Wednesday, September 21, 2011

வரிகள் - முரண்பாடுகள்

                   வரிகள் - முரண்பாடுகள்
                                                     -----------------------------------------
   நாம் பல விசயங்களில் அரசாங்கத்தோடு ஒத்துப் போகிறோம் .
 அதில் நாம் செலுத்தும் வரிகளும் ஒன்று.
      இதில் உள்ள முரண்பாடுகளை பார்ப்போம் .
1 )   நாம் சாலை வரி கட்டுகிறோம் , ஏனென்றால் சாலை அமைக்கவும் ,
   சாலை பராமரிப்பு செலவுகளுக்காகவும் , அரசாங்கத்திற்கு பணம்
  தேவைபடுகிறது. அதில் அர்த்தம் உள்ளது.
2 )  நாம் தண்ணீர் வரி கட்டுகிறோம் , ஏனென்றால் தண்ணீரை சுத்தப்படுத்தி ,
      நம் வீட்டு வரை கொண்டு வருவதற்கு அரசாங்கத்திற்கு பணம் தேவைப்
    படுகிறது. அதில் அர்த்தம் உள்ளது .
 3 ) நாம் மின்சார வரி கட்டுகிறோம் , ஏனென்றால் மின்சார உற்பத்தி ,
     மற்றும் பராமரிப்பு , நம் வீடு வரை மின்சாரத்தை கொண்டு வர அரசாங்கத்திற்கு
   பணம் தேவைபடுகிறது . அதில் அர்த்தம் உள்ளது.
 4 ) நாம் வீட்டு வரி கட்டுகிறோம் , வீட்டு பட்டா என் பெயரில் உள்ளது .
      வீடு எனக்கு சொந்தம் . அரசாங்கத்திற்கு நான் ஏன் வரி கட்ட வேண்டும் ?.
       இதில் அர்த்தம் உள்ளதா ?
 5 ) நாம் விவசாய நில வரி கட்டுகிறோம் . விவசாய நிலம் என் பெயரில் உள்ளது .
      பட்டா என் பெயரில் உள்ளது . நான் ஏன் அரசாங்கத்திற்கு (கந்தாயம் )
     வரி கட்ட வேண்டும் ? இதில் அர்த்தம் உள்ளதா ?
 6 ) நாம் சுதந்திரம் அடைந்து  அறுபது நான்கு ஆண்டுகள் ஆகியும் , ஆங்கிலேயர்
     கட்ட பொம்மனிடம் அநியாய வரி வசூலித்த கதை போல  ,இது உள்ளதா ,இல்லையா ?
 7 )  யாராவது அரசாங்கத்திடம் எடுத்து சொல்லி , ஆவன செய்வார்களா ?
     அல்லது  சட்ட ரீதியாக  அணுகி  , இதற்கு வழி காண முடியுமா ?
 
Download As PDF

No comments:

Post a Comment