கோடித்துணி (முத்து ரத்தினம் )
-------------------- --------------------
இரண்டு நாளாக சாப்பாட்டுக்கே வழியில்லை . மனைவி கோமதி வேறு வள வள என
கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தாள் . என்ன செய்வது ? தனக்கோடிக்கு வெட்டியான் வேளை தவிர
வேறு தொழில் எதுவும் தெரியாது .
அவனுக்கென அவன் அப்பா விட்டுச் சென்ற வாரிசு வேலை தான் இது . ஆண்டவன்
படைப்பில் ஆயிரம் ரகங்கள் . ஒருவர் இறந்தால் அந்த இழப்பிலும் ஒருவனுக்கு ஆதாயம் .!
கடந்த ஒரு வாரமாக அந்த ஏரியாவில் யாரும் சாகவில்லை . கூலி வேலைக்கு கூட
தனக்கோடியை யாரும் கூப்பிடுவதில்லை .
இந்த லட்சணத்தில் அவனுக்கு இரண்டு குழந்தைகள் . பெரியவுளுக்கு நன்கு வயது ,
சின்னவனுக்கு இரண்டு வயது . தங்களுக்கு இல்லாவிட்டாலும் , குழந்தைகளுக்காவது சாப்பாட்டுக்கு
ஏற்பாடு செய்ய வேண்டும்.
கோமதிக்கு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வயல்களில் வேலை கிடைக்கும் .
அதை வைத்து அரை வயிறு கஞ்சியாவது குடித்துக் கொண்டிருந்தார்கள் .
பஞ்சாயத்து தலைவரிடம் ட்ராக்டர் ஓட்டும் வடிவேலு வேக வேகமாக தனக்கோடி
வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான் .
அவன் வருவதைப் பார்த்து , தனக்கோடி மனைவி கோமதி தன் கணவனை வசைபாடும்
சுருதியை சற்று இறக்கி , " ஏனுங்க , ஏதாவது வேலையா ? தோட்டத்துக்கு ஆள் தேவையா ? - என
வடிவேலுவைக் கேட்டாள் .
" இல்ல புள்ளே ! நான் வந்தது வேற , நம்ம பஞ்சாயத்து தலைவரு அப்பாரு மண்டைய
போட்டுட்டாரு ," ஹார்ட் அட்டாக்காம் " - அதுதான் தனக்கோடிகிட்ட சொல்லி குழி வெட்ட வந்தேன் ."
" ஏய் , தனக்கோடி சீக்கிரம் வா , நான் இடத்தை காட்டுறேன் , இந்தா இதைப் புடி "- என
தன் மடியில் வைத்திருந்த ஒரு குவார்ட்டர் பாட்டிலை அவன் கையில் திணித்தான் , வடிவேலு.
தனக்கோடியின் முகத்தில் அவ்வளவு பிரகாசம் ! வீட்டின் உள்ளே சென்றவன் , மறைவில்
பெண்டாட்டியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே , சரக்கை ராவாக உள்ளே இறக்கினான் .
பின் , தன் பரிவாரங்களான கடப்பாரை , மம்பட்டியுடன் வடிவேலுவின் பின்னால்
நடையைக் கட்டினான் .
சுமார் மூன்று மணி நேரத்தில் , தன் கடமையைச் செய்துவிட்டு , குழிக்கருகில் " அப்பாடா "
என அமர்ந்தான் , தனக்கோடி .
சரக்கு அவனது களைப்பை சிறிது குறைத்தது .
பஞ்சாயத்து வீட்டில் தாரை , தப்பட்டையுடன் தலைவரின் அப்பாரு , மீளமுடியாத
உலகத்திற்குச் செல்ல , பூ அலங்காரங்களுடன் தேர் ரெடியாகிக் கொண்டிருந்தது .
மாலை நான்கு மணி வாக்கில் , வடிவேலு இடுகாட்டிற்கு வந்தான் . குழி ரெடியா என
பார்த்துவிட்டு , தனக்கோடியிடம் மறுபடியும் ஒரு குவார்ட்டரை நீட்டினான் .
" ஆஹா ! இன்று ஒரே மஜா தான் . இரவு நன்றாக தூங்கலாம் ."
வடிவேலு சென்றவுடன் பாட்டிலில் உள்ள சரக்கை உள்ளே தள்ளினான் , தனக்கோடி.
இன்று அமாவாசை நாள் . பொழுது சாய்வதற்குள் பிணம் இடுகாட்டுக்கு சென்று விட
வேண்டும் .
மள மளவென சாங்கிய , சம்பிரதாயங்கள் நடந்தன, பெருசும் பஞ்சாயத்து தலைவராக
இருந்தவர் தான் ! பரம்பரை பரம்பரையாக பஞ்சாயத்து குடும்பம் .
ஊருக்காக உழைத்தவர் என்பதால் ஊரே திரண்டு வந்து இரங்கல் கொண்டாடியது .
பிணம் தேரில் ஏறியது . இடுகாடு சென்ற வழி நெடுகிலும் பூக்களும் , காசுகளும் தேரின்
மீது இறைக்கப்பட்டன .
தேர் , குழி அருகில் இறக்கி வைக்கப்பட்டது .
தனக்கோடி , பவ்யமாக ஊர் பெருசுகளுக்கு கும்பிடு போட்டான் .
அதில் ஒருவர் , ' யாராவது மண்டையப் போட்டா , நம்ம தனக்கோடிக்கு தீபாவளி தான் ,
பாரு அவன் எப்படி மப்பும் மந்தாரையுமா திரியிறான் " -எனச் சொல்லி விட்டு சிரித்தார்.
உடனே தான் கையிலிருந்த துண்டை வாயில் வைத்து பொத்திக்கொண்டான், தனககோடி .
கடமைக்காக பஞ்சாயத்து , புதை குழிக்கு மண் தள்ளினார் . பிறகு வரிசையாக உறவினர்கள்
கைப்பிடி மண்ணை அள்ளி குழிக்குள் போட்டனர் .
தனககோடி , தன் கடமையை நிறைவேற்ற , மண்வெட்டியை எடுத்து மண்ணை தள்ள
ஆரம்பித்தான்.
கூட்டம் கலைய ஆரம்பித்தது.
கூட்டத்தோடு சென்று கொண்டிருந்த ஒருவன் , திரும்பி வந்து தனக்கொடியிடம் , "கொஞ்சம்
பொறுப்பா " - என்றவன் குழியில் எறங்கி , பிணத்தை போர்த்தி இருந்த கடைசி கோடித்துணியை
உருவி எடுத்துக் கொண்டு ," இப்ப மண்ண தள்ளப்பா " - என்று சொல்லி விட்டு தள்ளாடியபடியே
சென்று விட்டான் .
ஒரு நிமிஷம் தனக்கோடிக்கு ஒன்றுமே புரியவில்லை .
"என்னப்பா உலகம் இது ! பிறக்கும் போது தான் மனிதன் அம்மணமாக பிறக்கிறான் .
போகும் போதாவது ஒரு முழ துணி கட்டிக் கொண்டு போக விடமாட்டேன் ,என்கிறார்களே ! "
கலி காலம் என்பது சரி தான் !?
பெருசு இந்த ஊருக்கு எவ்வளவோ செய்துள்ளார் . எப்படியோ வாழ்ந்தவர் ,இன்று
ஒரு கோடித்துனிக்கு கூட வழியில்லையா ?
அவ்வளவு போதையிலும் நிதானம் இழக்கவில்லை , தனககோடி .
" நிதானம் இழந்தவன் துணியை உருவியவன் தான் ."
தனககோடி தான் கட்டியிருந்த பழைய வேட்டியை உருவி , பிணத்தின் மீது போர்த்தினான் .
அவன் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது எப்பவுமே அவன் பட்டா பட்டி
ட்ராயர் அணிந்திருப்பான் .
குழியை நிரவி விட்டு , தலைமாட்டில் கல்லை வைத்து விட்டு , வீட்டிற்கு
நடையைக் கட்டினான் , தனககோடி .
அவனைப் பார்த்த அவன் மனைவி கோமதி , " அடப்பாவி மனுசா " , இருந்த
ஒரு வேட்டியையும் தொலைத்துவிட்டு வந்துட்டியே , குடிச்சுட்டா வேட்டி அவுந்தது
கூடவா தெரியாது ? " - என்றபடியே அவனை வலுக்கட்டாயமாக உட்காரவைத்து ஒரு
குடம் தண்ணீரை அவன் தலையில் கொட்டினாள் .
தனக்கோடியின் முகத்தில் ஒரு பெருமிதம் !
" பெருசுக்கு நானும் ஒரு சொந்தக்காரன் ஆகி விட்டேன் , அவருக்கு கோடித்துணி போட்டு !!"
------------------------------------------------------------
Download As PDF
Saturday, July 9, 2011
NESAM
நேசம்
--------------
( முத்து ரத்தினம் )
இங்கு சாலை வசதியையும் , கார்கள் செல்லும் வேகத்தையும் கண்டு
பிரமித்தான் , துரைராசு.
கார்களின் வேகம் சுமார் 120 கி. மீ . இருந்து 150 கி . மீ.வரைக்கும் . டிரக்குகள் 100 கி .மீ.
வேகத்தில்.!
அடேயப்பா ! இது இந்தியாவின் எந்தவொரு ஊரிலும் அல்ல ! துரைராசு இருப்பது
சவுதி அரேபியாவில் !
ஜித்தாவிலிருந்து முன்னூறு கி. மீ. தொலைவிலுள்ள முத்தலீப் என்ற ஊர்.
இரண்டு வருடம் முன்பு தான் இங்கு வந்து சேர்ந்தான். வந்த புதிதில்
துரைராசுவுக்கு ஏகப்பட்ட பிரமிப்பு.!
அது ரியாத் விமான நிலையத்தில் ஆரம்பித்து, ஜித்தா விமான நிலையம் ,
மற்றும் வித விதமான அமெரிக்க , ஜப்பான் கார்களின் அணி வகுப்புவரை நீண்டது.
டிப்ளோமா சிவில் முடித்து , ஹை -வேசில் வேலை வேலை பார்த்துகொண்டிருந்த
துரைராசுவுக்கு எதிர்பாராத விதமாக சவுதி அரேபியாவில் சாலை பராமரிக்கும்
பணியில் சூபர்வைசர் வேலை கிடைத்தது.
நல்ல சம்பளம் . உடனே கிளம்பி வந்து விட்டான் .
இவனோடு பணியில் இரண்டு பாகிஸ்தானியர்கள் , ஒரு எகிப்து நாட்டவரும் ,
இரண்டு பங்களாதேஷ் நாட்டவரும் இருந்தனர்.
ஆரம்பத்தில் இந்தி, மற்றும் அரபி மொழி பிரச்சனை இருந்தாலும்
,சிறிது நாளில் பேசக் கற்றுக்கொண்டான் . அனைவரும் ஒரு குடும்பத்தில் உள்ளவர்
போல் பழகினார்கள்.
இவன் ஒருவன் மட்டுமே இந்துவாக இருந்தாலும் , மற்றவர் இவனை ஒரு
சகோதரன் போல பாவித்து வந்தார்கள்.
இதில் சப்தார் என்ற பாகிஸ்தானியும் , துரைரசுவும் மிக நெருங்கிய நண்பர்களாகி விட்டனர் .
மாலை நேரங்களில் வாக்கிங் செல்லும் போதும் , கடைகளுக்கு செல்லும் போதும்
இருவரும் சேர்ந்தே செல்வார்கள் .
அப்போது சமீபத்திய இந்தி சினிமாவிலிருந்து , தற்போதைய இந்திய ,பாகிஸ்தான்
நடப்புகள் அனைத்தையும் அலசுவார்கள் ,
.
டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் நல்ல மழை . இதனால் சாலை ஓரங்களில் மண்
அரிப்பு ஏற்பட்டு , பத்து கி. மீ. தூரத்துக்கு சாலை பழுதடைந்து விட்டது.
சாலை ஓரத்தில் " மெதுவாகச் செல்லவும் " -போர்டுகளையும் சிவப்பு
வர்ணம் அடிக்கப்பட்ட முக்கோண கூம்பு போன்ற பிளாஸ்டிக் ஸ்டாண்டுகளையும்
வைத்துவிட்டு , ஆட்களிடம் வேலை வாங்கிக் கொண்டிருந்தான் ,துரைராசு .
அப்போது தான் , யாரும் எதிர்பாரா வண்ணம் அந்த விபத்து நடந்தது.
120 கி. மீ . வேகத்தில் வந்த கார் ஓன்று , பிளாஸ்டிக் ஸ்டாண்டில் மோதி ,
பிரேக் பிடித்தும்,கண்ட்ரோல் இல்லாமல் , சாலை அருகில் நின்று கொண்டிருந்த
துரைராசுவின் மீது மோதியது .
இருபதடி தூரம் தூக்கி எறியப்பட்ட துரைராசு , பெருமளவு ரத்தம் வெளியேறி
,சுய நினைவு இழந்தான் ,.
கூட இருந்தவர்கள் , துரைராசுவை , கம்பெனி காரில் , மருத்துவ மனைக்கு கொண்டு
சென்றார்கள் .
உடனடியாக ரத்தம் தேவைப்பட்டது, துரைராசுவுக்கு.
உடன் இருந்த அனைவரும் ரத்தம் தர தயாரானார்கள் .
துரைராசுவின் நண்பன் , சப்தாரின் ரத்தம் ஒரே குரூப்பாக இருந்ததால் , துரைராசு
பிழைத்துக் கொண்டான் .
மயக்கம் தெளிந்த துரைராசு , கண்ணில் நீர் பெருக சப்தாரை தழுவிக் கொண்டான் .
ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் ரத்தத்தால் , அன்பால் இந்து, முஸ்லிம் மட்டும்
இணையவில்லை. இந்தியாவும் , பாகிஸ்தானும் தழுவிக் கொண்டதைப் போல இருந்தது ! Download As PDF
--------------
( முத்து ரத்தினம் )
இங்கு சாலை வசதியையும் , கார்கள் செல்லும் வேகத்தையும் கண்டு
பிரமித்தான் , துரைராசு.
கார்களின் வேகம் சுமார் 120 கி. மீ . இருந்து 150 கி . மீ.வரைக்கும் . டிரக்குகள் 100 கி .மீ.
வேகத்தில்.!
அடேயப்பா ! இது இந்தியாவின் எந்தவொரு ஊரிலும் அல்ல ! துரைராசு இருப்பது
சவுதி அரேபியாவில் !
ஜித்தாவிலிருந்து முன்னூறு கி. மீ. தொலைவிலுள்ள முத்தலீப் என்ற ஊர்.
இரண்டு வருடம் முன்பு தான் இங்கு வந்து சேர்ந்தான். வந்த புதிதில்
துரைராசுவுக்கு ஏகப்பட்ட பிரமிப்பு.!
அது ரியாத் விமான நிலையத்தில் ஆரம்பித்து, ஜித்தா விமான நிலையம் ,
மற்றும் வித விதமான அமெரிக்க , ஜப்பான் கார்களின் அணி வகுப்புவரை நீண்டது.
டிப்ளோமா சிவில் முடித்து , ஹை -வேசில் வேலை வேலை பார்த்துகொண்டிருந்த
துரைராசுவுக்கு எதிர்பாராத விதமாக சவுதி அரேபியாவில் சாலை பராமரிக்கும்
பணியில் சூபர்வைசர் வேலை கிடைத்தது.
நல்ல சம்பளம் . உடனே கிளம்பி வந்து விட்டான் .
இவனோடு பணியில் இரண்டு பாகிஸ்தானியர்கள் , ஒரு எகிப்து நாட்டவரும் ,
இரண்டு பங்களாதேஷ் நாட்டவரும் இருந்தனர்.
ஆரம்பத்தில் இந்தி, மற்றும் அரபி மொழி பிரச்சனை இருந்தாலும்
,சிறிது நாளில் பேசக் கற்றுக்கொண்டான் . அனைவரும் ஒரு குடும்பத்தில் உள்ளவர்
போல் பழகினார்கள்.
இவன் ஒருவன் மட்டுமே இந்துவாக இருந்தாலும் , மற்றவர் இவனை ஒரு
சகோதரன் போல பாவித்து வந்தார்கள்.
இதில் சப்தார் என்ற பாகிஸ்தானியும் , துரைரசுவும் மிக நெருங்கிய நண்பர்களாகி விட்டனர் .
மாலை நேரங்களில் வாக்கிங் செல்லும் போதும் , கடைகளுக்கு செல்லும் போதும்
இருவரும் சேர்ந்தே செல்வார்கள் .
அப்போது சமீபத்திய இந்தி சினிமாவிலிருந்து , தற்போதைய இந்திய ,பாகிஸ்தான்
நடப்புகள் அனைத்தையும் அலசுவார்கள் ,
.
டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் நல்ல மழை . இதனால் சாலை ஓரங்களில் மண்
அரிப்பு ஏற்பட்டு , பத்து கி. மீ. தூரத்துக்கு சாலை பழுதடைந்து விட்டது.
சாலை ஓரத்தில் " மெதுவாகச் செல்லவும் " -போர்டுகளையும் சிவப்பு
வர்ணம் அடிக்கப்பட்ட முக்கோண கூம்பு போன்ற பிளாஸ்டிக் ஸ்டாண்டுகளையும்
வைத்துவிட்டு , ஆட்களிடம் வேலை வாங்கிக் கொண்டிருந்தான் ,துரைராசு .
அப்போது தான் , யாரும் எதிர்பாரா வண்ணம் அந்த விபத்து நடந்தது.
120 கி. மீ . வேகத்தில் வந்த கார் ஓன்று , பிளாஸ்டிக் ஸ்டாண்டில் மோதி ,
பிரேக் பிடித்தும்,கண்ட்ரோல் இல்லாமல் , சாலை அருகில் நின்று கொண்டிருந்த
துரைராசுவின் மீது மோதியது .
இருபதடி தூரம் தூக்கி எறியப்பட்ட துரைராசு , பெருமளவு ரத்தம் வெளியேறி
,சுய நினைவு இழந்தான் ,.
கூட இருந்தவர்கள் , துரைராசுவை , கம்பெனி காரில் , மருத்துவ மனைக்கு கொண்டு
சென்றார்கள் .
உடனடியாக ரத்தம் தேவைப்பட்டது, துரைராசுவுக்கு.
உடன் இருந்த அனைவரும் ரத்தம் தர தயாரானார்கள் .
துரைராசுவின் நண்பன் , சப்தாரின் ரத்தம் ஒரே குரூப்பாக இருந்ததால் , துரைராசு
பிழைத்துக் கொண்டான் .
மயக்கம் தெளிந்த துரைராசு , கண்ணில் நீர் பெருக சப்தாரை தழுவிக் கொண்டான் .
ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் ரத்தத்தால் , அன்பால் இந்து, முஸ்லிம் மட்டும்
இணையவில்லை. இந்தியாவும் , பாகிஸ்தானும் தழுவிக் கொண்டதைப் போல இருந்தது ! Download As PDF
BISCUIT vs ALVAA
பிஸ்கட் vs அல்வா ( முத்து ரத்தினம் )
-----------------------------------------
மேலிடத்திலிருந்து ஏக பிரஷர் . போன மாதத்தில் மட்டும் நான்கு தடவை
ரயில்வே கொள்ளை.
எங்களுக்கு கிடைத்த க்ளு இவை தான் . " கொள்ளை அடிப்பவன் சுமார் 25 - லிருந்து
30 -வயதுக்குள் இருப்பான். எல்லாக் கொள்ளையிலுமே பிஸ்கட் கொடுத்து தான்
மயக்க வைத்து , நகை, பணம் திருடி இருக்கிறான். இரவு நேரத்தில் மட்டுமே தன் கை
வரிசையைக் காட்டுகிறான்.
நானும் , என் மனைவியாக நடித்த இன்ஸ்பெக்டர் பிரபாவும் கோவை டு சென்னை
மற்றும் சென்னை டு கோவை ஐந்து முறை பயணம் செய்தாகி விட்டது. "எலி "அகப்படவில்லை.
எங்கள் எஸ். பி. யும் , " வேறு ஏதாவது வழி இருக்கிறதா , பாருங்கள்" - என்றார்.
" சார், இந்த ஒரு முறை கடைசி தடவையாக இருக்கட்டும் . பிறகு வேறு வழி யோசிப்போம்."
என்றேன் . வேண்டா வெறுப்பாக " சரி போங்கள் "- என்றார் , எஸ். பி.
டிக்கெட் ஏற்கனவே ரிசர்வ் செய்யப்பட்டிருந்த பெட்டிக்கு வெளியே , வழக்கத்திற்கு
மாறாக அரை மணி முன்னதாக சென்று பிளாட்பாரத்தில் காத்திருந்தோம் .
இன்ஸ்பெக்டர் பிரபாவும் அன்று மிக அதிகமாக நகைகள் அணிந்திருந்தார் .
கோவை எக்ஸ்பிரஸ் , திருப்பூரை அடைந்தது . டிப்- டாப்பான வாலிபன் ஒருவன்
கையில் சூட் கேசுடன் ஒவ்வொரு பெட்டியாக பார்த்துக்கொண்டே வந்து ,எங்கள்
பெட்டியில் ஏறினான் . மணி இரவு 8 /30 .
எங்களைப் பார்த்து லேசாக சிரித்தபடியே " நான் அவசரமாக சென்னை செல்ல வேண்டும் ,
டிக்கெட் வேறு எடுக்கவில்லை ." -என்றான் .
டி. டி . ஆர் . வந்தவுடன் அவரிடம் விசயத்தைச் சொல்லி , டிக்கெட்டும் வாங்கிக் கொண்டான் .
இரவு 10 -00 மணி . நான் வார இதழில் மூழ்கியிருந்தேன் . பிரபாவிடம் ஓரிரு
வார்த்தை பேசியவன் , தன் பையிலிருந்து பிஸ்கட் பாக்கெட்டை எடுத்தான் .
வண்டி ஈரோட்டை தாண்டியிருந்தது .
இரண்டு பிஸ்கட் சாப்பிட்டவுடன் , இரண்டு பிஸ்கட்டை என் மனைவி (இன்ஸ்பெக்டர் )பிரபாவிடம் நீட்டினான்.
பிரபா என்னைப் பார்த்தாள் . எனக்கு லேசாக பொறி தட்டியது. ஒரு வேலை அந்த
"எலி" இவனாக இருப்பானோ ? !
நான் பிரபாவிடம் " தம்பி ஆசையாக தருகிறார் , வாங்கி சாப்பிடு " - நான் கூறிய
விதத்தை புரிந்து கொண்டு , தைரியமாக அவனிடம் பிஸ்கட்டை வாங்கி சாப்பிட்டாள்.
நான் , ' தம்பிக்கு நாம் செய்த ஸ்பெஷல் அல்வாவைக் கொடு "- என்றேன் .
முதலில் வாங்க தயங்கிய அவனிடம் , தைரியமா வாங்கி சாப்பிடு தம்பி , இது நாங்க வீட்டில்
செய்தது . ஒரிஜினல் ஊத்துக்குளி நெய் ."- என்றதும் அல்வாவை சாப்பிட்டான் .
எனக்கும் இரண்டு பிஸ்கட் கொடுத்தான்.
வண்டி சேலத்தை அடைந்தது. பிரபா தனக்கு தூக்கம் வருவதாகச் சொல்லி
பர்த்தில் படுத்து விட்டாள்.
நான் அந்த வாலிபனிடம் ," தம்பி , இந்த பாட்டிலில் கொஞ்சம் தண்ணீர்
பிடித்து வருகிறாயா ?"- என்றேன் .
அவன் கிழே இறங்கியதும் , அவன் என்னிடம் கொடுத்த பிஸ்கட் -ஐ பையின்
உள்ளே வைத்துவிட்டு பிஸ்கட் -ஐ சாப்பிட்டது மாதிரி நடித்தேன் .
வண்டி சேலத்தை விட்டு புறப்பட்டது. நான் தண்ணீர் குடித்து விட்டு , மேல்
பர்த்தில் படுத்து தூங்குவது போல நடித்தேன்.
கால் மணி நேரம் சென்று இருக்கும்.
அந்த பெட்டியில் இருந்த அனைவரும் தூங்க ஆரம்பித்தனர்.
நான் நினைத்தபடியே , அவன் எழுந்தான். பிரபாவை நெருங்கி , ஒவ்வொரு நகையாக
கழட்ட ஆரம்பித்தான்.
பிரபாவிடம் சிறிதும் சலனமில்லை . பிஸ்கட் வேலை செய்து இருக்க வேண்டும் .
என்னையும் அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டான் .
பிறகு எல்லா நகைகளையும் அவனுடைய பையில் வைத்து விட்டு திரும்பியவன் ,
தள்ளாடியபடியே கீழே சுருண்டு விழுந்தான் .
நாங்கள் கொடுத்த அல்வா வேலை செய்கிறது போலும் .
நான் கொடுத்த செல் தகவல் மூலம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் , ரயில்வே
போலீஸ் காத்திருந்தது.
பிரபாவிற்கு மயக்கம் தெளிவித்து , மறுநாள் காலை , வாணியம்பாடியிலிருந்து
கோவைக்கு காரில் வந்து சேர்ந்தோம் .
எல்லா நாளிதழ்களிலும் , முதல் பக்கத்தில் , நானும் ,பிரபாவும் உள்ள போட்டோவும்
, எங்களின் சாகச செய்தியும் தான் .!
---------------------------------------------------- Download As PDF
-----------------------------------------
மேலிடத்திலிருந்து ஏக பிரஷர் . போன மாதத்தில் மட்டும் நான்கு தடவை
ரயில்வே கொள்ளை.
எங்களுக்கு கிடைத்த க்ளு இவை தான் . " கொள்ளை அடிப்பவன் சுமார் 25 - லிருந்து
30 -வயதுக்குள் இருப்பான். எல்லாக் கொள்ளையிலுமே பிஸ்கட் கொடுத்து தான்
மயக்க வைத்து , நகை, பணம் திருடி இருக்கிறான். இரவு நேரத்தில் மட்டுமே தன் கை
வரிசையைக் காட்டுகிறான்.
நானும் , என் மனைவியாக நடித்த இன்ஸ்பெக்டர் பிரபாவும் கோவை டு சென்னை
மற்றும் சென்னை டு கோவை ஐந்து முறை பயணம் செய்தாகி விட்டது. "எலி "அகப்படவில்லை.
எங்கள் எஸ். பி. யும் , " வேறு ஏதாவது வழி இருக்கிறதா , பாருங்கள்" - என்றார்.
" சார், இந்த ஒரு முறை கடைசி தடவையாக இருக்கட்டும் . பிறகு வேறு வழி யோசிப்போம்."
என்றேன் . வேண்டா வெறுப்பாக " சரி போங்கள் "- என்றார் , எஸ். பி.
டிக்கெட் ஏற்கனவே ரிசர்வ் செய்யப்பட்டிருந்த பெட்டிக்கு வெளியே , வழக்கத்திற்கு
மாறாக அரை மணி முன்னதாக சென்று பிளாட்பாரத்தில் காத்திருந்தோம் .
இன்ஸ்பெக்டர் பிரபாவும் அன்று மிக அதிகமாக நகைகள் அணிந்திருந்தார் .
கோவை எக்ஸ்பிரஸ் , திருப்பூரை அடைந்தது . டிப்- டாப்பான வாலிபன் ஒருவன்
கையில் சூட் கேசுடன் ஒவ்வொரு பெட்டியாக பார்த்துக்கொண்டே வந்து ,எங்கள்
பெட்டியில் ஏறினான் . மணி இரவு 8 /30 .
எங்களைப் பார்த்து லேசாக சிரித்தபடியே " நான் அவசரமாக சென்னை செல்ல வேண்டும் ,
டிக்கெட் வேறு எடுக்கவில்லை ." -என்றான் .
டி. டி . ஆர் . வந்தவுடன் அவரிடம் விசயத்தைச் சொல்லி , டிக்கெட்டும் வாங்கிக் கொண்டான் .
இரவு 10 -00 மணி . நான் வார இதழில் மூழ்கியிருந்தேன் . பிரபாவிடம் ஓரிரு
வார்த்தை பேசியவன் , தன் பையிலிருந்து பிஸ்கட் பாக்கெட்டை எடுத்தான் .
வண்டி ஈரோட்டை தாண்டியிருந்தது .
இரண்டு பிஸ்கட் சாப்பிட்டவுடன் , இரண்டு பிஸ்கட்டை என் மனைவி (இன்ஸ்பெக்டர் )பிரபாவிடம் நீட்டினான்.
பிரபா என்னைப் பார்த்தாள் . எனக்கு லேசாக பொறி தட்டியது. ஒரு வேலை அந்த
"எலி" இவனாக இருப்பானோ ? !
நான் பிரபாவிடம் " தம்பி ஆசையாக தருகிறார் , வாங்கி சாப்பிடு " - நான் கூறிய
விதத்தை புரிந்து கொண்டு , தைரியமாக அவனிடம் பிஸ்கட்டை வாங்கி சாப்பிட்டாள்.
நான் , ' தம்பிக்கு நாம் செய்த ஸ்பெஷல் அல்வாவைக் கொடு "- என்றேன் .
முதலில் வாங்க தயங்கிய அவனிடம் , தைரியமா வாங்கி சாப்பிடு தம்பி , இது நாங்க வீட்டில்
செய்தது . ஒரிஜினல் ஊத்துக்குளி நெய் ."- என்றதும் அல்வாவை சாப்பிட்டான் .
எனக்கும் இரண்டு பிஸ்கட் கொடுத்தான்.
வண்டி சேலத்தை அடைந்தது. பிரபா தனக்கு தூக்கம் வருவதாகச் சொல்லி
பர்த்தில் படுத்து விட்டாள்.
நான் அந்த வாலிபனிடம் ," தம்பி , இந்த பாட்டிலில் கொஞ்சம் தண்ணீர்
பிடித்து வருகிறாயா ?"- என்றேன் .
அவன் கிழே இறங்கியதும் , அவன் என்னிடம் கொடுத்த பிஸ்கட் -ஐ பையின்
உள்ளே வைத்துவிட்டு பிஸ்கட் -ஐ சாப்பிட்டது மாதிரி நடித்தேன் .
வண்டி சேலத்தை விட்டு புறப்பட்டது. நான் தண்ணீர் குடித்து விட்டு , மேல்
பர்த்தில் படுத்து தூங்குவது போல நடித்தேன்.
கால் மணி நேரம் சென்று இருக்கும்.
அந்த பெட்டியில் இருந்த அனைவரும் தூங்க ஆரம்பித்தனர்.
நான் நினைத்தபடியே , அவன் எழுந்தான். பிரபாவை நெருங்கி , ஒவ்வொரு நகையாக
கழட்ட ஆரம்பித்தான்.
பிரபாவிடம் சிறிதும் சலனமில்லை . பிஸ்கட் வேலை செய்து இருக்க வேண்டும் .
என்னையும் அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டான் .
பிறகு எல்லா நகைகளையும் அவனுடைய பையில் வைத்து விட்டு திரும்பியவன் ,
தள்ளாடியபடியே கீழே சுருண்டு விழுந்தான் .
நாங்கள் கொடுத்த அல்வா வேலை செய்கிறது போலும் .
நான் கொடுத்த செல் தகவல் மூலம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் , ரயில்வே
போலீஸ் காத்திருந்தது.
பிரபாவிற்கு மயக்கம் தெளிவித்து , மறுநாள் காலை , வாணியம்பாடியிலிருந்து
கோவைக்கு காரில் வந்து சேர்ந்தோம் .
எல்லா நாளிதழ்களிலும் , முதல் பக்கத்தில் , நானும் ,பிரபாவும் உள்ள போட்டோவும்
, எங்களின் சாகச செய்தியும் தான் .!
---------------------------------------------------- Download As PDF
PORUTHTHAM
பொருத்தம் ( முத்து ரத்தினம் )
- --------------------
வரும் ஐப்பசியில் என் மூத்த மகனுக்கு கல்யாணம் .
ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே அழைப்பிதல் கொடுக்க ஆரம்பித்து விட்டேன் .
யார் யாருக்கு கொடுக்க வேண்டும் என பட்டியல் போட்டு , நானும் என் மனைவியும்
தனித்தனியாகவும் , சேர்ந்தும் செல்ல வேண்டிய இடங்களுக்கு சேர்ந்தும் சென்று
பத்திரிக்கை கொடுத்து வந்தோம் .
பட்டியலில் என் விருப்பத்திற்கு ஒரு முக்கியமான நபரை , கல்யாணத்திற்கு
கூப்பிடலாம் என என் மனைவிடம் கேட்டேன் .அவர் வேறு யாருமல்ல .!
என் முன்னாள் தெய்வீக காதலி அமுதா !.
என் மனைவிக்கும் இது தெரியும் . பள்ளியில் என் மனைவிக்கு ஒரு வருட சீனியர் .
இங்கு நான் தெய்வீகம் என குறிப்பிடுவது எதனால் என்றால் , இந்த காலம் போல்
கண்டதும் காதல் , மறுநாள் டேடிங் என்பதெல்லாம் அந்த காலத்தில் இல்லை .!
நான் என் காதலியை தொட்டது கூட கிடையாது .
பேசுவதே இரண்டடி தள்ளி நின்று தான் பேசுவோம் .
அப்போது கூட , அமுதாவின் அக்காக்கள் இருவரில் யாரோ ஒருவர் உடன் இருப்பார்கள் .
என்னடா , காதலித்தவளை விட்டு விட்டு மாமன் மகளை கல்யாணம் செய்து கொண்டானே
என அமுதா கலங்கவில்லை .
உள்ளுக்குள் வருத்தமிருந்தாலும் , அதை வெளிக்காட்டவில்லை .!
எப்போது ஊருக்கு வந்தாலும் வீட்டுக்கு வந்து , நலம் விசாரித்து விட்டு போவாள் .
கடந்த நாலைந்து வருடங்களாக ஊர் பக்கம் வருவதில்லை .
தற்போது அமுதா ஓமலூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாக
கேள்விப்பட்டு , அவள் அக்காவிடம் முகவரி வாங்கி வைத்திருந்தேன் .
ஒரு ஞாயிற்றுக்கிழமை நானும், என் மனைவியும் காலை ஓமலுருக்கு
கிளம்பத் தயாரானோம் .
வாசலை அடைந்து கதவைப் பூட்டிக் கொண்டிருந்தாள் என் மனைவி .
அப்போது வாசலருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது .
ஆட்டோவிலிருந்து அமுதா இறங்கி வந்து கொண்டிருந்தாள் . எங்களுக்கோ
சொல்ல முடியாத ஆச்சரியம் !
" அக்கா , இப்பதான் உங்க வீட்டிற்கு வருவதற்கு கிளம்புகிறோம் , அதற்குள்
நீங்களே வந்து விட்டீர்கள் !-" என என் மனைவி அமுதாவை வரவேற்று
வீட்டிற்குள் அழைத்துப் போனாள்.
" ரொம்ப நாளைக்குப் பிறகு அமுதாவைப் பார்க்கிறேன்.
அமுதாவிற்கு முதுமை கூடியிருந்தது . அவளுக்கும் இரண்டு குழந்தைகள் .
தான் கொண்டு வந்திருந்த கைப் பையில் இருந்து ஒரு அழைப்பிதழை எடுத்து
என்னிடம் நீட்டி " ஐப்பசி மாசம் 14 - ம தேதி என் மூத்த மகளுக்கு கல்யாணம் .
நீங்கள் இருவரும் அவசியம் வர வேண்டும் .
என்ன ஒற்றுமை ! அதே நாளில் தான் என் பையனுக்கும் கல்யாணம் !
என் மனைவி அதை அமுதாவிடம் சொல்லிய போது , " ரொம்ப சந்தோசம் ,
அதனாலென்ன என் மகளுக்கு கல்யாணம் முடிந்தவுடன் ஒரு நாள் என் மகளையும் ,
மருமகனையும் அழைத்து வருகிறேன் , அப்பா நான் வரட்டுமா ?
மனதில் வருத்தமிருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் புன்னகையுடன்
புறப்பட்டாள் , அமுதா .
----------------------------------------------------------------------- Download As PDF
- --------------------
வரும் ஐப்பசியில் என் மூத்த மகனுக்கு கல்யாணம் .
ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே அழைப்பிதல் கொடுக்க ஆரம்பித்து விட்டேன் .
யார் யாருக்கு கொடுக்க வேண்டும் என பட்டியல் போட்டு , நானும் என் மனைவியும்
தனித்தனியாகவும் , சேர்ந்தும் செல்ல வேண்டிய இடங்களுக்கு சேர்ந்தும் சென்று
பத்திரிக்கை கொடுத்து வந்தோம் .
பட்டியலில் என் விருப்பத்திற்கு ஒரு முக்கியமான நபரை , கல்யாணத்திற்கு
கூப்பிடலாம் என என் மனைவிடம் கேட்டேன் .அவர் வேறு யாருமல்ல .!
என் முன்னாள் தெய்வீக காதலி அமுதா !.
என் மனைவிக்கும் இது தெரியும் . பள்ளியில் என் மனைவிக்கு ஒரு வருட சீனியர் .
இங்கு நான் தெய்வீகம் என குறிப்பிடுவது எதனால் என்றால் , இந்த காலம் போல்
கண்டதும் காதல் , மறுநாள் டேடிங் என்பதெல்லாம் அந்த காலத்தில் இல்லை .!
நான் என் காதலியை தொட்டது கூட கிடையாது .
பேசுவதே இரண்டடி தள்ளி நின்று தான் பேசுவோம் .
அப்போது கூட , அமுதாவின் அக்காக்கள் இருவரில் யாரோ ஒருவர் உடன் இருப்பார்கள் .
என்னடா , காதலித்தவளை விட்டு விட்டு மாமன் மகளை கல்யாணம் செய்து கொண்டானே
என அமுதா கலங்கவில்லை .
உள்ளுக்குள் வருத்தமிருந்தாலும் , அதை வெளிக்காட்டவில்லை .!
எப்போது ஊருக்கு வந்தாலும் வீட்டுக்கு வந்து , நலம் விசாரித்து விட்டு போவாள் .
கடந்த நாலைந்து வருடங்களாக ஊர் பக்கம் வருவதில்லை .
தற்போது அமுதா ஓமலூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாக
கேள்விப்பட்டு , அவள் அக்காவிடம் முகவரி வாங்கி வைத்திருந்தேன் .
ஒரு ஞாயிற்றுக்கிழமை நானும், என் மனைவியும் காலை ஓமலுருக்கு
கிளம்பத் தயாரானோம் .
வாசலை அடைந்து கதவைப் பூட்டிக் கொண்டிருந்தாள் என் மனைவி .
அப்போது வாசலருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது .
ஆட்டோவிலிருந்து அமுதா இறங்கி வந்து கொண்டிருந்தாள் . எங்களுக்கோ
சொல்ல முடியாத ஆச்சரியம் !
" அக்கா , இப்பதான் உங்க வீட்டிற்கு வருவதற்கு கிளம்புகிறோம் , அதற்குள்
நீங்களே வந்து விட்டீர்கள் !-" என என் மனைவி அமுதாவை வரவேற்று
வீட்டிற்குள் அழைத்துப் போனாள்.
" ரொம்ப நாளைக்குப் பிறகு அமுதாவைப் பார்க்கிறேன்.
அமுதாவிற்கு முதுமை கூடியிருந்தது . அவளுக்கும் இரண்டு குழந்தைகள் .
தான் கொண்டு வந்திருந்த கைப் பையில் இருந்து ஒரு அழைப்பிதழை எடுத்து
என்னிடம் நீட்டி " ஐப்பசி மாசம் 14 - ம தேதி என் மூத்த மகளுக்கு கல்யாணம் .
நீங்கள் இருவரும் அவசியம் வர வேண்டும் .
என்ன ஒற்றுமை ! அதே நாளில் தான் என் பையனுக்கும் கல்யாணம் !
என் மனைவி அதை அமுதாவிடம் சொல்லிய போது , " ரொம்ப சந்தோசம் ,
அதனாலென்ன என் மகளுக்கு கல்யாணம் முடிந்தவுடன் ஒரு நாள் என் மகளையும் ,
மருமகனையும் அழைத்து வருகிறேன் , அப்பா நான் வரட்டுமா ?
மனதில் வருத்தமிருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் புன்னகையுடன்
புறப்பட்டாள் , அமுதா .
----------------------------------------------------------------------- Download As PDF
மனித நேயம்
---------------------------
1945 -ம ஆண்டு .
ஜப்பானின் வரலாற்றில் மறக்கமுடியாத ஆண்டு .
இரண்டாம் உலகப்போரின் முடிவில் அமெரிக்க நாடானது , ஜப்பானை அடி பணிய வைக்க சீனா , மற்றும் uk நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து , ஜப்பானின் ஹிரோஷிமா , மற்றும் நாகசாகி நகரங்களின் மேல் அணுகுண்டு வீசி தாக்கியது .
அணுகுண்டு வீச்சால் ஏற்பட்ட பாதிப்பு மனித வரலாற்றில் மிகவும் மறக்க முடியாத வடு ஆகி விட்டது . உலக மக்கள் அனைவரும் கண்ணீர் சிந்தினர் .
ஆகஸ்ட் , 6 , 1945 , மற்றும் ஆகஸ்ட் 9 , 1945 ,-ம ஆண்டு இருமுறை ஹிரோஷிமா நாகசாகி நகரங்களை அணுகுண்டு தாக்கியது .
ஹிரோஷிமாவை தாக்கிய அணுகுண்டு " லிட்டில் பாய் "- நாகசாகியை தாக்கிய அணுகுண்டு "fat man" -
இதனால் ஹிரோஷிமாவின் மக்கள் தொகை இழப்பு -90000 -லிருந்து 166000 வரையிலும் ,
நாகசாகியின் மக்கள் தொகை இழப்பு - 60000 -லிருந்து 80000 வரையிலும் என கணக்கிடப்பட்டுள்ளது .
அணுவின் கதிர் வீச்சால் பின்னால் ஏற்பட்ட பாதிப்பு வேதனைக்குரியது .
கான்சர் ,மற்றும் லுக்கும்யா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் .
இவ்வளவு பாதிப்புகள் இருந்தும் , அத்தனைக்கும் ஈடு கொடுத்து , குறுகிய
காலத்தில் , தன் உழைப்பால் உலக நாடுகளின் பார்வையை தன் பக்கம் திருப்பியது ஜப்பான் .
அதி நவீன எலக்ட்ரிகல் , எலக்ரானிக் பொருட்களில் நம்பர் ஒன் -ஆக விளங்கியது ,ஜப்பான் .
அது மட்டுமல்ல , உலக நாடுகளில் மோட்டார் உற்பத்தியில் முதல் தரமாக விளங்கி வந்தது .
இன்று இரண்டாம் உலகப் போருக்குப்பின் இயற்கையின் சீற்றத்தால் சுனாமி ,
மற்றும் நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு , 1945 -ம ஆண்டைப் போலவே 2011 - ம் ஆண்டும்
ஜப்பானுக்கு சோதனையான ஆண்டாக மாறிப் போனது .
பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது ,.
சுனாமி , பத்து மீட்டருக்கும் உயரத்தில் அலைகள் மூலம் தன் சீற்றத்தை காண்பித்து ஜப்பானை அழித்தது.
நில அதிர்வும் 8 .9 ரிக்டர் ( magnitude ) அளவில் பாதித்து அழிவை ஏற்படுத்தியது .
அது மட்டுமல்ல ! இச் சீற்றத்தில் ஜப்பானிலுள்ள மிக முக்கிய அணு உலைகளில ஏற்பட்ட கசிவால் , மூன்று இலச்சத்திற்கும் அதிகமான மக்கள் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டனர் .
இங்கு நாம் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயம் ,
இரண்டாம் உலகப் போரில் எந்தெந்த நடுகல் ஜப்பானின் மீது விரோதம்
கொண்டு , அணுகுண்டு வீச்சால் ,ஜப்பான் மக்களை அழித்ததோ,
அதே நாடுகளான சீனா , அமெரிக்கா, மற்றும் uk ஆகியவை ,
தங்கள் பங்காக பாதுகாப்பாக ராணுவ வீரர்களையும், உபகரணங்களையும்
மற்றும் அணு உலைகளில் ரியாக்டர் (reactor ) மூலம் ஏற்பட்ட வெப்பத்தை தணிக்க கூலன்ட்களை ( coolant ) அனுப்பி உதவி செய்தது ,.
உணவு ,மற்றும் போர்வைகளையும் அனுப்பி வைத்தது .
இதில் ஆப்கானிஸ்தானும் தன் பங்குக்கு $ 50000 அனுப்பியது .
மனித நேயம் இன்னும் உயிரோடு தான் உள்ளது .
விரைவில் ஜப்பான் தலை நிமிர்ந்து நிற்கும் ! சந்தேகமில்லை .! Download As PDF
---------------------------
1945 -ம ஆண்டு .
ஜப்பானின் வரலாற்றில் மறக்கமுடியாத ஆண்டு .
இரண்டாம் உலகப்போரின் முடிவில் அமெரிக்க நாடானது , ஜப்பானை அடி பணிய வைக்க சீனா , மற்றும் uk நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து , ஜப்பானின் ஹிரோஷிமா , மற்றும் நாகசாகி நகரங்களின் மேல் அணுகுண்டு வீசி தாக்கியது .
அணுகுண்டு வீச்சால் ஏற்பட்ட பாதிப்பு மனித வரலாற்றில் மிகவும் மறக்க முடியாத வடு ஆகி விட்டது . உலக மக்கள் அனைவரும் கண்ணீர் சிந்தினர் .
ஆகஸ்ட் , 6 , 1945 , மற்றும் ஆகஸ்ட் 9 , 1945 ,-ம ஆண்டு இருமுறை ஹிரோஷிமா நாகசாகி நகரங்களை அணுகுண்டு தாக்கியது .
ஹிரோஷிமாவை தாக்கிய அணுகுண்டு " லிட்டில் பாய் "- நாகசாகியை தாக்கிய அணுகுண்டு "fat man" -
இதனால் ஹிரோஷிமாவின் மக்கள் தொகை இழப்பு -90000 -லிருந்து 166000 வரையிலும் ,
நாகசாகியின் மக்கள் தொகை இழப்பு - 60000 -லிருந்து 80000 வரையிலும் என கணக்கிடப்பட்டுள்ளது .
அணுவின் கதிர் வீச்சால் பின்னால் ஏற்பட்ட பாதிப்பு வேதனைக்குரியது .
கான்சர் ,மற்றும் லுக்கும்யா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் .
இவ்வளவு பாதிப்புகள் இருந்தும் , அத்தனைக்கும் ஈடு கொடுத்து , குறுகிய
காலத்தில் , தன் உழைப்பால் உலக நாடுகளின் பார்வையை தன் பக்கம் திருப்பியது ஜப்பான் .
அதி நவீன எலக்ட்ரிகல் , எலக்ரானிக் பொருட்களில் நம்பர் ஒன் -ஆக விளங்கியது ,ஜப்பான் .
அது மட்டுமல்ல , உலக நாடுகளில் மோட்டார் உற்பத்தியில் முதல் தரமாக விளங்கி வந்தது .
இன்று இரண்டாம் உலகப் போருக்குப்பின் இயற்கையின் சீற்றத்தால் சுனாமி ,
மற்றும் நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு , 1945 -ம ஆண்டைப் போலவே 2011 - ம் ஆண்டும்
ஜப்பானுக்கு சோதனையான ஆண்டாக மாறிப் போனது .
பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது ,.
சுனாமி , பத்து மீட்டருக்கும் உயரத்தில் அலைகள் மூலம் தன் சீற்றத்தை காண்பித்து ஜப்பானை அழித்தது.
நில அதிர்வும் 8 .9 ரிக்டர் ( magnitude ) அளவில் பாதித்து அழிவை ஏற்படுத்தியது .
அது மட்டுமல்ல ! இச் சீற்றத்தில் ஜப்பானிலுள்ள மிக முக்கிய அணு உலைகளில ஏற்பட்ட கசிவால் , மூன்று இலச்சத்திற்கும் அதிகமான மக்கள் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டனர் .
இங்கு நாம் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயம் ,
இரண்டாம் உலகப் போரில் எந்தெந்த நடுகல் ஜப்பானின் மீது விரோதம்
கொண்டு , அணுகுண்டு வீச்சால் ,ஜப்பான் மக்களை அழித்ததோ,
அதே நாடுகளான சீனா , அமெரிக்கா, மற்றும் uk ஆகியவை ,
தங்கள் பங்காக பாதுகாப்பாக ராணுவ வீரர்களையும், உபகரணங்களையும்
மற்றும் அணு உலைகளில் ரியாக்டர் (reactor ) மூலம் ஏற்பட்ட வெப்பத்தை தணிக்க கூலன்ட்களை ( coolant ) அனுப்பி உதவி செய்தது ,.
உணவு ,மற்றும் போர்வைகளையும் அனுப்பி வைத்தது .
இதில் ஆப்கானிஸ்தானும் தன் பங்குக்கு $ 50000 அனுப்பியது .
மனித நேயம் இன்னும் உயிரோடு தான் உள்ளது .
விரைவில் ஜப்பான் தலை நிமிர்ந்து நிற்கும் ! சந்தேகமில்லை .! Download As PDF
IRANDIL ONTRU
இரண்டில் ஒன்று .
-----------------------------
விழி இரண்டு , பார்வை ஒன்று
இதயம் இரண்டு ,காதல் ஒன்று
இதழ் இரண்டு, புன்னகை ஒன்று
மனசு இரண்டு , திருமணம் ஒன்று
செவி இரண்டு , கேட்பது ஒன்று
மனித ஜாதி இரண்டு, ஆதிக்கம் ஒன்று
கை இரண்டு , உழைப்பு ஒன்று
இரவு பகல் இரண்டு, நாள் ஒன்று
கால் இரண்டு , போகுமிடம் ஒன்று
காலம் இரண்டு , முக்தி ஒன்று
நாசி இரண்டு , சுவாசம் ஒன்று
உடல் இரண்டு , கரு ஒன்று
நாம் இரண்டு , நமக்கு ஒன்று
அதுவே நாட்டுக்கு நன்று !
Download As PDF
ENI ORU SUTHANTHIRAM
இனி ஒரு சுதந்திரம் .
-------------------------------------
வீட்டுக்கு வீடு இலவச டீவி பார்!
சீரியல் பார்த்து சீர் கெட்ட மாந்தர்
மாலை களைப்புடன் வீடு வரும் பதிக்கு
கெட்ட சினிமா பல கண்டு மோகம்
தலைக்கேறி , கலைச் சேவை நான் புரிய ,
ரயிலேறி சென்னைக்கு உடன் புறப்பட்டேன் தனியே !
வயது பதினாறு, வழி தவறி வந்து விட்டேன் ,.
சென்ட்ரலுக்கு வந்து சேர்ந்து விட்ட எனக்கு ,
ஜெமினிக்கு வர வழி தெரிய வில்லை !
என்னே கொடுமை ! நான் நிற்பதோ முட்டுச்சந்து ,
என்னைச் சுற்றி நால்வர் , நானோ கால்பந்து !
நிலை தடுமாறி நின்றேன் ,யார் தருவார் அபயம் ?
போதை தடுமாறி நின்ற காமுகர் ,டாஸ்மாக் உபயம் !
பெண் தனியே சுதந்திரமாய் வருவது எப்போது ?
காந்தி வாங்கிய சுதந்திரம் எங்கே தேடுவேன் ?
இனி ஒரு சுதந்திரம் யார் தருவார் ? Download As PDF
-------------------------------------
வீட்டுக்கு வீடு இலவச டீவி பார்!
சீரியல் பார்த்து சீர் கெட்ட மாந்தர்
மாலை களைப்புடன் வீடு வரும் பதிக்கு
கெட்ட சினிமா பல கண்டு மோகம்
தலைக்கேறி , கலைச் சேவை நான் புரிய ,
ரயிலேறி சென்னைக்கு உடன் புறப்பட்டேன் தனியே !
வயது பதினாறு, வழி தவறி வந்து விட்டேன் ,.
சென்ட்ரலுக்கு வந்து சேர்ந்து விட்ட எனக்கு ,
ஜெமினிக்கு வர வழி தெரிய வில்லை !
என்னே கொடுமை ! நான் நிற்பதோ முட்டுச்சந்து ,
என்னைச் சுற்றி நால்வர் , நானோ கால்பந்து !
நிலை தடுமாறி நின்றேன் ,யார் தருவார் அபயம் ?
போதை தடுமாறி நின்ற காமுகர் ,டாஸ்மாக் உபயம் !
பெண் தனியே சுதந்திரமாய் வருவது எப்போது ?
காந்தி வாங்கிய சுதந்திரம் எங்கே தேடுவேன் ?
இனி ஒரு சுதந்திரம் யார் தருவார் ? Download As PDF
Subscribe to:
Posts (Atom)