32 mw
கோதையார் - 60 mw
கோதையார்-II - 40 mw
பெருஞ்சேரை - 1.30 mw
மேற்கூறிய மின் நிலையங்களில் HYDRO POWER STATION-களில் நீர் இருந்தால்தான் மின் உற்பத்தி ஆக வழி உண்டு.
THERMAL POWER STATION-களில் மூலப் பொருளான COAL-நிலக்கரி இருந்தால்தான் மின் உற்பத்தி ஆகும்.
அது மட்டுமல்லாமல் கரியினால் ஏற்படும் கரியமிலவாயு எனப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு (CO2) - சுற்றுப்புறச் சூழலை மாசு படுத்தும்.
எனவே, NON - CONVENTIONAL ENERGY எனப்படும் மரபு-சாரா எரிசக்தி மூலம், பின்வரும் சக்திகள் மூலம் மின் உற்பத்தி செய்வது மிக்க நல்லது.
அடுத்து NON-CONVENTIONAL ENERGY SOURCE (NCES) எனும் மரபு சாரா மின் உற்பத்தியைப் பற்றி பார்க்கலாம்.I) Wind Energy - காற்றாலை
காற்றாலை மின் உற்பத்தி மூலம் 5446.165 mw மின் உற்பத்தி உண்டாகிறது. நம் தமிழ்நாட்டில்.
இது இந்தியாவின் மொத்த காற்றாலை மின் உற்பத்தியில் 45.35% விழுக்காடு ஆகும்.
II) Bio - Mass Energy
இதனை வகையாகப் பிரித்து, மின் உற்பத்தி உண்டாக்கலாம். அவை,
i) Bag asse based congeneration plants
ii) Bio - mass based cogeneration plants
iii) Bio - mass gasifiction based power plants
iv) Municipal solid waste & vegetable based power plant.
Bio-Mass Power Plant மூலம் 2010 - நவம்பர் நிலவரப்படி மொத்தம் 139.05 mw மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
co-generation power plant மூலம் 2010 - நவம்பர் நிலவரப்படி மொத்தம் 609.9 mw மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
iii) Solar Energy
சோலார் பவர் எனப்படும் இயற்கையிலேயே நமக்கு கிடைம் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் முறை சோலார் எனர்ஜி ஆகும்.
சோலார் பவர் மூலம் மின் உற்பத்தி செய்வதில் மற்ற மின் உற்பத்தி திட்டங்களை விட சாலச் சிறந்தது.
ஏனெனில் மற்ற Bio-Mass, co-generation, Thermal Power Plant மூலம் மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
ஆனால் சோலார் மின் உற்பத்தியில் சுற்றுச்சூழல் (மாசு) பாதிக்கப்படாமல், பசுமையை காக்கலாம்.
அரசு, தனியார் சோலார் மின் உற்பத்தியாளர்களுக்கு MNRE (Ministry of New and Renewable Energy) ஊக்கத் தொகை மற்றும் உற்பத்தியாகும் மின் சக்திக்கு ரூ.10, ஒரு யூனிட்டுக்கு என அறிவித்துள்ளது.
மேலும், மற்ற மின் உற்பத்திகளில் இல்லாத மிக முக்கியமான உகபோயகமும் சோலார் மின் உற்பத்தியில் உள்ளது.
என்னவெனில், மற்ற மின் திட்டங்களில் மின்சாரத்தை சேமிக்க முடியாது.
ஆனால் சோலார் எனர்ஜி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை Solar Photovoltalc (SPV) செல்கள் மூலம் சேமித்து நேரடியாக DC எனப்படும் Direct Current-க்கு மாற்றலாம்.
சோலார் போட்டோ வோல்டாக் செல் சேமித்து, வீட்டு மின் உபயோகம், தெரு விளக்குகள், தண்ணீர் சுத்திகரிப்பு, மோட்டார் இயக்கம், ரயில்வே சிக்னல் போன்றவற்றிற்கு மின்சாரத்தை பயன்படுத்தலாம்.
இதுவரை தமிழ்நாட்டின் மின் உற்பத்தியைப் பற்றி பார்த்தோம். அடுத்து, மேற்கண்ட அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் சரியான முறையில் இயங்குகிறதா என பார்க்க வேண்டும்.
நூறு சதவீதம் மேற்சொன்ன அனைத்து நிலையங்களும் இயங்கி, தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு வருமா என ஆராய வேண்டும்.
மின் உற்பத்தி சாதனங்கள் பழுதுபட்டிருந்தால் உடன் அரசு தலையிட்டு பராமரிப்பு செய்யவேண்டும்.
மேலும் அரசு புதிய பல மின் உற்பத்தித் திட்டங்கள் மேற்கொண்டிருந்தாலும், சோலார் பவர் மற்றும் காற்றாலை மின் உற்பத்திகளுக்கு அதிக ஊக்கம் தரவேண்டும்.
தற்போது உள்ள சூழ்நிலையில் மாசு கட்டுப்பாடு மிக முக்கியமான ஒன்று. அதற்கு மேற்சொன்ன மின் உற்பத்தி நிலையங்கள் அதிகம் வரவேண்டும்.
மிகப்பெரிய, இந்தியாவின் தொழிற்சாலைகள், தங்கள் பயன்பாட்டிற்கென, சொந்தமாக சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிறுவிக் கொண்டால், மின்சாரக் கட்டணம் (ஆலை உற்பத்திக்கு கணிசமாகக் குறையும். தொழிற்சாலைகளும் மின் வெட்டிலிருந்து தங்களை காத்துக் கொள்ளலாம்.
மேலும் மின் உற்பத்திகாக்கான மூலப் பொருள்களான சூரிய ஒளி மற்றும் காற்று ஆகியவை இலவசமாக கிடைக்கிறது.
தமிழ்நாட்டின் மின் தேவையை Hydro மூலம் 21 சதவீதமும், Thermal மூலம் 29 சதவீதமும். Gas மூலம் 5 சதவீதமும், மத்திய அரசிடமிருந்து 28 சதவீதமும், ipp மூலம் 12 சதவீதமும், மற்ற இதர மின் உற்பத்தி மூலமும் 5 சதவீதமும் - பூர்த்தி செய்து கொள்கிறோம்.
இவற்றில் காற்றாலை உற்பத்தியில் தமிழகம் (இந்தியாவில்) முன்னணியில் உள்ளது.
"மின் சிக்கனம், தேவை இக்கணம்" - போன்ற வாசகங்கள் அரசிடமிருந்து மக்களுக்குச் சென்றாலும், இன்னும் அதிக பொறுப்புணர்ச்சி வந்தால்தான் மின்சாரத்தை சேமிக்க முடியும்.
மின்சாரத்தை சேமித்து, நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு செலவழித்தால்தான், நாடு வளம் பெறும். விலைவாசியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.
ஆடம்பர விழாக்கள், தேவையற்ற பொதுக் கூட்டங்கள் இவற்றிற்கு ஆகும் மின் தேவையை குறைத்துக் கொள்ளவேண்டும்.
முக்கியமாக மின் திருட்டை அறவே ஒழிக்கவேண்டும். இலவச மின்சாரம் விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.
தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் உள்ள மின் உற்பத்தி நிலையங்களைப் பற்றி பார்த்தோம்.
தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசின் கீழ் இயங்கும் (NUCLEAR POWER PLANT - ATOMIC POWER PLANT) அணுமின் நிலையங்களைப் பற்றி பார்க்கலாம்.
1) MADRAS NUCLEAR POWER PLANT - கல்பாக்கம்
(2x220MW) இதன் மூலம் 440 MW மின் உற்பத்திச் செய்யப்படுகிறது.
2) மேலும், கூடங்குளம் NUCLEAR POWER PLANT - தற்போது நிறுவப்பட்டு, முடியும் தருவாயில் உள்ளது. இதன் மூலம் 2x1000mw உற்பத்தி செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment